மலையகத்தில் மாடன் வழிபாட்டுச் சடங்குகளும், மாடன் திருவிழாவும்
26 நிமிட வாசிப்பு
வழிபாடுகள் ஒவ்வொரு சமூகக் குழுக்களுக்குமான அடையாளங்களாகவும், அவற்றின் பண்பாட்டின் மிக முக்கிய கூறுகளாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான வழிபாடுகள் காலம் காலமாக அச்சமூகத்தின் வாழ்வியலோடு நீண்டு நிலைபெற்று வாழுவனவாகவும் உள்ளன. இவற்றின் நீட்சி என்பது இலகுவானதல்ல; அது அச்சமூகம் கட்டமைத்துக் கொண்டுள்ள பொறிமுறையின் விளைவாகும். இவை வெறுமனே வழிபாடுகளாக மட்டும் அமையாமல், அவ்வழிபாடுகளை ஆற்றுகைகளோடு இணைத்து நிகழ்த்தும் முறையாகவும் பல்வேறு இனக்குழுக்களிடையே உள்ளன. அந்த வகையில், மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் […]
மேலும் பார்க்க
ஆங்கிலேயர் ஆட்சியின் அந்திப்பொழுது
16 நிமிட வாசிப்பு
முரண்பாடு முற்றிய முப்பதுகள் பதினேழாம் நூற்றாண்டில் மெதுவாக எழத் தொடங்கிய ஆங்கிலேயர் காலனியம் 20ஆம் நூற்றாண்டு உதயமாகிய போது உச்சநிலையடைந்த பேரரசாக உருவாகி, உலக ஆதிக்கம் பெற்றது. அப்பொழுது அது ஒருபோதும் அழியாது என்றென்றும் நிலைக்கும் தன்மை உடையது போன்று காணப்பட்டது. எழுச்சி, வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி என்பவை வரலாற்றின் போக்கு. இதிலிருந்து எந்தப் பேரரசும் தப்பிக்கொள்ள முடியாது. ஆங்கிலேயப் பேரரசு 1930களில் தன் வாழ்க்கையின் அந்திப்பொழுதை அடைந்தது. இருபது […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – வரணி
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பிலுள்ள தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் தென்மராட்சியின் இன்னொரு கோவிற்பற்றான வரணி தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். வரணிக் கோவிற்பற்று வரணி, குடமியான், தாவளை-இயற்றாலை, மந்துவில், வரணி-இயற்றாலை ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நிலப்படத்தில் காணமுடிகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி வரணிக் கோவிற்பற்றின் […]
மேலும் பார்க்க
அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 1
21 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க அறிமுகம் ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க (Rohan Edirisinghe) அவர்கள் ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பை 1972, 1978 ஆகிய இருதடவைகளில் திருத்தம் செய்தபோது, தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கைகளின் (Liberal Democratic Principles) அடிப்படையிலான அரசியல் யாப்புவாதத் தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. இதன் பின்விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் […]
மேலும் பார்க்க
இறையாண்மை இல்லாத பிரதேசம்: நிலம் எனும் களத்திலே – பகுதி 2
29 நிமிட வாசிப்பு
மீள்குடியேற்றம்: மீட்சி இல்லாத உள்ளடக்கல் மீள்குடியேற்றம் என்பது பெரும்பாலும் இடப்பெயர்வின் தார்மீக, அரசியல் ரீதியான முடிவாக முன்வைக்கப்படுகிறது. கொள்கை விவாதத்தில், இது வேரோடு பிடுங்கப்பட்டவர்கள் தங்கள் உரிமையான இடத்திற்குத் திரும்பும் தருணத்தைக் குறிக்கிறது. இது மீட்சி, இயல்புநிலை, வாழ்வின் மீட்சிக்கு ஒரு சமிக்ஞையாக அமைகிறது. இலங்கையில், 2009க்குப் பிந்தைய மீள்குடியேற்றம் துல்லியமாக இதே சொற்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதாபிமான, அபிவிருத்தி வெற்றியாகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் கட்டியெழுப்பி […]
மேலும் பார்க்க
இறையாண்மை இல்லாத பிரதேசம்: நிலம் எனும் களத்திலே – பகுதி 1
44 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்த காலம் பெரும்பாலும் ஒரு காலப்பிளவாக – வன்முறைக்கும் அமைதிக்கும், அழிவுக்கும் புனரமைப்புக்கும், மோதலுக்கும் மீட்சிக்கும் இடையிலான ஒரு தீர்க்கமான முறிவாக – விவரிக்கப்படுகிறது. ஆயினும், இத்தகைய விவரிப்புகள் போருக்குப் பிந்தைய நிலையின் ஒரு முக்கியமான பரிமாணத்தை மறைக்கின்றன. அதாவது, வெளியின் வழியாகப் போர் எவ்வாறு நிகழ்காலத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கிறது என்பதே அந்தப் பரிமாணம். வடக்குக் கிழக்கின் நிலப்பரப்புகள் […]
மேலும் பார்க்க
கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 2
19 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க உற்பத்தி மேன்மிகையின் சுரண்டல் மாதிரிகள் கண்டியின் நிலமானிய முறையில் நெல் உற்பத்தி பிரதான இடத்தைப் பெற்றது. காணிகளின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்களின் காணிகளைப் பயிரிடும் குடியான் விவசாயிகளின் உழைப்பின் மேன்மிகை (Surplus) ஆறு வடிவங்களில் அறவிடப்பட்டது. மேன்மிகையினை அறவிடும் இந்த வடிவங்களை நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகள் (Patterns of Surplus Extraction) என்ற தொடரால் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு மாதிரிகள் […]
மேலும் பார்க்க
உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 2
74 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார “இந்த நாட்டிலும் கூட நீதித்துறையானது, வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, சந்தர்ப்பம் தேவைப்படும் போதெல்லாம், முறையான சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஒரு துடிப்பானதும் வலுவானதுமான தனது அணுகுமுறையை வெளிப்படுத்த முடியும்.” என்ற, கடந்த இதழில் வெளியான இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளின் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் பகுதி 2 இனைத் தொடர்ந்து வாசிக்கலாம். […]
மேலும் பார்க்க
இலங்கையில் தமிழர்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு
18 நிமிட வாசிப்பு
இலங்கையின் வடக்குப் பகுதியில் கண்ணகி வழிபாடு கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த விழாவில் கலந்துகொண்ட இலங்கை வேந்தன் கயபாகு மீளும் போது ஜம்புகோளப்பட்டினம் என்ற சம்பில் துறையிலே வந்திறங்கினான் என்று கருதப்படுகின்றது. கயபாகு வேந்தன் கந்தரோடையிலுள்ள அங்கணாமக்கடவையில் பத்தினிக்குக் கோயில் அமைத்துத் தனது உருவச் சிலையையும் கோயில் முன்றலில் நிறுவியிருக்கலாம் என்பர்.1 அடையாளம் காணமுடியாத நிலையிலுள்ள அங்கணாமைக்கடவைக் கண்ணகி கோவில் கந்தரோடையிலுள்ள கதிரமலைக்கு அருகாமையில் இருந்ததாக இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.2 […]
மேலும் பார்க்க
1990களின் பின்னர் மலையகத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் மற்றும் பண்பாடுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
10 நிமிட வாசிப்பு
முன்னர் மலையக மக்களின் கல்வி வளர்ச்சி குறித்து மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 1990களுக்குப் பின்னரான காலப்பகுதியில் மலையகக் கல்வி வளர்ச்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதன் விளைவாக உருவான சமூகத் தாக்கங்களையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. அத்துடன், மலையக மக்களின் மரபு ரீதியான தொழில்களிலும், அவர்களது தனித்துவமான பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இக்கட்டுரை விரிவாக விளக்குகின்றது. தேசிய கல்வி முறைக்குள் உள்வாங்கப்பட்ட மலையகத் […]
மேலும் பார்க்க