அரசியல் யாப்புச் சிந்தனைகள் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

அரசியல் யாப்புச் சிந்தனைகள்

இலங்கையின் அரசியல் யாப்புத்திருத்தம் எனும் செயல்முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 1931இன் டொனமூர் அரசியல் யாப்பு

30 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல Power Sharing in Sri Lanka Constitutional and Political Documents 1926 – 2008 எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை மேற்குறித்த சட்டத்துறை அறிஞர்களான றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல ஆகியோர் இணைந்து பதிப்பித்து வெளியிட்டனர். இந்நூலில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) தொடர்பாக 1926 தொடக்கம் […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக அதிகாரப் பகிர்வு (Devolution) என்ற கருத்து இலங்கையின் அரசியல் யாப்பினுள் புகுந்தது. 13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறை உண்மையான அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறியது. மாகாண சட்டசபைகள் […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 1

23 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இக்கட்டுரை ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க அவர்கள் ‘Federalism: Myths and Realities’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் எளிமைப்படுத்தப்பட்ட தழுவலாக்கமாகும். மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் (CPA) ‘Essays on Federalism’ (2016) என்ற கட்டுரைத் தொகுப்பு நூலின் நான்காவது அத்தியாயமாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இன்றைய பொருத்தம் கருதி இத் தழுவலாக்கத்தைத் தந்துள்ளோம். 2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஓர் உடன்பாடு […]

மேலும் பார்க்க

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் யுவான் லின்ஸ் (Juan Linz) என்னும் ஆய்வாளர் எழுதிய ‘The Perils of Presidentialism’ (ஜனாதிபதி முறையின் ஆபத்துகள்) என்னும் ஆய்வுக்கட்டுரையில், ஜனாதிபதி முறை தாராண்மை ஜனநாயக விழுமியங்களை அடியழித்து (Undermine), சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். “பாராளுமன்ற முறையையும் ஜனாதிபதி முறையையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்து பார்த்தால், பாராளுமன்ற முறை ஜனநாயக […]

மேலும் பார்க்க

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க அறிமுகம் ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க (Rohan Edirisinghe) அவர்கள் ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பை 1972, 1978 ஆகிய இருதடவைகளில் திருத்தம் செய்தபோது, தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கைகளின் (Liberal Democratic Principles) அடிப்படையிலான அரசியல் யாப்புவாதத் தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. இதன் பின்விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 3

46 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தாராண்மை மறுப்பு அரசு இலங்கையில் பின்காலனித்துவ அரசு ஒன்று தாபிக்கப்பட்டு 64 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த அரசு பயணித்த பாதையினையும், அதன் பயணத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் திரும்பிப் பார்ப்பதற்கும், பரிசீலனை செய்வதற்கும் இந்த நீண்ட இடைவெளி எமக்குப் பயனுடையதாக உள்ளது. நாம் ஒரு காலப்பகுப்பு ஒன்றைச் செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் இப் பின்காலனித்துவ அரசை நிர்வகித்த அரசாங்கங்கள் எவை? அவற்றின் […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 2

22 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட இலங்கை அரசைத் தாராண்மையற்றதாக மாற்றுதல் (De–liberalisation of Sri Lankan State) தலையிடாக் கொள்கையுடன் இணைந்த தாராண்மை வாதம் (Laissez–faire Liberalism) என்ற பண்பை இழந்து தலையிடும் அரசு (Interventionist State) என்ற இயல்புடையதாக இலங்கையின் அரசு 1956–1965 காலப்பகுதியில் உருமாற்றம் பெறலாயிற்று. இத்தலையிடும் அரசு, அரச முதலாளித்துவம் (State Capitalism), பாராளுமன்ற ஜனநாயகம் என்ற இரண்டினதும் சேர்க்கையாக அமைந்தது. மக்கள் ஐக்கிய […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 1

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட இலங்கையின் பின்காலனித்துவ அரசு (Post–Colonial State in Sri Lanka) எனும் பொருள் பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்றை ஜயதேவ உயன்கொட அவர்கள் எழுதினார். இக்கட்டுரை பேராசிரியர் நடராஜ சண்முகரத்தினம் அவர்களது அறிவுத்துறைப் பணிகளைப் பாராட்டும் வகையில் வெளியிடப்பட்ட எழுபதாண்டு நிறைவு வெளியீடான ‘The Political Economy of Environment and Development in a Globalized World: Exploring the Frontiers: Essays in […]

மேலும் பார்க்க

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 3

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கலன சேனரத்தின மூன்றாம் உலக நாடுகள் அரசியல் விடுதலையைப் பெற்ற பின்னர் அரசியல் சுயநிர்ணயமும் சுதந்திரமும் (Political Self – Determination and Independence) மட்டும் காலனியத்தில் இருந்து விடுதலையை வழங்க மாட்டாது என்பதை விரைவில் உணர்ந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அரசியல் விடுதலையைப் பெற்ற போதும் மேற்கு நாடுகளின் அரசியல், பொருளாதார, சட்ட ஒழுங்கமைப்புகளுக்குக் கட்டுப்பட்டனவாக இருப்பதை மூன்றாம் உலக நாடுகள் விரைவிலேயே உணர்ந்து […]

மேலும் பார்க்க

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கலன சேனரத்தின ஐரோப்பாவின் 35 நாடுகள் ஒன்று கூடி 1975 ஆம் ஆண்டில் ஹெல்சிங்கி நகரில் ‘Helsinki Final Act’ எனப்படும் ஆவணத்தை இயற்றின. ஐரோப்பாவின் பாதுகாப்பும் கூட்டுறவும் பற்றிய (Conference on Security and Cooperation in Europe) அம்மாநாடு ‘CSCE’ என்ற சுருக்க எழுத்தால் அழைக்கப்படும். ‘CSCE’ இயற்றிய மேற்படி ஆவணம் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனத்தில் கூறப்பட்ட ‘Peoples’ என்ற சொல்லை உபயோகித்ததோடு, […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்