Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

மலையக வாழ்வியலில் விளையாட்டுப் பாடல்கள்

16 நிமிட வாசிப்பு

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு இனமும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதிலும், தமது பண்பாட்டு வாழ்வியல் கோலங்களை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் ஓர் இனம் உலகில் வாழ்வதையும், தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதையும் வெளிக்காட்டிக் கொள்வதற்காகப் பல்வேறு வழிமுறைகளைத் தொடர்ச்சியாகக் கையாண்டு வருகின்றது. இதுவே ஒரு சமூகத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பாலமாகவும் திகழ்கிறது. இதன் காரணமாகவே, மனிதனிடம் இயற்கையாகவே அமைந்த கலை […]

மேலும் பார்க்க

கடலோரப் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உணவு சேகரிப்பவர்கள்: கடலோடுதலும் இலங்கையின் யாழ்ப்பாணம், வேலணையில் ஆரம்பகாலத் தீவுக் குடியேற்றமும் (இற்றைக்கு ஏறத்தாழ 3,460 ஆண்டுகளுக்கு முன்னர்) – பகுதி 2

78 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: திலங்க எம். சிறிவர்தன, இந்திக்க ருவன் ஜயசேகர, ஜனீனா நோனிஸ், நதீர எச். திஸாநாயக்க மற்றும் ஜூட் பெரேரா கற்கள் தொழில்நுட்பம் குப்பைக் குவியலில் உள்ள கற்களின் தொகுப்பில் முதன்மையாகப் படிகம் (92%) உள்ளது, மேலும் சிறிய அளவில் செர்ட் (5%) மற்றும் சுண்ணாம்புக்கல் (2%) ஆகியவையும் உள்ளன. படிகம் மற்றும் ‘செர்ட்’ செதில்கள் உள்ளூர் அல்லாத பொருட்கள் (அட்டவணை 6, படங்கள் 10 மற்றும் 12C மற்றும் […]

மேலும் பார்க்க

இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI), 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) 20ஆவது ஆண்டு நிறைவு’ தொடர்பான நிகழ்வில் அளிக்கப்பட்ட உரைகள் 

18 நிமிட வாசிப்பு

உரை – 1: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் ஆற்றிய அறிமுக உரை பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நடைமுறைக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நிகழவிருக்கும் இந்த விவாதத்திற்கு ‘மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்’ (CPA) சார்பாக, உங்களை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ‘மனித உரிமைகள் மேம்பாட்டு மையத்துடன்’ (CHRD) இணைந்து இத்தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வதில் எமது ‘கொள்கை மாற்றங்களுக்கான மையம்’ மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. […]

மேலும் பார்க்க

தென்ஆசிய நிலவமைப்பியலும் நிலவியலும் – பகுதி 2

27 நிமிட வாசிப்பு

தீபகற்ப இந்தியா தீபகற்பமாக விளங்கும் இந்திய உபகண்டத்தின் தென்பகுதி – வடக்கே நிலத்தொடர்பாலும், மற்றைய மூன்று பக்கங்களிலும் – மேற்கே அரபுக் கடலாலும், தெற்கே இந்து மாகடலாலும், கிழக்கே வங்காளக் கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நிலம் தெற்கு நோக்கிச் செல்லச் செல்லச் சுருக்கமடைந்து தெற்கே குமரி முனையில் முடிகிறது. இந்தியத் தீபகற்பத்தின் வடக்கெல்லையான விந்திய மலைத்தொடர் கங்கைச் சமவெளியின் தென் எல்லையைத் தழுவிக்கொண்டு கிழக்கே பீகாரில் ராஜ்மஹால் குன்றுவரை பரந்திருக்கிறது. […]

மேலும் பார்க்க

இலங்கையின் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள்

15 நிமிட வாசிப்பு

பற்றிக் பீபிள்ஸ் (Patrick Peebles) என்ற ஆய்வாளர் ‘Social Change In Nineteenth Century Ceylon (1995)’ என்ற நூலை எழுதினார். 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தோற்றம் பெற்ற முதலியார்கள் என்ற உயர் சமூகக் குழு (Social Elites) பற்றி பற்றிக் பீபிள்ஸ் இந்நூலில் விரிவாக ஆராய்கிறார். இக்கட்டுரை, பற்றிக் பீபிள்ஸ் அவர்கள் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள் வகுப்பு பற்றிக் கூறியிருப்பவற்றைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உயர்குழாம் […]

மேலும் பார்க்க

பயத்துடன் உறையும் பக்தி: மலையகத்தில் முனி வழிபாடுகள்

18 நிமிட வாசிப்பு

கிராமிய சமய மரபில் எல்லாம் வல்ல ஆற்றல் கொண்ட கடவுள் என்பது காணப்படுவதில்லை. இதுவே கிராமிய சமயங்கள் பல தெய்வ மரபுகளை உருவாக்கிக் கொண்டுள்ள காரணமாகும். இதன் அடிப்படையில் நோக்கும் போது, மலையகச் சமூக அசைவியக்கத்தில் பல்வேறு கிராமியத் தெய்வங்களையும் வேறுபட்ட வழிபாட்டுச் சடங்குகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இம்மக்களின் பண்பாட்டு வாழ்வியலில் முனி வழிபாடு என்பது தனித்துவமான சமூக-மானிடவியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமிய வழிபாட்டு மரபாகும். முனி வழிபாடு […]

மேலும் பார்க்க

போருக்குப் பின் பேசுதல்: மொழியும் மௌனமும் அன்றாடப் பேச்சும் – பகுதி 2

46 நிமிட வாசிப்பு

மௌனத்தைக் கற்றல்: குழந்தைப்பருவம், குடும்பம், பேச்சின் தார்மீகக் கல்வி மௌனம் என்பது அரிதாகவே ஓர் உள்ளுணர்வு சார்ந்த எதிர்வினையாகும். அது கற்றுக்கொள்ளப்படுகிறது. மொழியைப் போலவே, மௌனமும் கவனித்தல், பின்பற்றுதல், திருத்துதல், சமூக வாழ்வில் மீண்டும் மீண்டும் பங்கேற்பதன் மூலம் பெறப்படுகிறது. சில விஷயங்களை எப்போது பேசாமல் இருக்க வேண்டும், எந்தக் கேள்விகளைப் பொதுவெளியில் கேட்கக்கூடாது, அல்லது கேட்பவர்கள் மற்றும் இடத்தைப் பொறுத்து உரையாடல்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை குழந்தைகள் அறிந்தே […]

மேலும் பார்க்க

மன்னார் கடற்கரை அரிப்பு: மூழ்கும் வாழ்க்கை, மறைக்கப்படும் குரல்

22 நிமிட வாசிப்பு
August 13, 2026 | அஸாம் ஷா

கடல் முன்னேறுகிறது. நிலம் பின்வாங்குகிறது. 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிகிறது. மன்னார் கடற்கரை அரிப்பு ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமல்ல — இது திட்டமிடல் தோல்வி, சட்ட மீறல், பெண்களின் மறைக்கப்பட்ட இழப்பு. ரீட்டா வசந்தி (வயது 54), மன்னார் தீவின் ஜிம்பிரவுன் நகர் என்னும் சிறிய கிராமத்தில் வாழ்கிறார். “என் குழந்தைப் பருவத்தில் நான் விளையாடிய நிலம் இப்போது கடலுக்குள் போய்விட்டது. நாங்கள் குளிக்கச் சென்ற கிணறு இப்போது […]

மேலும் பார்க்க

எம்.எஸ். மாரிமுத்துவும் சோமு பெரீ. இருளப்பாவும்: கம்பளை – கண்டியின் இரு வீதிப்பாடலாசிரியர்கள்

23 நிமிட வாசிப்பு

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் பரவல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையங்களாகக் கம்பளையும் கண்டியும் விளங்குகின்றன. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் முழுமையான நிர்வாகமும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் பெருந்தோட்டப் பொருளாதார முறையின் அறிமுகத்திலும் வளர்ச்சியிலும் கண்டி மாவட்டமும், குறிப்பாகக் கம்பளைப் பிரதேசமும் முக்கியத்துவம் பெற்றன. கம்பளை, சிங்கபிட்டியப் பிரதேசத்திலேயே 1823ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது கோப்பித் தோட்டம் உருவாக்கப்பட்டது. […]

மேலும் பார்க்க

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நல நிலை

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: திரு. என். கந்தசாமி (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைகள் பிரிவு, இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்கான இயக்கம் [Movement for Interracial Justice and Equality – MIRJE], இலங்கை) அறிமுகம் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் வரலாறு, அந்த நாட்டில் நிலவுகின்ற தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் பின்னணியில், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நலம் தொடர்பான நிலைமைகள் குறித்து விவாதிப்பதாக இந்தக் கட்டுரை அமைகிறது. அந்த வகையில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்