எழுநா, ஈழம் தொடர்பாகவும் அது குறித்த அறிவார்ந்த கற்கைகள் தொடர்பாகவும் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, “ஈழக்கற்கைகள்” என்ற மகுடத்தின் கீழ் உள்ளடக்கியவையாக வரையறுத்துக் கொண்டு செயற்பட்டுவரும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். அந்த வகையில் ஈழம் சார்ந்து, அதன் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், பொருண்மியம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுப் பணிகளை உருவாக்குவதிலும் மேற்கொள்வதிலும் அவற்றினூடான அறிவுத் திரட்சியைப் பரவலாக்குவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். அந்த வகையில், இவை தொடர்பாக பல்வேறு புலமையாளர்களால் மேற்குறிப்பிட்ட துறைகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள, தமிழிலும் பிற மொழிகளிலும் பதிவு செய்யப்பட்ட ஈழம் சார்ந்த ஆய்வுகள், கோட்பாட்டு உருவாக்கங்கள், வரலாறுகள், வழிகாட்டற் குறிப்புகள் என்பவற்றைத் தமிழ் மொழியில் ஒன்றாகத் தொகுப்பதும், அவை தொடர்பான வெவ்வேறு வகையான கருந்து நிலைகளையும், மேலதிகமான புதிய சிந்தனைகளையும், பார்வைக் கோணங்களையும் வெளிப்படுத்துகின்ற புதிய ஆய்வுகள், கருத்துரைப்புக்கள், சிந்தனை ஓட்டங்கள் என்பவற்றை உரையாடல் மூலமாகப் பரவலாக்குவதன் மூலமாக, ஒரு பலமான அறிவுத் திரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அது செயற்பட்டு வருகிறது.