கடல் முன்னேறுகிறது. நிலம் பின்வாங்குகிறது. 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிகிறது. மன்னார் கடற்கரை அரிப்பு ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமல்ல — இது திட்டமிடல் தோல்வி, சட்ட மீறல், பெண்களின் மறைக்கப்பட்ட இழப்பு. ரீட்டா வசந்தி (வயது 54), மன்னார் தீவின் ஜிம்பிரவுன் நகர் என்னும் சிறிய கிராமத்தில் வாழ்கிறார். “என் குழந்தைப் பருவத்தில் நான் விளையாடிய நிலம் இப்போது கடலுக்குள் போய்விட்டது. நாங்கள் குளிக்கச் சென்ற கிணறு இப்போது […]