கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக அதிகாரப் பகிர்வு (Devolution) என்ற கருத்து இலங்கையின் அரசியல் யாப்பினுள் புகுந்தது. 13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறை உண்மையான அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறியது. மாகாண சட்டசபைகள் […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 1

23 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இக்கட்டுரை ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க அவர்கள் ‘Federalism: Myths and Realities’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் எளிமைப்படுத்தப்பட்ட தழுவலாக்கமாகும். மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் (CPA) ‘Essays on Federalism’ (2016) என்ற கட்டுரைத் தொகுப்பு நூலின் நான்காவது அத்தியாயமாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இன்றைய பொருத்தம் கருதி இத் தழுவலாக்கத்தைத் தந்துள்ளோம். 2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஓர் உடன்பாடு […]

மேலும் பார்க்க

உலக முதலாளித்துவ அமைப்பின் சமத்துவமற்ற விருத்தி: சமீர் அமின் கோட்பாடு பற்றிய ஓர் அறிமுகம்

14 நிமிட வாசிப்பு

சமீர் அமின் (1931 – 2018) 2018ஆம் ஆண்டில் 86 வயதில் காலமான பொருளியலாளர் சமீர் அமின் எகிப்து நாட்டில் பிறந்தவர். 1947இல் கல்வி கற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகருக்குச் சென்ற அவர், பரிஸ் நகரிலேயே இறுதிவரை வாழ்ந்து வந்தார். 1957ஆம் ஆண்டில் ‘The Structural Effects of the International Integration of Pre-Capitalist Economies’ என்னும் தலைப்பிலான ஆய்வேட்டைச் சமர்ப்பித்து Ph.D. பட்டத்தை இவர் பெற்றுக்கொண்டார். […]

மேலும் பார்க்க

பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் ‘இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்’ என்னும் நூலின் அறிமுகம் 

15 நிமிட வாசிப்பு

ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும் என்னும் நூல் குமரன் புத்தக இல்லத்தினால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 383 பக்கங்களுடைய இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியாயிற்று. இதன் பிரதி ஒன்றின் விலை இலங்கை ரூபா 950 ஆகும். பெறுமதி மிக்க இந்நூல் இலங்கைத் தமிழர்களின் வழமைச் சட்டங்களையும் (Customary Laws), அம்மக்கள் சமூகத்தின் சமூக வரலாறு, பொருளாதாரம், […]

மேலும் பார்க்க

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் யுவான் லின்ஸ் (Juan Linz) என்னும் ஆய்வாளர் எழுதிய ‘The Perils of Presidentialism’ (ஜனாதிபதி முறையின் ஆபத்துகள்) என்னும் ஆய்வுக்கட்டுரையில், ஜனாதிபதி முறை தாராண்மை ஜனநாயக விழுமியங்களை அடியழித்து (Undermine), சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். “பாராளுமன்ற முறையையும் ஜனாதிபதி முறையையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்து பார்த்தால், பாராளுமன்ற முறை ஜனநாயக […]

மேலும் பார்க்க

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க அறிமுகம் ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க (Rohan Edirisinghe) அவர்கள் ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பை 1972, 1978 ஆகிய இருதடவைகளில் திருத்தம் செய்தபோது, தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கைகளின் (Liberal Democratic Principles) அடிப்படையிலான அரசியல் யாப்புவாதத் தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. இதன் பின்விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க உற்பத்தி மேன்மிகையின் சுரண்டல் மாதிரிகள் கண்டியின் நிலமானிய முறையில் நெல் உற்பத்தி பிரதான இடத்தைப் பெற்றது. காணிகளின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்களின் காணிகளைப் பயிரிடும் குடியான் விவசாயிகளின் உழைப்பின் மேன்மிகை (Surplus) ஆறு வடிவங்களில் அறவிடப்பட்டது. மேன்மிகையினை அறவிடும் இந்த வடிவங்களை நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகள் (Patterns of Surplus Extraction) என்ற தொடரால் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு மாதிரிகள் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 4238 பார்வைகள்

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க நியூட்டன் குணசிங்க அவர்கள் எழுதிய ‘Changing Socio – Economic Relations in the Kandyan Countryside’ என்னும் நூல் கண்டியின் நிலமானிய சமூகத்தில் பிரித்தானிய காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்களை ஆய்வு செய்யும் நூலாகும். இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘The Kandyan Social Formation’ (கண்டியின் சமூக உருவாக்கம்) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இவ்விரண்டாவது அத்தியாயத்தின் (பக். 21 […]

மேலும் பார்க்க

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை – பகுதி 2

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன இலங்கையில் அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு அந்நியர் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் மேற்கிளம்பின. அந்நியக் கிளர்ச்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளாகவும் அமைந்தன. பௌத்த பிக்குகள் இத்தகைய கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கியதையும், அக்கிளர்ச்சிகளில் பங்கு பற்றியதையும் காண முடிகிறது. இதன் பின்னணியில் பௌத்த பிக்குகள் பௌத்த சமயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும், பௌத்த மறுமலர்ச்சியிலும் தமது பங்களிப்பை […]

மேலும் பார்க்க

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன குமாரி ஜயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘Class and Ethnic Consciousness in Sri Lanka in the Late 19th and Early 20th Centuries’ என்னும் கட்டுரையின் தலைப்பை மேலே உள்ளவாறு தமிழில் தந்துள்ளோம். இக்கட்டுரையில் குமாரி ஜெயவர்த்தன அவர்கள் இலங்கையில் வர்க்க உணர்வு (Class Consciousness), இனத்துவ உணர்வு (Ethnic Consciousness) ஆகிய இரண்டினதும் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்