பிலிப்பு டி மெல்ஹோ: ஐரோப்பிய வேதாகம மொழிபெயர்ப்பு ஏகபோகத்தை முறியடித்த இலங்கைத் தமிழர்
22 நிமிட வாசிப்பு
தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் பணியாற்றிய ஐரோப்பிய மதபரப்பாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன; அவை பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களாலேயே அறியப்படுகின்றன — சீகன்பால்க் (Ziegenbalg), ஃபேப்ரிசியஸ் (Fabricius), ரேனியஸ் (Rhenius) ஆகியோரின் திருப்புதல்கள் அதற்கு எடுத்துக்காட்டுகள். இந்த ஐரோப்பியமயமான வரிசையைக் குழப்பியவர் பிலிப்பு டி மெல்ஹோ (1723–1790) என்ற இலங்கைத் தமிழர். அவரது பெயர் டச்சுக்காரருடையது போலத் தோன்றினாலும், அவர் ஒரு பச்சைத் தமிழர்; தனது மொழிபெயர்ப்புப் பணியை இலங்கையிலேயே மேற்கொண்டார். […]
மேலும் பார்க்க
வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 3
31 நிமிட வாசிப்பு
2.2 வட மாகாணத்தின் மாகாணத்துக்கு உள்ளான ஆற்றுப்படுகைகள் (Provincial River Basins of Northern Province) மொத்தத்தில், வட மாகாணத்தில் 62 பிரதான மற்றும் நடுத்தர அளவிலான பாசனத் திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் விவசாய உற்பத்தி, நீர்வளப் பாதுகாப்பு, வெள்ள மற்றும் வறட்சி முகாமைத்துவம், நிலத்தடி நீர்வளப் பேணல் மற்றும் கிராமப்புறச் சமூகங்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் இன்றியமையாத பங்கினை வகித்து வருகின்றன. வட மாகாணத்தில் நீர்வள […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாண நிலத்தடி நீர்: தாகத்தின் அரசியல்
20 நிமிட வாசிப்பு
“6,00,000 பேரின் ஒரே நீர்மூலம் மாசடைகிறது. அரசின் கண்காணிப்பு இல்லை. பெண்கள் தினமும் இதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நெருக்கடி ஒரு சூழல் பிரச்சினை மட்டுமல்ல — இது ஓர் அரசியல் கேள்வியும் கூட.” காலை ஆறு மணி. கார்த்திகா என்ற நாற்பத்தி நான்கு வயதுப் பெண் தனது பிளாஸ்டிக் குடத்தைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறக்கிறார். வீட்டுக் கிணறு இருக்கிறது — ஆனால் அதில் தண்ணீர் எடுப்பதில்லை. […]
மேலும் பார்க்க
காலனித்துவ காலத்தின் கடைசிக்கட்டம்
17 நிமிட வாசிப்பு
உலக வரலாற்றில் ஒரு முக்கிய தசாப்தமாக 1940கள் இடம்பெறுவதை மறுக்க முடியாது. இத்தசாப்தம் விடிந்தபோது வரலாறு காணாத மிகப் பெரிய பேரரசாக எழுச்சி பெற்றிருந்த பிரித்தானியப் பேரரசு தன் ஆதிக்கத்தின் உச்சகட்டத்தில் நின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆறாம் ஜோர்ஜ் மன்னன் இந்தியாவின் பேரரசனாக (Emperor of India) முடிசூட்டப்பட்டிருந்தான். பிரித்தானியப் பேரரசின் வலுவுக்குச் சவால் கொடுக்கும் வகையில் 1940இல் ஜெர்மன் தலைவர் அடொல்வ் ஹிட்லர் போர் நடத்திக்கொண்டிருந்தான். இரண்டாவது […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – கச்சாய்
11 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள வரணிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள கச்சாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். நிலப்படத்தின்படி கச்சாய்க் கோவிற்பற்றில் கச்சாய், பாலாவி, கெற்பெலி, உசன், சாண்டான்போக்கட்டி, கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, அல்லாரை ஆகிய எட்டுத் துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1). படம் 1: லெயுசிக்காமின் […]
மேலும் பார்க்க
1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 1
30 நிமிட வாசிப்பு
இக்காலகட்டம் ஈழத்தமிழர் அரசியல் பிராந்திய மட்டத்தில் இருந்து விலகி, சர்வதேச மட்டத்திற்கு நகர்ந்த காலகட்டமாகும். ராஜீவ் காந்தியின் மரணத்துடன் இந்தியா ஈழத்தமிழர் அரசியலில் நேரடியாகத் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. இதுவே சர்வதேச மட்டத்திற்கு ஈழத்தமிழர் அரசியல் செல்வதற்கான வாய்ப்புகளை கொடுத்து இருந்தது. ஈழத்தமிழர் அரசியல் இலங்கை மட்டத்தில் இருந்த போது இலங்கை அரசு மாத்திரமே எதிரியாக இருந்தது. அது பிராந்திய மட்டத்திற்குச் சென்றபோது இலங்கை அரசும் பிராந்திய அரசு இந்தியாவும் […]
மேலும் பார்க்க
தொல்லியலும் கடந்த காலத்தை ஆயுதமாக்குதலும் – பகுதி 2
74 நிமிட வாசிப்பு
மரபுடன் வாழ்தல்: சமூகம், நினைவகம், அன்றாடப் பேச்சுவார்த்தைகள் முந்தைய பகுதிகள் தொல்லியலை இறையாண்மை, தேசியம், அரசு உருவாக்கம் ஆகிய கண்ணோட்டங்களில் ஆராய்ந்திருந்தால், நிறுவனங்கள் மீது மட்டுமே பிரத்தியேகமாகக் கவனம் செலுத்துவது, போருக்குப் பிந்தைய மரபுசார் அரசியலைப் பற்றிய ஒரு முழுமையற்ற விவரத்தை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. தொல்லியல் அதிகாரம் ஒருபோதும் ஒரு வெற்று நிலப்பரப்பில் செயல்படுத்தப்படுவதில்லை. அது மரபுசார் இடங்களுக்குள் வாழும் மக்களால் எதிர்கொள்ளப்படுகிறது, விளக்கப்படுகிறது, பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, சில […]
மேலும் பார்க்க
19ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டச் சமூகம்: அடிமைத்தனமும் மீட்சியும்
10 நிமிட வாசிப்பு
18 ஆம் நுாற்றாண்டு காலப்பகுதியில் நாட்டின் மிகப்பெரும் வதிவிடத் தொழிலாளர் சமூகமாகத் தோட்டத் தொழிலாளர்களே விளங்கினர். தென்னிந்தியாவிலிருந்து நிலமற்ற ஏழைகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகள் தேயிலை, கோப்பி, தென்னை மற்றும் இறப்பர் தோட்டப் பணிகளுக்காக பிரித்தானியப் பெருந்தோட்ட உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்டனர். இக்குடியேற்றத் தொழிலாளர்களினதும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களினதும் எண்ணிக்கை 1891 இல் 2,35,000 ஆகவும், 1921 இல் 5,00,000 ஆகவும், பின்னர் 1931 ஆம் ஆண்டில் […]
மேலும் பார்க்க
தொல்லியலும் கடந்த காலத்தை ஆயுதமாக்குதலும் – பகுதி 1
65 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் போர்கள் உயிர்களையும், சமூகங்களையும், நிலப்பரப்புகளையும் அழிக்கின்றன. அவை கடந்த காலத்துடனான உறவுகளையும் உருமாற்றுகின்றன. வன்முறைக்குப் பிறகு, சமூகங்கள் சாலைகள், பள்ளிகள், நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் மட்டும் அரிதாகவே கவனம் செலுத்துகின்றன. அவை வரலாற்றையே புனரமைக்கவும் முற்படுகின்றன. இந்த நிலத்திற்கு யார் சொந்தக்காரர்கள், யாருடைய துன்பம் நினைவுகூரப்பட வேண்டும், எந்தப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும், எந்த வரலாற்று விவரிப்புகள் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. […]
மேலும் பார்க்க
சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 2
19 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக அதிகாரப் பகிர்வு (Devolution) என்ற கருத்து இலங்கையின் அரசியல் யாப்பினுள் புகுந்தது. 13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறை உண்மையான அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறியது. மாகாண சட்டசபைகள் […]
மேலும் பார்க்க