Events – Ezhuna | எழுநா

உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ – நூல் அறிமுக நிகழ்வு – திருகோணமலை

Sarvodaya Development Education Center Nilaveli Road in Uppuveli, Trincomalee, Eastern Province, Sri Lanka

'பழங்குடிச் சமூகங்களும், விளிம்புநிலை இலக்கியங்களும்' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற 53ஆவது இலக்கியச் சந்திப்பில், எழுநா வெளியீடாகிய திரு. க. பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' நூல் அறிமுக நிகழ்வு 04.07.2026 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை, சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையாற்றிய தமிழூராள் அனுஷ்திக்கா அவர்கள் "இலங்கையின் பழங்குடிச் சமூகமென்றால் மகியங்கணை மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் […]

‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ – நூல் அறிமுக நிகழ்வு – யாழ் பத்திரிசியார் கல்லூரி

St. Patrick's College Jaffna, Northern, Sri Lanka

மக்கள் கலை இலக்கியப் பேரவையின் 'நூறு மலர்கள் மலரட்டும்' புத்தக அரங்க விழாவில், எழுநாவின் வெளியீடாகிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமாகிய இரா. சடகோபன் அவர்களின் 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் அறிமுக நிகழ்வு, கடந்த 03.07.2026 வெள்ளிக்கிழமை, மாலை 4.30 மணிக்கு யாழ் பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர் P. கோபிநாத் அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தினார். அவர் உரையாற்றுகையில், "சிறந்த சட்டத்தரணியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கலைஞராகவும் […]

‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ – நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச்சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

எழுநா வெளியீடாகிய பாலசுப்பிரமணியம் துவாரகன் அவர்களின் 'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு' நூல் அறிமுகம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 01.07.2026 புதன்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. வைத்தியக் கலாநிதி சி. அனுஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருத்துவர் மஹிமா சுரேஸ் அவர்கள் அறிமுகவுரையை ஆற்றியிருந்தார். மருத்துவர் மஹிமா சுரோஷ் உரையாற்றுகையில் மன்னன் சிங்கை செகராசசேகரன் காலப்பகுதியில் சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் […]

‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ – நூல் அறிமுக நிகழ்வு – இல-10, புதிய வீதி மட்டக்களப்பு

No. 10, New Street Batticaloa, Eastern Province, Sri Lanka

எழுநா வெளியீடாகிய இளங்கோ அவர்களின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் அறிமுக நிகழ்வு இல 10, புதிய வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள கூடத்தில் 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியராகிய றிஹானா நெளபர், ஊடகவியலாளராகிய கேஷாயினி எட்மண்ட் மற்றும் பல்கலைக்கழக மாணவராகிய பா. பிரேமிதன் ஆகியோர் நூல் பற்றி உரையாற்றியிருந்தனர். நிகழ்ச்சித்தொகுப்பினை கவிஞரும் பாடலாசிரியருமாகிய அக்ஸயா பாஸ்கரமூர்த்தி அவர்கள் வழங்கியிருந்தார். வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் […]

‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ – நூல் அறிமுக நிகழ்வு – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபம்

Divisional Secretariat Pachchilapalli A-9 Road, Pallai, Kilinochchi, Northern, Sri Lanka

திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் மணி விழா மற்றும் சேவை நலன் பாராட்டு விழாவில், அவரது எழுநா வெளியீடாகிய ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ நூலின் அறிமுக நிகழ்வு கடந்த 18.06.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திரு. இ.த. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் திரு. இ. பெருமாள் கணேசன் அவர்கள் […]

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்’ – நூல் அறிமுக நிகழ்வு – சித்தாண்டி, கூடாரம்.

Sithandi Eravur Pattu Divisional Secretariat, Batticaloa, Eastern Province, Sri Lanka

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப்போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக எழுநாவின் வெளியீடாகிய திரு. வை. ஜெயமுருகனின் 'மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்' நூலின் அறிமுகம் சித்தாண்டி, கூடாரத்தில் 15.06.2026 ( திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில், நூலிற்கான அறிமுகவுரையினை திரு. சார்ள்ஸ் அன்ரனிதாஸ் அவர்கள் வழங்கியதுடன், […]

‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ – நூல் அறிமுக நிகழ்வு – ஏழாலை மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்.

Earlalai Maha Vidyalayam Alaveddy Road, Earlalai, Jaffna, Northern, Sri Lanka

மக்கள் கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில், யாழ் ஏழாலை மகாவித்தியாலயத்தில் 13.06.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற “நூறு நூல்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழாவில் மூன்று நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது. அவற்றில், எழுநா வெளியீடான, திரு. கமலநாதன் பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' எனும் நூலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூலுக்கான அறிமுக உரையை மூத்த எழுத்தாளர் திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வழங்கியிருந்தார். […]

‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ – நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் 'வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' நூலின் அறிமுக நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 03.06.2026 அன்று இடம்பெற்றது. கலாநிதி எஸ். கே. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் மதிப்பீட்டுரையினை வழங்கியிருந்தார்.   படங்கள் - திரு. தம்பையா ராஜரட்னம்

‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ – நூல் வெளியீட்டு நிகழ்வு – கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபம்.

Skill Development Center Ariviyal Nagar, Kilinochchi, Northern, Sri Lanka

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையின் ஆதரவுடன் எழுநா வெளியீடாகிய, அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் 'வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' நூலின் வெளியீட்டு நிகழ்வு 03.06.2026 (புதன்கிழமை), பி.ப 2.00 மணிக்கு மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. த. குருகுலராஜா மற்றும் ஓய்வுநிலைப் பாடசாலை அதிபர் திரு. சி. […]

‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ – நூல் வெளியீட்டு நிகழ்வு – கனடா

Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON M1P 4N6, Toronto, Canada

ஓராயம் அமைப்பின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய திரு. இ. மயூரநாதன் அவர்களின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ நூலின் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரர் கவுன்சில் மண்டபத்தில் 24.05.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது. மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ஓராயம் அமைப்பின் தலைவர் திரு. பிரேம் பிரேமச்சந்திரா வரவேற்புரையை வழங்கினார். நூலுக்கான விமர்சன உரைகளை திரு. வ.ந. நவரத்தினம், அருண்மொழிவர்மன் […]

‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ – நூல் விமர்சனக் கலந்துரையாடல் – திருகோணமலை தளம் கட்டமைப்பு.

1st Floor, Periyakadai UC Complex, Dockyard Road Trincomalee, Eastern Province, Sri Lanka

‘தளம்’ அமைப்பின் ‘களம்’ செயற்றிட்டத்தின் ஐந்தாவது விமர்சனக் கலந்துரையாடலாக, எழுநா வெளியீடான திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற நூலை மையமாகக் கொண்ட விமர்சனக் கலந்துரையாடல், 16.05.2026 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை, இல. 76, கடற்காட்சி வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள ‘தளம் நோவா’ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், எண்ணம் போல் வாழ்க்கை கலை […]

‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ மற்றும் ‘உத்தியாக்கள்’ – நூல்களின் அறிமுக நிகழ்வு – பேராதனைப் பல்கலைக்கழகம்.

University of Peradeniya Galaha Rd, Peradeniya, Kandy, Central Province, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' மற்றும் க. பத்திநாதனின் 'உத்தியாக்கள்' நூல்களின் அறிமுக நிகழ்வு பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் 28.04.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 12 மணிக்கு, பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கில் இடம்பெற்றது. பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தற்காலிக விரிவுரையாளராகிய உ. ஜீவதர்ஷன் அவர்கள் உத்தியாக்கள் நூல் பற்றிய அறிமுக உரையினையும், விரிவுரையாளர் […]

வடக்குப் பிராந்திய காலநிலையியல் – நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச்சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, பேராசிரிய‌ர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் 'வடக்குப் பிராந்திய காலநிலையியல்' நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. திரு. அனந்த பாலகிட்ணர் தனது உரையில் […]

இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும் – நூல் வெளியீட்டு நிகழ்வு – இராகலை, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலயம்

Ragalai, Silverkandy Tamil Vidyalaya Ragalai, Nuwaraeliya, Central Province, Sri Lanka

எழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான 'இரு நூற்றாண்டு மலையகம் - வலியும் வாழ்வும்' நூல் வெளியீட்டு நிகழ்வு 22.04.2026 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 2.15 மணிக்கு இராகலை, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இராகலை, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலய அதிபர் திரு. ச. பன்னீர்செல்வம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியரும் பேரவை உறுப்பினருமாகிய திரு. ச. மோகன்ராஜ் நூலறிமுகத்தினை வழங்கினார். மேலும், நூலாய்வுரையினை டலோஸ் தமிழ் மகாவித்தியாலய […]

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வு – இரத்தோட்டை பிரதேச சபை மண்டபம்.

Rattota Pradeshiya Sabha Rattota Pradeshiya Sabha, Raththota, Matale, Central Province

நிமிர் விடுதலை இயக்கத்தினால் 'காணி உரிமைகளும் மலையகப் பெண்களும்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வு இரத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் R. மதுசிகா அவர்களினால் 'பசுமை எனும் பேரபாயம்' நூலை முன்வைத்து 'மலையகத்தில் சூழல் […]

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை, புத்தளம்.

Zahira Primary Schoo 2RRH+9F4, Mannar Rd, Puttalam, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், 'PILLARS' அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் வீதி, புத்தளத்தில் அமைந்துள்ள ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில், 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணி தொடக்கம் 6.45 மணி வரை இடம்பெற்றது. Z.A. ஸன்ஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Z.A.M. ரஸ்மி, நூலாசிரியர் அறிமுகத்தினை வழங்கியிருந்தார். நூல் விமர்சன உரைகளை கொழும்பு பல்கலைக்கழக முனைவர் […]

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் – நூல் வெளியீட்டு நிகழ்வு – திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம்

Thirumarai Kalamanram 238 Main Street, A9, Jaffna, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் - திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது. திரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை […]

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 25.02.2026 (புதன்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. திரு. த. இராஜரட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு. த. ரெஷாங்கன் அறிமுக உரையினை ஆற்றியிருந்தார். வாசகர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

Vallai-Tellippalai-Araly Rd, Tellippalai, Sri Lanka Vallai-Tellippalai-Araly Rd, Tellippalai, Northern, Sri Lanka

மக்கள் கலை இலக்கியப் பேரவையின் 'நூறு மலர்கள் மலரட்டும்' புத்தக அரங்க விழாவில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் பசுமை எனும் பேரபாயம் நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் ஜனவரி 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கலை இலக்கியப் பேரவையின் தலைவர் த. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆசிரியர் க. தவசீலன் அவர்கள் […]

‘உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ – நூல் அறிமுக நிகழ்வு – வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம்.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம் Vavuniya Town, Vavuniya, Northern, Sri Lanka

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடாகிய, திரு. க. பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' நூலின் அறிமுக நிகழ்வு 03.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி […]