கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் யுவான் லின்ஸ் (Juan Linz) என்னும் ஆய்வாளர் எழுதிய ‘The Perils Of Presidentialism’ (ஜனாதிபதி முறையின் ஆபத்துகள்) என்னும் ஆய்வுக்கட்டுரையில், ஜனாதிபதி முறை தாராண்மை ஜனநாயக விழுமியங்களை அடியழித்து (Undermine), சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். “பாராளுமன்ற முறையையும் ஜனாதிபதி முறையையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்து பார்த்தால், பாராளுமன்ற முறை ஜனநாயக […]

மேலும் பார்க்க

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க அறிமுகம் ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க (Rohan Edirisinghe) அவர்கள் ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பை 1972, 1978 ஆகிய இருதடவைகளில் திருத்தம் செய்தபோது, தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கைகளின் (Liberal Democratic Principles) அடிப்படையிலான அரசியல் யாப்புவாதத் தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. இதன் பின்விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க உற்பத்தி மேன்மிகையின் சுரண்டல் மாதிரிகள் கண்டியின் நிலமானிய முறையில் நெல் உற்பத்தி பிரதான இடத்தைப் பெற்றது. காணிகளின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்களின் காணிகளைப் பயிரிடும் குடியான் விவசாயிகளின் உழைப்பின் மேன்மிகை (Surplus) ஆறு வடிவங்களில் அறவிடப்பட்டது. மேன்மிகையினை அறவிடும் இந்த வடிவங்களை நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகள் (Patterns of Surplus Extraction) என்ற தொடரால் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு மாதிரிகள் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 2769 பார்வைகள்

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க நியூட்டன் குணசிங்க அவர்கள் எழுதிய ‘Changing Socio – Economic Relations in the Kandyan Countryside’ என்னும் நூல் கண்டியின் நிலமானிய சமூகத்தில் பிரித்தானிய காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்களை ஆய்வு செய்யும் நூலாகும். இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘The Kandyan Social Formation’ (கண்டியின் சமூக உருவாக்கம்) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இவ்விரண்டாவது அத்தியாயத்தின் (பக். 21 […]

மேலும் பார்க்க

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை – பகுதி 2

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன இலங்கையில் அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு அந்நியர் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் மேற்கிளம்பின. அந்நியக் கிளர்ச்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளாகவும் அமைந்தன. பௌத்த பிக்குகள் இத்தகைய கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கியதையும், அக்கிளர்ச்சிகளில் பங்கு பற்றியதையும் காண முடிகிறது. இதன் பின்னணியில் பௌத்த பிக்குகள் பௌத்த சமயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும், பௌத்த மறுமலர்ச்சியிலும் தமது பங்களிப்பை […]

மேலும் பார்க்க

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன குமாரி ஜயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘Class and Ethnic Consciousness in Sri Lanka in the Late 19th and Early 20th Centuries’ என்னும் கட்டுரையின் தலைப்பை மேலே உள்ளவாறு தமிழில் தந்துள்ளோம். இக்கட்டுரையில் குமாரி ஜெயவர்த்தன அவர்கள் இலங்கையில் வர்க்க உணர்வு (Class Consciousness), இனத்துவ உணர்வு (Ethnic Consciousness) ஆகிய இரண்டினதும் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக […]

மேலும் பார்க்க

அதிகாரம்: ஓர் அரசியல் மெய்யியல் விளக்கம் 

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட அதிகாரம் அதிகாரம் (Power) என்னும் கருத்தாக்கம் அரசியல் கோட்பாடுகள் பற்றிய ஆய்வில் முதன்மையான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் ஹொப்ஸ் முதல் 19 ஆம் நூற்றாண்டினரான கார்ல் மார்க்ஸ், 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனையாளர்களான மக்ஸ் வெபர், றொபர்ட் டால் (Robert Dahl), ஹன்னா அரன்ட் (Hannah Arendt) வரை பலர் அதிகாரம் பற்றிய ஆழமான ஆய்வுகளைச் […]

மேலும் பார்க்க

இலங்கையில் 1956 ஆம் ஆண்டின் தேர்தல் புரட்சி

25 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: சி. அரசரத்தினம் இலங்கையின் நவீனகால வரலாற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள் சிலவற்றை எழுதிய சின்னப்பா அரசரத்தினம் முதன்மையிடத்தைப் பெறுகின்ற வரலாற்றுப் புலமையாளர்களில் ஒருவராவார். ‘Ceylon’ என்ற தலைப்பில் 1964ஆம் ஆண்டில் இவர் ஒரு முன்னோடியான நூலை எழுதினார். அந்நூல் ‘The Modern Nations in Historical Perspective’ (வரலாற்றுப் பார்வையில் நவீன தேசங்கள்) என்ற நூல்வரிசையில் ‘Prentice Hall Inco.’ என்னும் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரமாயிற்று. இந்நூல் […]

மேலும் பார்க்க

மார்க்சிய சமூகவியலாளர் கலாநிதி நியூட்டன் குணசிங்க: 1946 – 1988 

30 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட கலாநிதி நியூட்டன் குணசிங்க 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தார். அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை கம்பளை விக்கிரமபாகு மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று 1968ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர, லக்சிறி ஜயசூரிய ஆகியோர் பேராதனையில் இவரது […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 3

46 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தாராண்மை மறுப்பு அரசு இலங்கையில் பின்காலனித்துவ அரசு ஒன்று தாபிக்கப்பட்டு 64 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த அரசு பயணித்த பாதையினையும், அதன் பயணத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் திரும்பிப் பார்ப்பதற்கும், பரிசீலனை செய்வதற்கும் இந்த நீண்ட இடைவெளி எமக்குப் பயனுடையதாக உள்ளது. நாம் ஒரு காலப்பகுப்பு ஒன்றைச் செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் இப் பின்காலனித்துவ அரசை நிர்வகித்த அரசாங்கங்கள் எவை? அவற்றின் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்