Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 1

32 நிமிட வாசிப்பு

ஆதிகால யாழ்ப்பாணத்தின் பெருங்கற் பண்பாட்டு மையங்கள். கந்தரோடை நாகரிகம் – கால அட்டவணை கந்தரோடை, மற்றும் அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட யாழ்ப்பாண மையங்களின் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும், பென்சில்வேனிய பல்கலைக்கழக கதிரியக்கக் கரிமத் திகதிகளையும் ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கால அட்டவணை (Thiagarajah, S. 2016:64 – 82).   ஆண்டு காலம் தொல் பொருட்கள் – மக்கள் வாழ்வியல் கி.மு.1350 – 500 பெருங்கற் பண்பாடுக் குடியிருப்புகள் கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் P-2521, P-2515 […]

மேலும் பார்க்க

வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

2. வட மாகாண ஆற்றுப்படுகைகள் வட மாகாணத்தின் ஆற்றுப்படுகைகளில் உள்ள நீர் வளங்களை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை உயர்த்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கமாகும். வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 885,000 ஹெக்டேர்களாகும். இதில் 50% க்கும் அதிகமான பகுதி நிரந்தர (Perennial), ஆண்டுப் பயிர்கள் (Annual) மற்றும் பருவகாலப் பயிர்கள் (Seasonal Crops) […]

மேலும் பார்க்க

மலையகத்தில் மாடன் வழிபாட்டுச் சடங்குகளும், மாடன் திருவிழாவும் 

26 நிமிட வாசிப்பு

வழிபாடுகள் ஒவ்வொரு சமூகக் குழுக்களுக்குமான அடையாளங்களாகவும், அவற்றின் பண்பாட்டின் மிக முக்கிய கூறுகளாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான வழிபாடுகள் காலம் காலமாக அச்சமூகத்தின் வாழ்வியலோடு நீண்டு நிலைபெற்று வாழுவனவாகவும் உள்ளன. இவற்றின் நீட்சி என்பது இலகுவானதல்ல; அது அச்சமூகம் கட்டமைத்துக் கொண்டுள்ள பொறிமுறையின் விளைவாகும். இவை வெறுமனே வழிபாடுகளாக மட்டும் அமையாமல், அவ்வழிபாடுகளை ஆற்றுகைகளோடு இணைத்து நிகழ்த்தும் முறையாகவும் பல்வேறு இனக்குழுக்களிடையே உள்ளன. அந்த வகையில், மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் […]

மேலும் பார்க்க

ஆங்கிலேயர் ஆட்சியின் அந்திப்பொழுது

16 நிமிட வாசிப்பு

முரண்பாடு முற்றிய முப்பதுகள் பதினேழாம் நூற்றாண்டில் மெதுவாக எழத் தொடங்கிய ஆங்கிலேயர் காலனியம் 20ஆம் நூற்றாண்டு உதயமாகிய போது உச்சநிலையடைந்த பேரரசாக உருவாகி, உலக ஆதிக்கம் பெற்றது. அப்பொழுது அது ஒருபோதும் அழியாது என்றென்றும் நிலைக்கும் தன்மை உடையது போன்று காணப்பட்டது. எழுச்சி, வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி என்பவை வரலாற்றின் போக்கு. இதிலிருந்து எந்தப் பேரரசும் தப்பிக்கொள்ள முடியாது. ஆங்கிலேயப் பேரரசு 1930களில் தன் வாழ்க்கையின் அந்திப்பொழுதை அடைந்தது. இருபது […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – வரணி

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பிலுள்ள தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் தென்மராட்சியின் இன்னொரு கோவிற்பற்றான வரணி தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். வரணிக் கோவிற்பற்று வரணி, குடமியான், தாவளை-இயற்றாலை, மந்துவில், வரணி-இயற்றாலை ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நிலப்படத்தில் காணமுடிகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி வரணிக் கோவிற்பற்றின் […]

மேலும் பார்க்க

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க அறிமுகம் ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க (Rohan Edirisinghe) அவர்கள் ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பை 1972, 1978 ஆகிய இருதடவைகளில் திருத்தம் செய்தபோது, தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கைகளின் (Liberal Democratic Principles) அடிப்படையிலான அரசியல் யாப்புவாதத் தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. இதன் பின்விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் […]

மேலும் பார்க்க

இறையாண்மை இல்லாத பிரதேசம்: நிலம் எனும் களத்திலே – பகுதி 2

29 நிமிட வாசிப்பு

மீள்குடியேற்றம்: மீட்சி இல்லாத உள்ளடக்கல் மீள்குடியேற்றம் என்பது பெரும்பாலும் இடப்பெயர்வின் தார்மீக, அரசியல் ரீதியான முடிவாக முன்வைக்கப்படுகிறது. கொள்கை விவாதத்தில், இது வேரோடு பிடுங்கப்பட்டவர்கள் தங்கள் உரிமையான இடத்திற்குத் திரும்பும் தருணத்தைக் குறிக்கிறது. இது மீட்சி, இயல்புநிலை, வாழ்வின் மீட்சிக்கு ஒரு சமிக்ஞையாக அமைகிறது. இலங்கையில், 2009க்குப் பிந்தைய மீள்குடியேற்றம் துல்லியமாக இதே சொற்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதாபிமான, அபிவிருத்தி வெற்றியாகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் கட்டியெழுப்பி […]

மேலும் பார்க்க

இறையாண்மை இல்லாத பிரதேசம்: நிலம் எனும் களத்திலே – பகுதி 1 

44 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்த காலம் பெரும்பாலும் ஒரு காலப்பிளவாக – வன்முறைக்கும் அமைதிக்கும், அழிவுக்கும் புனரமைப்புக்கும், மோதலுக்கும் மீட்சிக்கும் இடையிலான ஒரு தீர்க்கமான முறிவாக – விவரிக்கப்படுகிறது. ஆயினும், இத்தகைய விவரிப்புகள் போருக்குப் பிந்தைய நிலையின் ஒரு முக்கியமான பரிமாணத்தை மறைக்கின்றன. அதாவது, வெளியின் வழியாகப் போர் எவ்வாறு நிகழ்காலத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கிறது என்பதே அந்தப் பரிமாணம். வடக்குக் கிழக்கின் நிலப்பரப்புகள் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க உற்பத்தி மேன்மிகையின் சுரண்டல் மாதிரிகள் கண்டியின் நிலமானிய முறையில் நெல் உற்பத்தி பிரதான இடத்தைப் பெற்றது. காணிகளின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்களின் காணிகளைப் பயிரிடும் குடியான் விவசாயிகளின் உழைப்பின் மேன்மிகை (Surplus) ஆறு வடிவங்களில் அறவிடப்பட்டது. மேன்மிகையினை அறவிடும் இந்த வடிவங்களை நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகள் (Patterns of Surplus Extraction) என்ற தொடரால் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு மாதிரிகள் […]

மேலும் பார்க்க

உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 2

74 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார “இந்த நாட்டிலும் கூட நீதித்துறையானது, வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, சந்தர்ப்பம் தேவைப்படும் போதெல்லாம், முறையான சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஒரு துடிப்பானதும் வலுவானதுமான தனது அணுகுமுறையை வெளிப்படுத்த முடியும்.” என்ற, கடந்த இதழில் வெளியான இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளின் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் பகுதி 2 இனைத் தொடர்ந்து வாசிக்கலாம். […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்