சோல்பரி அரசியலமைப்பு, நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியுடனேயே புசல்லாவை பிரதேசத்தையும் இணைத்து வைத்திருந்தது. பெருந்தோட்டப் பொறிமுறைக்காக புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள், கண்டியை பிரதானப்படுத்தியே நிலைகொள்கிறார்கள். கண்டிக்கு அண்மைய இடம், கண்டி மாவட்டத்திற்குட்பட்ட இடம், இந்திய வம்சாவளி தமிழர்களின் இருப்புக்குரிய இடம் ஆகிய பார்வைகளில் புசல்லாவை பிரதேசம் முக்கியத்துவம் பெறுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அரசியலமைப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, சோல்பரி அரசியலமைப்பு புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியலில் […]