6. பெருங்கடல் வர்த்தகம் கந்தரோடையினதும் அதன் துணை ஊர்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கு விவசாயம், மந்தை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடிப்பு ஆகிய நடவடிக்கைகள் உதவி செய்த போதிலும், கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கும், நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கும் முக்கிய உந்துதலாக இருந்தது அதன் துறைமுகங்கள் வழியாக மேற்கொண்ட வெளிநாட்டு வணிகச் செயற்பாடுகளே ஆகும். இந்து மாகடலின் வர்த்தகப் பாதையில் யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைவிடம் அமைந்திருந்ததனால் கிரேக்க-உரோம, பாரசீக, அரேபிய, சீன, இந்திய கடல்வழி […]