Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 3

21 நிமிட வாசிப்பு

சுதுமலை பிரகடனம் – 1987 விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டம் பற்றியும், இந்திய அரசுடனான உறவு பற்றியும், இலங்கை – இந்தியா ஒப்பந்தம் பற்றிய நிலைப்பாட்டையும் மக்களுக்கு விளக்க 1987 ஆகஸ்ட் 4 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் மைதானத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட மக்களுக்கான தெளிவுபடுத்தலே சுதுமலை பிரகடனமாகும். இப்பிரகடனத்தில் அவர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையும் அடைய முடியாத வண்ணம் இலங்கை […]

மேலும் பார்க்க

கந்தரோடையிலும் வடஇலங்கையின் பிற இடங்களிலும் கண்ட ஆதிகால நாணயங்கள் – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

அறிமுகம்: இலங்கையில் ஆதிகால நாணயங்கள் இலங்கையில் காணப்படும் நாணயங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: ஒன்று உள்ளூர் நாணயங்கள், மற்றது வெளிநாட்டு நாணயங்கள். இலங்கையில் தொல்லியல் அகழ்வுகளில் காணப்படும் மிகப் பழமையான நாணயங்கள் இந்திய நாட்டு நாணயங்களாகும். அவை அங்கிருந்து இந்திய வர்த்தகர்கள் மூலம் இங்கு வந்த நாணயங்களாகும். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்த மற்றைய நாணயங்களில் கிரேக்க, உரோம, பாரசீக, அரேபிய, சீன, போர்த்துக்கேய, டச்சுக்கார, பிரித்தானிய நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கையில் […]

மேலும் பார்க்க

பின் நோக்கிய தேசியவாதம்

16 நிமிட வாசிப்பு

ஐரோப்பியப் பேரரசுவாதம் (European Imperialism) ஆசியாவில் படரத் தொடங்கிய காலத்தில் ஆசியச் சமூகங்கள் அதனை எதிர்நோக்கத் தயாராக இருக்கவில்லை. படைபலத்தாலும் அறிவியல் வளர்ச்சியாலும் ஆதிக்கம் பெற்றிருந்த ஐரோப்பிய வல்லரசுகளின் வருகை ஒரு பெரும் சவாலாக நின்றது. ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு வழிகளில் அச்சவாலுக்குப் பதிலளிக்க முயன்றது. பல தோல்வி கண்டன, சில வெற்றிபெற்றன. இவற்றை இங்கு கூறுவது என் நோக்கம் அல்ல. எனினும் இரண்டொரு எடுத்துக்காட்டுகள் இலங்கையர் பதிலை நாம் […]

மேலும் பார்க்க

‘ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் செயற்பாட்டாளர்’ ஏ.எம். இராமையாவும், ‘தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயற்பாட்டாளர்’ எம்.ஏ. இராகவனும்

17 நிமிட வாசிப்பு

ஏ.எம். இராமையா அவர்களின் வீதிப்பாடல்கள் பல்வேறு தளங்களில் மலையக வீதிப்பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. கோவிந்தசாமி தேவரின் தோழராக இருந்து பாடல்களை வழங்கியவர்களில் முக்கியத்துவம் பெறுபவராக ஏ.எம். இராமையா தேவரை அடையாளம் காண முடிகிறது. எட்டியாந்தோட்டையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவராகவே கோவிந்தசாமி அடையாளங் காணப்பட்டிருந்தார். ஆனால் ஏ.எம். இராமையா தேவரின் வாழிடம் தொடர்பில் உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. அவரும் எட்டியாந்தோட்டையில் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. அதேவேளை, […]

மேலும் பார்க்க

இலங்கையில் கண்ணகி வழிபாட்டுத் தலங்களும் சடங்குகளும்

32 நிமிட வாசிப்பு

ஈழ நாட்டில் காணப்படும் கண்ணகி வழிபாட்டுத் தலங்களை இரு பிரிவுகளாக வகைமை செய்து கொள்ளலாம். தமிழர்கள் வழிபடும், தமிழரின் தாயகப் பகுதியில் காணப்படும் கண்ணகை அம்மன் கோயில்கள், சிங்கள மக்களால் வழிபடப்படும் பத்தினி தெய்வக் கோயில்கள் என்பனவாம் அவை. கண்ணகி வழிபாட்டின் தொன்மையினை இலக்கியங்களின் வழியும் அவ்வழிபாட்டுச் சடங்குகளின் வழியும் அறியலாம். கண்ணகி வழக்குரை, சிலம்பு கூறல், கோவலன் கதை என்பன கண்ணகி வரலாறு தொடர்பான பக்தி நிலையில் எழுந்த […]

மேலும் பார்க்க

போருக்குப் பிந்தைய சீரற்ற மீட்பு: சமத்துவமின்மையும் சமூகப் பழுதும் – பகுதி 2

39 நிமிட வாசிப்பு

ஆய்வுக்கதை 11: மீள்குடியேற்றத்தில் இடஞ்சார்ந்த பாகுபாடு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மீள்குடியேற்றத்தில் புதிய வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தச் செயல்முறை அதிகாரபூர்வமாக நியாயமானது என்று விவரிக்கப்பட்டாலும், நிலம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பதில் குடியிருப்பாளர்கள் சில முறைகளைக் கவனித்தனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கினார்: “இது தற்செயலானது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும். சில குடும்பங்களுக்குச் சாலைக்கு […]

மேலும் பார்க்க

போருக்குப் பிந்தைய சீரற்ற மீட்பு: சமத்துவமின்மையும் சமூகப் பழுதும் – பகுதி 1

39 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, வடக்குக் கிழக்கின் பொருளாதார, நிறுவனக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உடனடியான, விரிவான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டன, ரயில் பாதைகள் மீண்டும் இணைக்கப்பட்டன, நிர்வாக அலுவலகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கின, அபிவிருத்தித் திட்டங்கள் விரைவாகச் செயற்படுத்தப்பட்டன. அதிகாரபூர்வ உரையாடலில், இந்த மாற்றங்கள் ஒரு வெற்றிகரமான மாற்றத்திற்கான சான்றுகளாகக் காட்டப்பட்டன. மோதலில் இருந்து அமைதிக்கும், அழிவில் இருந்து […]

மேலும் பார்க்க

இலங்கையில் கண்ணகி வழிபாடு புகுந்த முறை

12 நிமிட வாசிப்பு

சிலப்பதிகாரம் என்பது தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற ஓர் இலக்கியமாகும். சிலம்பில் கண்ணகி ஒரு வழிபாட்டுத் தெய்வமுமாகிய நிலையில் இலக்கிய வாழ்விற்கான தளமும் வாய்ப்பாகின்றது. தமிழ்ச் சூழலில் சிலப்பதிகாரம் என்ற சொல்லாடல் மூன்று நிலைகளில் நிலைபெற்று நிற்கின்றது. முதலாவது அதனுடைய காவியத்தன்மை, இரண்டாவது அதனுடைய பொதுமக்கள் மயப்பாடு, மூன்றாவது அது சடங்காசாரத்துடன் இணைந்த நிலை. இந்த மூன்று நிலைகளையும் தாண்டி இன்னொரு தளமும் அதற்குண்டு. அது தமிழர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் ஆகிய […]

மேலும் பார்க்க

மலையக வாய்மொழிப் பாடல்களில் வெளிப்படும் துரைமார்களின் அதிகாரம்

15 நிமிட வாசிப்பு

இலங்கையின் பொருளாதாரத்துக்கு மைய சக்தியாக விளங்குவது பெருந்தோட்டத் துறையாகும். பிரித்தானியக் காலனித்துவம் உருவாக்கிய இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் இலங்கை அரசு முழுமையாகத் தவிர்த்து மேலெழ முடியாத அளவுக்கு அதன் தாக்கம் நிலைபெற்றிருக்கிறது. பிரித்தானியக் காலனித்துவம் உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பொருளாதாரக் கட்டுமானங்களை வடிவமைத்தது. கைத்தொழில் புரட்சியின் பின்னர் தங்கள் நாட்டிற்கு தேவையான மூலவளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும் பிரித்தானியர் வளமிக்க நாடுகளை […]

மேலும் பார்க்க

சைவசித்தாந்தம்: ஆறுமுக நாவலரும் வ.உ. சிதம்பரனாரும்

18 நிமிட வாசிப்பு

மதங்களால் மனித மனங்களும் சமூகக் கட்டமைப்பும் வடிவமைக்கப்பட்டிருந்த மத்திய காலத்தின் அடிப்படைப் பண்புகள் சில இன்றும் தாக்குறவுடன் உள்ளன. அனைத்து மதங்களும் தத்தமது பரப்புரைகளை இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் ஊடகமாகத் திகழ்ந்த தமிழ், மதச்சார்பின்மைப் பண்பெனும் தனக்குரிய தனித்துவத்தை இழந்து, சைவத் தமிழ் என்ற அடைமொழி ஏற்புடன் வலம் வருவதில் உள்ள முரண் கவனிப்புக்கு உரியது. பக்திப் பேரியக்கத்தில் தேவார – திருவாசகப் பாசுரங்கள் பரவலாக மேலெழுந்து வந்ததுடன் மட்டுமன்றி, […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்