மலையகத்தில் நிகழ்த்தப்படும் பல்வேறு சடங்கு முறைகளில், நோய் தீர்த்தல் பொருட்டு செய்யப்படும் சடங்குகள் மிக முக்கியமான இடத்தினைப் பெறுகின்றன. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து குடியேறிய காலத்தில் நீண்டதூர ஆபத்தான பயணம், கள்வர் பயம், காடுகளுக்கூடாகப் பயணம் செய்யும் போதும், பெருந்தோட்டங்களை அமைப்பதற்காகக் காடுகளை அழிக்கும்போதும் ஏற்பட்ட விபத்துகள், கொடிய மிருகங்கள், ஜந்துகள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு, வெளியுலகத் தொடர்புகள் குறைவான தனிமையான வாழ்க்கை, மழை, வறட்சி, குளிர், கடுங்காற்று, வெள்ளம், […]