ஆன்மிக நாத்திக வெளிப்பாட்டுத்தளம்
15 நிமிட வாசிப்பு
ஐரோப்பிய நாடுகள் நிலப்பிரபுத்துவச் சமூக முறைமையைத் தகர்த்தபடி தம்மைத் தேசங்களாகக் கட்டமைத்துக் கொண்டே உலகப் பந்தின் ஏனைய நிலப்பரப்புகளைக் காலனிகளாக்கி ஆட்சிபுரிந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமக்குரிய ஆளுமையாக முகிழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவர் பற்றிப் பேசுகிற போது அவரது சமகாலத்தின் ஏனைய ஆளுமைகள் செயற்பட்ட பாங்கு குறித்தும் கவனம் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஈழத்தமிழ்ப்புலத்தின் இலக்கியம், மொழி, மதம் எனும் பன்முகத் தளங்களில் நாவலரின் செயற்பாடுகளே முனைப்புடையதாய் அமைந்திருந்தன. அவருடன் […]
மேலும் பார்க்க
இலங்கையில் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கான பின்னணி
17 நிமிட வாசிப்பு
இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்திடையே 1906, 1912, 1950ஆம் ஆண்டுகளில் முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றன. 1906ஆம் ஆண்டு மாட்டு வண்டிக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசியல், மதரீதியான கொதிநிலைகள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கம் கொழும்பு நகரப் பாட்டாளிகளிடையே ஆழமாக வேரூன்றியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்று காணப்படவில்லை. மதரீதியான அமைதியின்மை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அரசின் அநேக செயற்பாடுகள் விமர்சனங்களுக்குள்ளாகின. அரசியல் முறைமையானது 1833ஆம் […]
மேலும் பார்க்க
மன்னார்க் கூத்து மரபு: ஈழத்தமிழ்க் கூத்து மரபில் ஒரு புதிய கிளை – பகுதி 2
25 நிமிட வாசிப்பு
இந்தக் கட்டுரையில் பின்வரும் விடயங்கள் சுருக்கமாக விவரிக்கப்படுகின்றன: 1. தமிழ் மரபில் காவியம், கூத்து ஆகியவற்றின் கதைக்கருக்களின் ஊற்றுக்கண் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள் ‘தமிழ் இலக்கியத்தில் காவிய காலம்’ என்று ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதிலே அவர் தமிழில் காவியங்களுக்கான தோற்றம் பற்றிக் கூறுகையில், காவியங்களின் உருவாக்கத்திற்கு அற்புதக் கதைகள் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். கதைகள் இல்லாமல் காவியம் இல்லை. அதேபோலத்தான் கதைகள் இல்லாமல் கூத்துகள் […]
மேலும் பார்க்க
தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 1
20 நிமிட வாசிப்பு
புராதன தமிழகத்தின் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சேர்ந்து நடனமாடும் காட்சி பாறை ஓவியமாக ஆண்டிப்பட்டி மலைக்குன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களோடு பழக்கப்பட்ட (Domesticated) ஆடும் காணப்படுகிறது. இந்த ஓவியத்தின் காலம் இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்படுகிறது. நன்றி – Indian Express, March 4, 2013. தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகள் தமிழ் மொழியைப் பாரம்பரியமாகப் பேசும் மக்கள் ‘தமிழர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இந்தத் தமிழ் மொழி […]
மேலும் பார்க்க
மலையக வாழ்வியலில் ஒப்பாரிப் பாடல்கள்
14 நிமிட வாசிப்பு
கலை, இலக்கியங்கள் மக்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். மக்கள் உருவாக்கிய இக்கலைகளில் அவர்களின் வாழ்க்கைச் செய்திகள் வெளிப்படுவது இயல்பாகும். கலை, இலக்கியங்கள் மக்களின் பண்பாட்டு நிலைகளை உள்ளடக்கியவைகளாக உள்ளன. தமிழரின் இசை மரபு நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழரின் இசை அம்மானை, ஊஞ்சல் போன்ற தொழில்முறைப் பாடல்களாகவும், மங்கல வாழ்த்து போன்ற விழாப் பாடல்களாகவும், பல சடங்குப் பாடல்களாகவும் ஆரம்ப காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இவற்றில் தாலாட்டு, கும்மி, ஒப்பாரி […]
மேலும் பார்க்க
கண்ணகி வழிபாட்டில் கொம்புமுறி விளையாட்டு
28 நிமிட வாசிப்பு
கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்துகலைகளுள் ஒன்றாகக் கொம்பு விளையாட்டு காணப்படுகின்றது. இவ்விளையாட்டு அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். மழைவளம் குன்றி நாட்டில் வெப்ப மிகுதியால் அம்மை, வைசூரி, குக்கல், வெப்பு, செங்கமாரி, கண்ணோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்ற போது அம்மனின் சீற்றத்தினாலேயே அவை ஏற்படுகின்றன என்ற அசையாத நம்பிக்கையினாலும் அவ்வியாதிகளைத் தீர்க்கின்ற தெய்வம் என்று பாராட்டியும் பக்தர்கள் அம்மனிற்குச் சாந்தி செய்ய வேண்டி இக்கொம்பு விளையாட்டை நிகழ்த்துகின்றனர். […]
மேலும் பார்க்க
திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ்மொழியின் படிமுறைத் தோற்றமும் – அறிமுகம்
33 நிமிட வாசிப்பு
தமிழ்மொழி பேசும் மக்களின் வரலாற்றிற்கு அறிவியல் அடிப்படையில், தொல்லியல் அடிப்படையில், மரபியல் அடிப்படையில், மொழியியல் அடிப்படையில் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்ட அறிவியல் பாரம்பரியம் உண்டு. இன்றைய உலக மொழிகளைப் பேசும் மக்களுள் இந்தப் பெருமை அனைத்தும் கொண்ட மக்கள், தமிழ்க்குடும்ப மொழிகளைப் பேசும் மக்களைத் தவிர வேறு பலர் இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். அறிவியல்பூர்வமான ஆதார அணுகுமுறை இல்லாத காலகட்டத்தில் நமது வரலாறு மட்டுமல்ல, உலகின் பல்வேறு […]
மேலும் பார்க்க
இலங்கையின் அரசியல் யாப்புத்திருத்தம் எனும் செயல்முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 1931இன் டொனமூர் அரசியல் யாப்பு
30 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல Power Sharing in Sri Lanka Constitutional and Political Documents 1926 – 2008 எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை மேற்குறித்த சட்டத்துறை அறிஞர்களான றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல ஆகியோர் இணைந்து பதிப்பித்து வெளியிட்டனர். இந்நூலில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) தொடர்பாக 1926 தொடக்கம் […]
மேலும் பார்க்க
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆடைப் பண்பாட்டசைவுகள்: சாறணும் புடவையும்
24 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கைச் சோனகர் ஆடை அணிகலன் – 20ஆம் நூற்றாண்டு. மூலம்: en.wikipedia.org/wiki ஆடை அணிகலன்கள் எப்போதும் பண்பாட்டு அடையாளாகவும் சமூக வேறுபாடு, மதப்பின்னணி ஆகியவற்றினை பிரதிபலிக்கும் குறியீடுகளாகவும் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகளில் அவர்களது ஆடைப்பண்பாடும் தனித்துவமானதொன்றாகும். இது இஸ்லாமிய நெறிகள், அரேபிய-பாரசீக முஸ்லிம் உலக வழக்குகள், தமிழர் பண்பாடு, தென்னிந்திய, மற்றும் ஐரோப்பியக் குடியேற்றத் தொடர்புகள் ஆகியவற்றின் தாக்கத்தையும் கொண்டுள்ளது. இக்கட்டுரை இந்த மரபை அதன் ஆரம்பகால […]
மேலும் பார்க்க
பிலிப்பு டி மெல்ஹோ: ஐரோப்பிய வேதாகம மொழிபெயர்ப்பு ஏகபோகத்தை முறியடித்த இலங்கைத் தமிழர்
22 நிமிட வாசிப்பு
தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் பணியாற்றிய ஐரோப்பிய மதபரப்பாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன; அவை பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களாலேயே அறியப்படுகின்றன — சீகன்பால்க் (Ziegenbalg), ஃபேப்ரிசியஸ் (Fabricius), ரேனியஸ் (Rhenius) ஆகியோரின் திருப்புதல்கள் அதற்கு எடுத்துக்காட்டுகள். இந்த ஐரோப்பியமயமான வரிசையைக் குழப்பியவர் பிலிப்பு டி மெல்ஹோ (1723–1790) என்ற இலங்கைத் தமிழர். அவரது பெயர் டச்சுக்காரருடையது போலத் தோன்றினாலும், அவர் ஒரு பச்சைத் தமிழர்; தனது மொழிபெயர்ப்புப் பணியை இலங்கையிலேயே மேற்கொண்டார். […]
மேலும் பார்க்க