Past Events from October 16, 2024 – June 6 – Ezhuna | எழுநா

“யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” ஆவணப்படத் திரையிடல் – கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்

கே.ஏ.எஸ். சத்தியமனை Sathiamanai Tholpuram West, Chulipuram 40230, Jaffna, Northern Province, Sri Lanka

எழுநாவின் தயாரிப்பில் வெளிவந்த 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்க திரவம்' என்ற ஆவணப்படமானது சுழிபுரத்தில் உள்ள கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில், கடந்த 06.06. 2025 அன்று, வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் திரையிடப்பட்டது. இத்திரையிடல் நிகழ்வில் மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் […]

‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621-1948)’ நூல் வெளியீட்டு விழா – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

University of Jaffna Post Box 57, Ramanathan Road Thirunelvely, Jaffna, Northern, Sri Lanka

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநா இணைந்து நடாத்திய, இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் எழுதிய யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948 ) என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூன் மாதம் 4 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயம்

VA/Puthukkulam Maha Vidyalayam Palampiddi - Thandikulam Rd, Vavuniya, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, 28.05.2025 அன்று, பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். திரையிடலின் பின்னர் குறித்த மாணவர்களுடன் இவ் ஆவணப்படம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – பூநகரி ஜெயபுரம் சமாசம்

Jeyapuram Samaasham Jeyapuram, Poonagari, Jaffna, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் பூநகரி, ஜெயபுரம் சமாசத்தில் 23.05.2025 அன்று, பிற்பகல் 12.30 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் பங்குபற்றிய நிரஞ்சன் பரிளா,“குறிப்பாக மீன்பிடி சிறுதொழிலாளர்கள் கடலட்டைப் பண்ணைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எமது பூநகரியில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் பல முன்னெடுத்திருந்தோம். நானும் அதில் கலந்துகொண்டிருந்தேன். இதுவரையிலும் எமக்கான […]

‘நீர்த்தகடல்’ ஆவணப்படத் திரையிடல் – வவுனியாப் பல்கலைக்கழகம்

university of vavuniya Pampaimadu, Vavuniya, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, வவுனியாப் பல்கலைக்கழகத்தினுடைய சுற்றுச்சூழல் கழகத்தின் ஒழுங்கமைப்பில் 21.05.2025 அன்று, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இத்திரையிடலில் பங்குபற்றிய மாணவர் ஒருவர், “வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடல் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட கடலட்டைப் பண்ணைகள், தமிழ் மக்களின் நிலையான பொருளாதார வளங்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பது […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – முல்லைத்தீவு திறன்விருத்தி நிலையம்

Mullaitivu Skill Development Centre Mullaittivu, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, முல்லைத்தீவு – திறன்விருத்தி நிலையத்தின் ஒழுங்கமைப்பில் 16.05.2025 அன்று, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் திறன் விருத்தி நிலையத்தின் கற்கைநெறி மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய […]

நீர்த்த கடல் ஆவணப்படத் திரையிடல் – மன்னார் வேதசாட்சிகள் இராக்கினி ஆலயம்

Mannar - Vedasakshigal in the garden of the Irakini temple Mannar, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர்கள் ஆணைக்குழுவின் ஒழுங்கமைப்பில் 11.05.2025 அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மன்னார் -வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத் தோட்டவெளியில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய […]

‘இரச வர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Colombo tamil sangam 7 sangam lane, Colombo, Western Province, Sri Lanka

எழுநா மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 02.05.2025 அன்று, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்விற்கு மருத்துவர் விக்ணவேனி செல்வநாதன் தலைமை வகித்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய சமூக ஆய்வாளரான திரு. கந்தையா சண்முகலிங்கம், “பால.சிவகடாட்சம் அவர்கள் ஏட்டுப்பிரதியிலிருந்த ‘இரசவர்க்கம்’ எனும் […]

‘இரசவர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு – திருகோணமலை

Thazham Organization UC Complex, 1st Floor, Periyakadai, Dockyard Rd, Trincomalee, Trincomalee, Eastern Province, Sri Lanka

எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 27.04.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில், நூல் அறிமுக உரையினை பீடாதிபதி, சித்த மருத்துவ பீடம், திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவர், வல்லிபுரம் அநவரதன் நிகழ்த்தியிருந்தார். நூலின் மதிப்பீட்டுரையினை விசேட […]

தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘நீர்த்த கடல்’ திரையிடல்.

OfERR Ceylon,Tellippalai Jaffna, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, தெல்லிப்பளையிலுள்ள 'OfERR Ceylon' நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் 25.04.2025 அன்று, முற்பகல் 10.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த சிவராசா மரியறோசரி, “கடல் வளங்கள் தற்போது பல்வேறு செயற்பாடுகளால் அழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகின்றன. இதனால் சிறுதொழில் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இதனைக் கண்டுகொள்ள வேண்டும். முன்னைய […]

நூல் வெளியீட்டு விழா – காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்

YMCA 109 Kandy Rd, Jaffna, Jaffna, Northern Province, Sri Lanka

எழுநாவின் பதிப்பில் மரியநாயகம் நியூட்டனால் எழுதப்பட்ட'காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்' எனும் தலைப்பிலான நூலானது 19.04.2025 அன்று, சனிக்கிழமை யாழ்ப்பாணத்தின் வாலிப கிறிஸ்தவ சங்கத்தில் (YMCA) வெளியிடப்பட்டது. கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீனவ சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய […]

‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ தந்தை செல்வா கலையரங்கில் திரையிடல்

https://www.thanthaichelva.lk/ 114 Ragendra, பிரசாத் வீதி, Jaffna 40000, Jaffna, Northern province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட  'நீதிக்கான நீண்ட காத்திருப்பு'  என்ற தலைப்பிலான ஆவணப்படமானது  வல்லமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில்  18.04.2025 அன்று, யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் திரையிடப்பட்டது.  இந்நிகழ்வில் வல்லமை இயக்கத்தின் பயணிகள் பலர் பங்குபற்றியிருந்தனர். ஆவணப்படத்தை பார்வையிட்ட பார்வையாளரான க.சத்தியசீலன்  என்பவர் “காணாமலாக்கப்பட்டவர்களது நீண்டகாலப் பிரச்சினையை சிந்திக்க இயலாதவாறு நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையில்,  இப்போராட்டத்தை இத்திரையிடலானது மீள நினைவுபடுத்தியுள்ளது. வந்திருக்கக்கூடிய புதிய அரசாங்கம்  […]

‘இரசவர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு

Chunnakam Public Library Uduvil, Jaffna, Northern province, Sri Lanka

எழுநா மற்றும் சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் 'யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்' என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 15.03.2025 அன்று, சனிக்கிழமை சுன்னாகம் பொது நூலகத்தின் டிஜிட்டல் அறிவு மையத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் வாழ்த்துரையினை சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சுதர்சன் ஜெயலக்ஷமி வழங்கியிருந்தார். நூல் அறிமுக உரையினை அச்சுவேலி, சுதேசிய மருந்து உற்பத்தி பிரிவு, சித்த மருத்துவ […]

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” ஆவணப்படம் திரையிடல்

Adampan Mathiya Maha Vidyalaya ADAMPAN, Mannar, Northern province, Sri Lanka

மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 31.01.2025  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி,  “பூமியிலுள்ள நீரில் மிகச் சொற்பளவிலேயே மக்கள் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. அதனை எதிர்கால சந்ததியினருக்கும் பகிர்ந்தளிக்க முகாமை செய்ய வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீரை வீண்விரயம் செய்வது […]

கிளிநொச்சி- முல்லைத்தீவு OfERR Ceylon நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

Vavuniya, OfERR Vavuniya, Vavuniya, Northern province, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  சனிக்கிழமை, 04.01.2025 அன்று முற்பகல் 9.30 மணிக்கு,  கிளிநொச்சி- முல்லைத்தீவு OfERR Ceylon நிறுவனத்தில் திரையிடப்பட்டது.  ஆவணத்திரையிடலில் பங்குபற்றியிருந்த குறித்த நிறுவனத்தின் பணியாளரான தர்மரத்தினம் தனுஷாந்தன்  “இவ்ஆவணத்திரையிடலானது, எவ்விதம் நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும் என்பதையும், நீரின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும், நீர் மூலங்களினூடே நீரைச் சேமித்து எதிர்கால […]

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படம் திரையிடல்

K/Shanthapuram kalamahal tamil mahavidyalayam Killinochchi, killinochchi, Northern province, Sri Lanka

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்“  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 12.11.2024  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி,  “குடிநீர் வியாபாரமாகியிருப்பது குறித்தும், நீர் மாசடைதலுக்கான காரணங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குடிநீரை நிலத்தினுள் புகவிடாது, மக்கள் அதனை மேற்பரப்பில் வீண்விரயம் […]

முல்லைத்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.

District Agriculture Training Center) - Mullaitivu Oddusuddan, Mullaitevu, Mullaitevu, Northern province, Sri Lanka

வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவின் ஒழுங்கமைப்பில், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், மனிதக் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போது, எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்" என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திரையிடலில் பங்குபற்றியிருந்த றகமா நிறுவனத்தினுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளரான கலாநிதி இந்திரமூர்த்தி சுதன் அவர்கள், “சுத்திகரிக்கப்பட்ட நீர் தொடர்பில் இருந்த […]

வவுனியாவிலுள்ள றகமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.

RAHAMA, Vavuniya No. 60/15, FORUT Building, Sinthamany Pillaiyar Kovil View, Vavuniya., Vavuniya, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  கடந்த சனிக்கிழமை, 19.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு,   வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவில்  திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த […]

வல்லமைத்தளத்தின் ஒழுங்கமைப்பில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த  வியாழக்கிழமை, 16.10.2024 அன்று  முற்பகல் 9.30மணிக்கு,  பூதர்மடம், கோப்பாயிலுள்ள புன்னகைப்பள்ளி மண்டபத்தில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் […]

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில்‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

J/Kokuvil Hindu College Kokuvil, Jaffna, Northern province, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  புதன்கிழமை, 16.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு,  யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு […]