சிவ தியாகராஜா, Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சிவ தியாகராஜா

இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்கால அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 2

36 நிமிட வாசிப்பு

திருப்புமுனை நான்கு கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன: இலங்கையின் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் தொல்லியல் Sudharshan Seneviratne (1984): The Archaeology of the Black and Red Ware in Sri Lanka, Ancient Ceylon, No. 5, Journal of the Archaeological Survey Department, Sri Lanka. —————————————————————————————————————கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன ஆசியாவில் முதனிலை பெற்றிருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலே பயின்று தத்துவக் கலாநிதி பட்டம் பெற்றவர். பாரபட்சமின்றி […]

மேலும் பார்க்க

இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்கால அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 1

41 நிமிட வாசிப்பு

“இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் அநேகமாகத் தென்னிந்தியாவில் நிலவிய நாகரிகத்தை ஒத்ததான நாகரிகத்தையே வளர்த்தெடுத்தார்கள் என எண்ணுவது நியாயத்தின் பாற்பட்டதாகும். இத்தகைய நோக்கிற்றான் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய இலங்கையின் வடபகுதியிற் தழைத்த நாகரிகம் பற்றி விவரிக்க முடியும். இலங்கையின் மதிப்பிட முடியாத தொல்லியற் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் போது இத்தகைய ஆய்வுத் தடயங்கள் சான்றுகளாக நின்று இதை நிரூபிக்கும்.”— செ. இராசநாயகம், 1921. “It seems reasonable to consider the […]

மேலும் பார்க்க

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 4

23 நிமிட வாசிப்பு

11. அரச ஆட்சி இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் வேள், வேளு, வேலு முதலான பெயர்கள் நாட்டில் அதிகாரத்திலிருந்த ஒரு சமூகத் தலைவனையோ அல்லது சிற்றரசனையோ குறிப்பிடும் பெயர்களாகும். இது தமிழகத்திற்குச் சமமான காலத்திலேயே, தமிழகத்தைப் போன்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வேள் ஆட்சி தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பேராசிரியர் பரணவிதான பதிப்பித்த ‘இலங்கையின் ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுகள்’ என்ற நூலின்படி 21 கல்வெட்டுகளில் வேள் என்ற சொல் காணப்படுகிறது […]

மேலும் பார்க்க

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 3

25 நிமிட வாசிப்பு

6. பெருங்கடல் வர்த்தகம்  கந்தரோடையினதும் அதன் துணை ஊர்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கு விவசாயம், மந்தை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடிப்பு ஆகிய நடவடிக்கைகள் உதவி செய்த போதிலும், கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கும், நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கும் முக்கிய உந்துதலாக இருந்தது அதன் துறைமுகங்கள் வழியாக மேற்கொண்ட வெளிநாட்டு வணிகச் செயற்பாடுகளே ஆகும். இந்து மாகடலின் வர்த்தகப் பாதையில் யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைவிடம் அமைந்திருந்ததனால் கிரேக்க-உரோம, பாரசீக, அரேபிய, சீன, இந்திய கடல்வழி […]

மேலும் பார்க்க

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 2

29 நிமிட வாசிப்பு

3. வாழ்வாதாரப் பொருளாதார நடவடிக்கைகள் கந்தரோடையும் அதன் துணைக் குடியேற்றங்களும் பன்முக வாழ்வாதார முறைகளைக் கடைப்பிடித்த தன்னிறைவான அலகுகள் ஆகும். இவை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடி ஆகியன இணைந்த வாழ்வாதார முறைகள் எனலாம். ஆனால் இந்நாட்டு வர்த்தகர்களின் உதவியோடு முன்னெடுத்த பெருங்கடல் வர்த்தகமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு அளித்த முயற்சி எனலாம். உணவுப் பொருட்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை நாகரிகமடைந்த சமூகங்களின் அடிப்படைத் தேவைகளாகும். […]

மேலும் பார்க்க

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 1

32 நிமிட வாசிப்பு

ஆதிகால யாழ்ப்பாணத்தின் பெருங்கற் பண்பாட்டு மையங்கள். கந்தரோடை நாகரிகம் – கால அட்டவணை கந்தரோடை, மற்றும் அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட யாழ்ப்பாண மையங்களின் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும், பென்சில்வேனிய பல்கலைக்கழக கதிரியக்கக் கரிமத் திகதிகளையும் ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கால அட்டவணை (Thiagarajah, S. 2016:64 – 82).   ஆண்டு காலம் தொல் பொருட்கள் – மக்கள் வாழ்வியல் கி.மு.1350 – 500 பெருங்கற் பண்பாடுக் குடியிருப்புகள் கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் P-2521, P-2515 […]

மேலும் பார்க்க

கந்தரோடையிலும் வடஇலங்கையின் பிற இடங்களிலும் கண்ட ஆதிகால நாணயங்கள் – பகுதி 2

36 நிமிட வாசிப்பு

நாணயத் தொடர் 6 சங்ககால சேர, சோழ நாணயங்கள்: கி.மு. 200 – கி.பி. 300. யாழ்ப்பாண மையங்களில் பாண்டிய நாட்டு நாணயங்களைப் போல பழைய சேர, சோழ நாணயங்கள் அதிக அளவில் காணப்படுவதில்லை. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் அனைத்தும் சதுர வடிவிலேயே காணப்படுகின்றன. இவற்றில் சேர நாணயங்களில் முன்பக்கம் யானையும், மறுபக்கம் சேர அரச இலச்சினையான அம்பு-வில்லும் காணப்படுகின்றன. சோழ நாணயங்களிலும் ஒரு பக்கம் யானையும், மறுபக்கம் […]

மேலும் பார்க்க

கந்தரோடையிலும் வடஇலங்கையின் பிற இடங்களிலும் கண்ட ஆதிகால நாணயங்கள் – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

அறிமுகம்: இலங்கையில் ஆதிகால நாணயங்கள் இலங்கையில் காணப்படும் நாணயங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: ஒன்று உள்ளூர் நாணயங்கள், மற்றது வெளிநாட்டு நாணயங்கள். இலங்கையில் தொல்லியல் அகழ்வுகளில் காணப்படும் மிகப் பழமையான நாணயங்கள் இந்திய நாட்டு நாணயங்களாகும். அவை அங்கிருந்து இந்திய வர்த்தகர்கள் மூலம் இங்கு வந்த நாணயங்களாகும். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்த மற்றைய நாணயங்களில் கிரேக்க, உரோம, பாரசீக, அரேபிய, சீன, போர்த்துக்கேய, டச்சுக்கார, பிரித்தானிய நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கையில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பௌத்தம் கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 2

31 நிமிட வாசிப்பு

(3) பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் இணைந்த சமரசப் பண்பு (The Syncretism of Buddhism with Megalithism) கந்தரோடைக் கிராமத்தின் தெற்குப் பக்கத்தில் பனந்தோப்புப் பகுதியிலிருந்த மண்மேடுகளை 1917ஆம் ஆண்டில் கவனித்த போல் பீரிஸ் அவை பௌத்த தாதுகோபங்களிருந்த மேடுகளாக இருக்கலாம் என எண்ணினார். ஆனால் அந்த இடமெல்லாம் பற்றையும் பறகும் மூடப்பட்டுக் காடாக இருந்தபடியினால் அங்கே அகழாய்வு எதையும் அவர் மேற்கொள்ளவில்லை (Pieris, P.E. 1917: 24). 1966-1967 […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பௌத்தம்: கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 1

34 நிமிட வாசிப்பு

கந்தரோடை ஸ்தூபிகள். Source: Sri Lanka Guardian. முன்னுரை பௌத்த மரபுக் கதைகளின்படி புத்த பிரான் தனது வாழ்நாட்களில் வருகை தந்த இடங்களில் நாகதீபமும் (நாகதீவு – நாகநாடு) ஒன்றாகக் கூறப்படுகிறது. புத்த பிரானின் காலத்தில் இலங்கையில் நாகர்கள் ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் நாகதீபமும், மேற்குக் கரையிலிருந்த கல்யாணியும் முக்கியமான இடங்கள் என இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நூலில் கூறப்படும் ஒரு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்