Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சைவசித்தாந்தம்: ஆறுமுக நாவலரும் வ.உ. சிதம்பரனாரும்

18 நிமிட வாசிப்பு

மதங்களால் மனித மனங்களும் சமூகக் கட்டமைப்பும் வடிவமைக்கப்பட்டிருந்த மத்திய காலத்தின் அடிப்படைப் பண்புகள் சில இன்றும் தாக்குறவுடன் உள்ளன. அனைத்து மதங்களும் தத்தமது பரப்புரைகளை இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் ஊடகமாகத் திகழ்ந்த தமிழ், மதச்சார்பின்மைப் பண்பெனும் தனக்குரிய தனித்துவத்தை இழந்து, சைவத் தமிழ் என்ற அடைமொழி ஏற்புடன் வலம் வருவதில் உள்ள முரண் கவனிப்புக்கு உரியது. பக்திப் பேரியக்கத்தில் தேவார – திருவாசகப் பாசுரங்கள் பரவலாக மேலெழுந்து வந்ததுடன் மட்டுமன்றி, […]

மேலும் பார்க்க

ஈழத்தின் வடமேற்கில் அன்றிருந்த தமிழ்க் கூத்து மரபு – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

முன்னுரை ஈழத்து தமிழ்க் கூத்துகள் பற்றிய தேடலும் ஆய்வும் கடந்த 65 வருடங்களாக நடந்து வருகின்றன. 1960களிலே கூத்துகளின் அறிமுகமாக ஆரம்பித்த இவ்வாய்வு, 1970களிலே ஆழம் பெறத் தொடங்கியது. 1980களில் இது பல்கலைக்கழக ஆய்வுப் பொருளாக வளர்ச்சி கண்டது. அக்காலங்களிலும் பின்னரும் இது பிரதேச ஆய்வுகளாகவும் நுணுக்க ஆய்வுகளாகவும் மலர்ந்து, இப்போது அது விமர்சன ஆய்வாக வளர்ந்து செல்வதைக் காணுகிறோம். இந்த 65 வருட கால ஆய்விலேயே ஈழத்தில் கூத்து […]

மேலும் பார்க்க

அதிகாரம்: ஓர் அரசியல் மெய்யியல் விளக்கம் 

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட அதிகாரம் அதிகாரம் (Power) என்னும் கருத்தாக்கம் அரசியல் கோட்பாடுகள் பற்றிய ஆய்வில் முதன்மையான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் ஹொப்ஸ் முதல் 19 ஆம் நூற்றாண்டினரான கார்ல் மார்க்ஸ், 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனையாளர்களான மக்ஸ் வெபர், றொபர்ட் டால் (Robert Dahl), ஹன்னா அரன்ட் (Hannah Arendt) வரை பலர் அதிகாரம் பற்றிய ஆழமான ஆய்வுகளைச் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 4

22 நிமிட வாசிப்பு

வீட்டுக்கு அழைத்தலும் திவசமும் மனித நாகரிகத்தின் தோற்றத்திலிருந்தே, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் செயல்முறை நிகழ்ந்து வந்ததை காண முடிகின்றது. இதன் ஒரு பாலமாக மூதாதையர் வழிபாடு இருந்து வருகிறது. இது வெறும் சடங்கு ரீதியான மரபு என்பதைத் தாண்டி, ஒரு சமூகத்தின் வரலாறு, அறநெறி மற்றும் உளவியல் கட்டமைப்பின் அடித்தளமாகத் திகழ்கிறது. குறிப்பாக தமிழகத்தில் ‘தென்புலத்தார்’ என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கான கடமைகளை ஆற்றுவது இல்லறத் தர்மத்தின் தலையாயக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பௌத்தம் கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 2

31 நிமிட வாசிப்பு

(3) பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் இணைந்த சமரசப் பண்பு (The Syncretism of Buddhism with Megalithism) கந்தரோடைக் கிராமத்தின் தெற்குப் பக்கத்தில் பனந்தோப்புப் பகுதியிலிருந்த மண்மேடுகளை 1917ஆம் ஆண்டில் கவனித்த போல் பீரிஸ் அவை பௌத்த தாதுகோபங்களிருந்த மேடுகளாக இருக்கலாம் என எண்ணினார். ஆனால் அந்த இடமெல்லாம் பற்றையும் பறகும் மூடப்பட்டுக் காடாக இருந்தபடியினால் அங்கே அகழாய்வு எதையும் அவர் மேற்கொள்ளவில்லை (Pieris, P.E. 1917: 24). 1966-1967 […]

மேலும் பார்க்க

உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார ஓர் அரசு, சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளை மீறும் வகையில் செயற்படும்போது, அதற்கான முழுப் பொறுப்புகளும் அந்த அரசைச் சார்ந்தவையாகின்றன. ஆனால் அந்த அரசின் நிறுவனங்களால் இத்தகைய செயல்கள் செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது அதற்கான பொறுப்பு, பெரும்பாலும் ‘அரசுப் பொறுப்பு’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், அரசுடன் இணைக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டங்களின் அடிப்படையில், அத்தகைய குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்று […]

மேலும் பார்க்க

இலங்கையில் 1956 ஆம் ஆண்டின் தேர்தல் புரட்சி

25 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: சி. அரசரத்தினம் இலங்கையின் நவீனகால வரலாற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள் சிலவற்றை எழுதிய சின்னப்பா அரசரத்தினம் முதன்மையிடத்தைப் பெறுகின்ற வரலாற்றுப் புலமையாளர்களில் ஒருவராவார். ‘Ceylon’ என்ற தலைப்பில் 1964ஆம் ஆண்டில் இவர் ஒரு முன்னோடியான நூலை எழுதினார். அந்நூல் ‘The Modern Nations in Historical Perspective’ (வரலாற்றுப் பார்வையில் நவீன தேசங்கள்) என்ற நூல்வரிசையில் ‘Prentice Hall Inco.’ என்னும் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரமாயிற்று. இந்நூல் […]

மேலும் பார்க்க

வறண்ட மண்டல நீர்வளங்களின் இருப்பும் பேண்தகு பயன்பாடும்: வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள், இலங்கை

25 நிமிட வாசிப்பு

6.1 அறிமுகம் பாரம்பரிய நீர்வள மேலாண்மை அணுகுமுறை பெரும்பாலும் நீர் வழங்கல் (Irrigation/ Supply) மேம்பாட்டில் கவனம் செலுத்தி வந்துள்ளது. இந்த அணுகுமுறையில், மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் ஒருவருக்கு தேவையான நீர் அளவு போன்ற தேவைக் கோட்பாடுகள் நிலையானதாகக் கருதப்பட்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீர் வழங்கல் வளங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றைய நிலவரத்தில் நீர் வளங்களின் குறைபாடு, காலநிலை மாற்றம், மற்றும் அதிகரிக்கும் பயன்பாடு ஆகிய […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – நாவற்குழி

12 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள சாவகச்சேரிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம்.  நாவற்குழிக் கோவிற்பற்றில் நாவற்குழி, நுணாவில், கோயிலாக்கண்டி ஆகிய மூன்று துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படம் நாவற்குழிக் கோவிற்பற்றை மூன்று […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பௌத்தம்: கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 1

34 நிமிட வாசிப்பு

கந்தரோடை ஸ்தூபிகள். Source: Sri Lanka Guardian. முன்னுரை பௌத்த மரபுக் கதைகளின்படி புத்த பிரான் தனது வாழ்நாட்களில் வருகை தந்த இடங்களில் நாகதீபமும் (நாகதீவு – நாகநாடு) ஒன்றாகக் கூறப்படுகிறது. புத்த பிரானின் காலத்தில் இலங்கையில் நாகர்கள் ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் நாகதீபமும், மேற்குக் கரையிலிருந்த கல்யாணியும் முக்கியமான இடங்கள் என இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நூலில் கூறப்படும் ஒரு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்