சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கமுள்ள ஆட்சியமைப்பில் தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், உரிமைகளைப் பாதுகாப்பது இன்று உலக ரீதியாகவே பெரும் பிரச்சினையாகவுள்ளது. பாதுகாக்கும் பொறுப்பினை பெரும்பான்மை இனத்தின் கைகளில் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கப்பட்டால் அவை இயல்பாகவே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படும். இலங்கையைப் பொறுத்தவரை சட்ட, நிர்வாக, நீதி நிறுவனங்கள் ஆகிய மூன்றும் இவ்விடயத்தில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டே வந்திருக்கின்றன. சட்ட நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவதற்கும், ஏற்கெனவே […]