இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும்

இலங்கையின் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள்

15 நிமிட வாசிப்பு

பற்றிக் பீபிள்ஸ் (Patrick Peebles) என்ற ஆய்வாளர் ‘Social Change In Nineteenth Century Ceylon (1995)’ என்ற நூலை எழுதினார். 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தோற்றம் பெற்ற முதலியார்கள் என்ற உயர் சமூகக் குழு (Social Elites) பற்றி பற்றிக் பீபிள்ஸ் இந்நூலில் விரிவாக ஆராய்கிறார். இக்கட்டுரை, பற்றிக் பீபிள்ஸ் அவர்கள் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள் வகுப்பு பற்றிக் கூறியிருப்பவற்றைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உயர்குழாம் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் குறைவிருத்தி: சார்புக் கோட்பாடு நோக்கிலான சில குறிப்புகள்

19 நிமிட வாசிப்பு

அறிமுகம் சார்புக் கோட்பாடு (Dependency Theory) என்னும் பொருளியல் கோட்பாட்டின் நோக்கில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரப் பின்னடைவையும் குறைவிருத்தியையும் (Under-development) விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சார்புக் கோட்பாட்டின் பிரதானமான எண்ணக்கரு ‘சார்பு நிலை’ (Dependency) என்பதாகும். சார்பு நிலை என்பதை தங்கியிருத்தல் எனவும் தமிழில் கூறலாம். உலக முதலாளித்துவப் பொருளாதார முறைமையில் மையம் (Centre), சார்பு மண்டலம் (Periphery) என இருவகை நாடுகள் உள்ளன. இவ்விருவகை நாடுகளுக்குமிடையில் சமத்துவமற்ற […]

மேலும் பார்க்க

உலக முதலாளித்துவ அமைப்பின் சமத்துவமற்ற விருத்தி: சமீர் அமின் கோட்பாடு பற்றிய ஓர் அறிமுகம்

14 நிமிட வாசிப்பு

சமீர் அமின் (1931 – 2018) 2018ஆம் ஆண்டில் 86 வயதில் காலமான பொருளியலாளர் சமீர் அமின் எகிப்து நாட்டில் பிறந்தவர். 1947இல் கல்வி கற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகருக்குச் சென்ற அவர், பரிஸ் நகரிலேயே இறுதிவரை வாழ்ந்து வந்தார். 1957ஆம் ஆண்டில் ‘The Structural Effects of the International Integration of Pre-Capitalist Economies’ என்னும் தலைப்பிலான ஆய்வேட்டைச் சமர்ப்பித்து Ph.D. பட்டத்தை இவர் பெற்றுக்கொண்டார். […]

மேலும் பார்க்க

பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் ‘இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்’ என்னும் நூலின் அறிமுகம் 

15 நிமிட வாசிப்பு

ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும் என்னும் நூல் குமரன் புத்தக இல்லத்தினால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 383 பக்கங்களுடைய இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியாயிற்று. இதன் பிரதி ஒன்றின் விலை இலங்கை ரூபா 950 ஆகும். பெறுமதி மிக்க இந்நூல் இலங்கைத் தமிழர்களின் வழமைச் சட்டங்களையும் (Customary Laws), அம்மக்கள் சமூகத்தின் சமூக வரலாறு, பொருளாதாரம், […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க உற்பத்தி மேன்மிகையின் சுரண்டல் மாதிரிகள் கண்டியின் நிலமானிய முறையில் நெல் உற்பத்தி பிரதான இடத்தைப் பெற்றது. காணிகளின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்களின் காணிகளைப் பயிரிடும் குடியான் விவசாயிகளின் உழைப்பின் மேன்மிகை (Surplus) ஆறு வடிவங்களில் அறவிடப்பட்டது. மேன்மிகையினை அறவிடும் இந்த வடிவங்களை நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகள் (Patterns of Surplus Extraction) என்ற தொடரால் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு மாதிரிகள் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க நியூட்டன் குணசிங்க அவர்கள் எழுதிய ‘Changing Socio – Economic Relations in the Kandyan Countryside’ என்னும் நூல் கண்டியின் நிலமானிய சமூகத்தில் பிரித்தானிய காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்களை ஆய்வு செய்யும் நூலாகும். இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘The Kandyan Social Formation’ (கண்டியின் சமூக உருவாக்கம்) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இவ்விரண்டாவது அத்தியாயத்தின் (பக். 21 […]

மேலும் பார்க்க

மார்க்சிய சமூகவியலாளர் கலாநிதி நியூட்டன் குணசிங்க: 1946 – 1988 

30 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட கலாநிதி நியூட்டன் குணசிங்க 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தார். அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை கம்பளை விக்கிரமபாகு மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று 1968ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர, லக்சிறி ஜயசூரிய ஆகியோர் பேராதனையில் இவரது […]

மேலும் பார்க்க

மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும் 

13 நிமிட வாசிப்பு

மார்க். பி. விற்றேக்கர் (Mark. P. Whitaker) எனும் மானிடவியலாளர் 1980களின் முற்பகுதியில் மட்டக்களப்பின் மண்டூர் என்ற கிராமத்தில் தங்கியிருந்து அப்பகுதியில் கள ஆய்வு நிகழ்த்தினார். அவர் மண்டூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாகம் தொடர்பாக, அவ்வூரின் வேளாளர்கள், சீர்பாதர் என்னும் இரு சமூகக்குழுக்களுக்கிடையே எழுந்த பிணக்குப் பற்றிய நுண்ணாய்வு ஒன்றை மேற்கொண்டார். நியுஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 1986 ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வேடு குறித்த விவரம் பின்வருமாறு: ‘Divinity […]

மேலும் பார்க்க

நூல் அறிமுகம்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் கல்வியின் ஒரு நூற்றாண்டு வரலாறு

17 நிமிட வாசிப்பு

இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் இரு நூல் தொகுப்புகளை வெளியிட்டது. இந்நூல் தொகுப்புகளின் தலைப்பு ஆங்கிலத்தில் வருமாறு: Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Sciences in Sri Lankan Universities. ‘எல்லைகளுக்கு அப்பால்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி’ என மேற்படி […]

மேலும் பார்க்க

ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்களின் ‘பௌத்தத்திற்குத் துரோகம்? இலங்கையில் சமயமும், அரசியலும், வன்முறையும்’ என்னும் நூல்

14 நிமிட வாசிப்பு

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்கள் 1990 ஆம் ஆண்டில் ‘Buddhism Betrayed? Religion, Politics and Violence in Sri Lanka’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் தலைப்பையே மேலே தமிழில் தந்துள்ளோம். பௌத்த நாடான இலங்கையில் 1970க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறைக் கிளர்ச்சிகளும், கலகங்களும் ஏற்பட்டன. 1971 இல் ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை இலங்கை அரசாங்கம் கொடிய முறையில் அடக்கியது. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்