Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தொடர்கள்

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் உள்நாட்டுப் போர் முறையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், வடக்குக் கிழக்கில் ‘அமைதி’ என்பது எங்கும் நிறைந்த ஆனால் புரிந்துகொள்ள முடியாத ஒரு வார்த்தையாக மாறியுள்ளது. இது அரசாங்க விவாதங்களில், மேம்பாட்டுத் திட்டங்களில், அரசு சாரா நிறுவன அறிக்கைகள் மற்றும் சர்வதேச மதிப்பீடுகளில் ஓர் அடையப்பட்ட நிபந்தனையாகப் பரவுகிறது. வன்முறை முறியடிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்டதற்கான சான்றாக இது காண்பிக்கப்படுகிறது. சாலைகள் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன, சந்தைகள் […]

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காகக் குடிபெயர்ந்து வந்த தென்னிந்தியத் தமிழர்கள் பல சவால்களை எதிர்நோக்கினர். இலங்கையில் அவர்களது சமூகம் மற்றும் தேசிய அரசியலில் அவர்களின் பங்களிப்பு ஒரு கட்டத்தில் எழுச்சி நிலையில் இருந்துள்ளது. பின்னர் அவர்களது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. அடுத்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய கல்வி வாய்ப்புகள் அவர்களை வளர்ச்சி பெற்றுவரும் ஒரு சமூகமாக மாற்றமடையச் செய்துள்ளது. இந்த மூன்று மாற்றங்களையும்  கால அடிப்படையில் எடுத்து […]

மரணச் சடங்குகள்  மரணச் சடங்குகள் என்பவை வெறும் உடல் சார்ந்த இறுதி நிகழ்வுகள் மட்டுமல்ல; அவை சமூகத்தின் ஆன்மிகம், தத்துவம், உறவுமுறை மற்றும் வாழ்வியல் விழுமியங்களின் ஆழமான வெளிப்பாடுகளாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் கடந்து வரும் பதினாறு நிலைகளில், இறுதிச் சடங்கு என்பது மிகவும் முக்கியமானது. மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் மாறுதல் அல்லது இடப்பெயர்வு […]

நாட்டுப்புறப் பாடல்கள் ஆண்டுகள் பல கடந்தும் மக்களின் மனதை உறுத்துகின்றன என்றால், ஆய்வாளர்களைத் தேடித்தேடி ஆய்வு செய்யத் தூண்டுகின்றன என்றால், இதன் ஆழமும் அகலமும் விரிவானதே. உலகில் மனிதன் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் நாட்டுப்புற வாழ்வியலைப் பேசும் இலக்கியமும் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு இனத்தினதும் மொழியினதும் அடிப்படை இலக்கியமாகவும் மூல இலக்கியமாகவும் திகழ்வது நாட்டுப்புற இலக்கியமே ஆகும். இன்று உலகில் பேசப்படுகின்ற புராண, இதிகாசக் […]

இந்தியாவும் காலனித்துவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக […]

ஆங்கில மூலம்: அருட்தந்தை நோயல் டயஸ் இலங்கையில், சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தனிநபருக்குரிய உரிமையைப் பாதுகாப்பதில் மிகவும் கடினமான பிரச்சினையாக இருப்பது, சர்வதேசரீதியான கடப்பாடுகளை அங்கு அமுல்படுத்துவதில் உள்ள சிக்கலாகும். இலங்கை முழுமையான இணக்கத்துடன் செய்துகொண்டுள்ள இரண்டு முக்கியமான ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தன. இதில் முதலாவது, ‘சித்திரவதைகள், பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது மோசமான தாக்குதல்கள் அல்லது தண்டனைகள்’ என்பவற்றுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டின் (இனி இது இக்கட்டுரையில் CAT […]

செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும், டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்கச் […]

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட கலாநிதி நியூட்டன் குணசிங்க 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தார். அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை கம்பளை விக்கிரமபாகு மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று 1968ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர, லக்சிறி ஜயசூரிய ஆகியோர் பேராதனையில் இவரது […]

தற்காலிக வதிவிட விசாவில் இலங்கை வந்த வி.எஸ். கோவிந்தசாமி தேவர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் கொழும்பு பணிமனையில் கடமையாற்றி, எழுபதுகளில் தாயகம் திரும்பியுள்ளார். ஐம்பதுகள் முதல் நாடு திரும்பும் வரை பல பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். ஏனையோரைப் போல் பிரஜாவுரிமை மறுப்பைப் பற்றிப் பாடியுள்ள இவர், தற்காலிக வதிவிட விசாவில் வந்த இந்தியத் தமிழர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளைப் பற்றியும் எழுதியுள்ளார். வதிவிட விசாவில் வந்தவர்களின் பிரச்சினை பற்றி இவர் […]

ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் பதிப்பு நெறிமுறைகளை அவர்களின் பதிப்பு நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆராய்வதாக இத்தொடர் கட்டுரைகள் அமையவிருப்பதினை முன்னரே கூறியுள்ளோம். அவ்வகையில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் மிகவும் இன்றியமையாதவர் ஆறுமுக நாவலர் ஆவார். நாவலர் காலகட்ட சமுதாய நிலையினைக் குறித்தும் அவரது நன்னூல் பதிப்பு முறைகள் குறித்தும் காணலாம்.  ஆறுமுக நாவலர்  19 ஆம் நூற்றாண்டில் தமிழுக்குத்தொண்டு செய்த மிகப்பெரும் தமிழறிஞருள் தலையானவர் ஆறுமுக நாவலர். இலங்கையில், யாழ்ப்பாணம், நல்லூரில் வாழ்ந்த […]

குமுதினிப் படகுப் படுகொலைகள் குமுதினிப் படகுப் படுகொலைகள், 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். […]

5.3 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உத்தேச விவசாயத்துறைக் கொள்கை 5.3.1 அறிமுகம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சுருக்க நிலைகளுக்குப் பிறகு, தற்போது மீட்பு நிலையை நோக்கி நகர்ந்து வருவதுடன், நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியையும் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் சுமார் 4–5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. சமீபத்திய காலாண்டு வளர்ச்சிகள், குறிப்பாக தொழில்துறை மற்றும் […]

‘சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சம்ராஜ்யம்’ முதன் முதலில் 1776 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஐம்பது இராச்சியங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்து விடுதலை பெற்ற வட – அமெரிக்கப் பிராந்தியத்தில் சிறிய சறுக்கலைச் சந்தித்தது. சுதந்திர வேட்கையுடன் புதிதாக உருவான ‘ஐக்கிய அமெரிக்க இராச்சியங்களின் ஒன்றியம்’ தொடர்ந்தும் முன்னேறி வடக்கு முழுமையையும் பிரித்தானியப் பிடியில் இருந்து விடுவிக்க முற்பட்ட போதிலும் இயலவில்லை; நயாகரா நீர்வீழ்ச்சியின் வடக்கை கனடா எனும் பிரித்தானியக் குடியேற்றப் […]

பால்தேயஸ் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்பு, இலங்கைத் தமிழர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் இன்னுமொரு தமிழ் வேதத் திருப்புதலுக்கு (மொழிபெயர்ப்பிற்கு) காத்திருக்க வேண்டியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் காலனிய யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவத் திருமறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் தமிழ்மொழி வடிவம் பெற்றன. இந்த முயற்சிக்கு வழிவகுத்த இரண்டு நபர்களும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்; இருவரும் இந்தியாவில் பிறந்து பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியவர்கள். அவர்களில் ஒருவர் டச்சு – தமிழ்க் கலப்பின சமூகத்தினரான அட்ரியன் […]

கந்தரோடை ஸ்தூபிகள். Source: Sri Lanka Guardian. முன்னுரை பௌத்த மரபுக் கதைகளின்படி புத்த பிரான் தனது வாழ்நாட்களில் வருகை தந்த இடங்களில் நாகதீபமும் (நாகதீவு – நாகநாடு) ஒன்றாகக் கூறப்படுகிறது. புத்த பிரானின் காலத்தில் இலங்கையில் நாகர்கள் ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் நாகதீபமும், மேற்குக் கரையிலிருந்த கல்யாணியும் முக்கியமான இடங்கள் என இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நூலில் கூறப்படும் ஒரு […]

மகாத்மா காந்தி இலங்கைக்கு 1927 நவம்பர் 12 இல் வந்தார். மறுநாள், நவம்பர் 13 இல், லண்டனில் இருந்து டொனமூர் ஆணைக்குழுவினர் வந்திறங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கையின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வலுவைப் பெற்றிருந்தன. ஆனால், ஒன்று, குறுகிய கால விளைவுகளை மட்டும் ஒரு குறுகிய பிரதேசத்தில் உண்டுபண்ணி வலுவிழந்து மறக்கப்பட்டது. மற்றது, அரசியல் வரலாற்றின் போக்கினைத் திசை திருப்பியது. மறக்கப்பட்ட நிகழ்வு மகாத்மாவின் […]

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தாராண்மை மறுப்பு அரசு இலங்கையில் பின்காலனித்துவ அரசு ஒன்று தாபிக்கப்பட்டு 64 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த அரசு பயணித்த பாதையினையும், அதன் பயணத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் திரும்பிப் பார்ப்பதற்கும், பரிசீலனை செய்வதற்கும் இந்த நீண்ட இடைவெளி எமக்குப் பயனுடையதாக உள்ளது. நாம் ஒரு காலப்பகுப்பு ஒன்றைச் செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் இப் பின்காலனித்துவ அரசை நிர்வகித்த அரசாங்கங்கள் எவை? அவற்றின் […]

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பிற்பட்ட காலத்தில் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் (State Reform) ஒற்றையாட்சி – சமஷ்டி (Unitary – Federal), சிங்களவர் – தமிழர் என்ற எதிர் இணைகளின் அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டதை (Polarisation) இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக்காட்டினோம். அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகளான றொபர்ட் என். கெயர்ணி (Robert N. Kerney) என்பவரும், இலங்கையரான ஏ.ஜே. வில்சனும் அரசமைப்பைத் திருத்தும் விவாதம் இனத்துவத் தேசியவாதங்களின் அடிப்படையில் திசை […]

அறிமுகம் நீண்ட மரபுடைய தென்மோடிக் கூத்து தமிழர்களுக்கு உரிய பாரம்பரியக் கூத்து வடிவமாகும். இதன் அடிமுடி தேடிச் சென்றால், நாங்கள் சோழர் காலத்துக்குச் செல்ல வேண்டும் என்பது எனது புரிதல். சோழர் காலத்தில் இரண்டு வகையான கூத்துகள் ஆடப்பட்டன என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன. ஒன்று ஆரியக் கூத்து; இன்னொன்று தமிழ்க் கூத்து. ஆரியக் கூத்து என்கின்ற சொற்றொடரே அது வெளியில் இருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது அல்லவா? ஆனால் […]

விக்டர் டி மங்க் (Victor de Munck) மற்றும் கிறிஸ்தோபர் மனோகரன் (Christopher Manoharan) ஆகிய ஆய்வாளர்கள் குடாலிக் கிராமத்தில் மேற்கொண்ட தங்களது களப்பணி மூலமான ஆய்வான “Accessing the Interiority of Others: Sufism in Sri Lanka“ இல், மேலும் பல விடயங்களை இலங்கையில் சூஃபித்துவம் சார்ந்து பகிர்ந்துகொள்கின்றனர். குடாலியில் உள்ள வயது வந்த ஆண்களில் கிட்டதட்ட முந்நூறு பேர் காதரி வரிசையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். […]

1 சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தோட்டத் தொழிலாளரின் ஊதியப் பிரச்சினை முதன்முதல் பரந்தளவிலான கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்காலத்தில்தான் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்; கருமுத்து தியாகராஜச் செட்டியார் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை விரிவான சான்றுகளுடன் விவரித்து, அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய தேவையை வலுவாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியில், இந்திய அரசு தோட்டத் தொழிலாளர் வாழ்வை மேம்படுத்தும் […]

முன்னுரை 1990 களில் மேற்குலகச் சிந்தனைப் பரப்பில் அங்கீகரித்தலின் அரசியல் பற்றிய சிந்தனையின் மீள்வாசிப்பை அறிமுகப்படுத்துகின்ற செல்நெறியை ரெய்லர் (1992), ஹோனரத் (1992), (f) பிறசேர் (1995 – 1997) போன்றோர் முன்னெடுத்திருந்தனர். இவர்களின் கருத்தியல் கட்டமைப்பு ரீதியான பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது. பின் – காலனித்துவ அரசியல் வரலாற்று வெளியில் சிறு குழுமங்கள், இனங்கள் தாராளவாத சனநாயக பண்பாட்டு நாகரிக முறைமைக்குள் உள்ளீர்க்கப்பட்டு தமது தனித்துவ அடையாளங்களை இழந்து […]

ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களால் போற்றப்பட்டு வழங்கும் கண்ணகி வழிபாட்டு மரபினை வலுப்படுத்தும் வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினைப் படைத்தார். சிலப்பதிகாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பானது அக்காலத்தில் வழக்கிலிருந்த ஆசீவக மெய்யியலை பெரிதும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. சிலப்பதிகார காலத்திற்குப்பின் தமிழ்ச் சமுதாயம் பல்வகைச் சமய நுழைவுகளுக்கும் இடங்கொடுக்க வேண்டியதாயிற்று; சிலப்பதிகாரக் கால மெய்யியல் மரபுகளின் வீழ்ச்சியினையும் கடக்க வேண்டியதாயிற்று. இவ்வாறான பல்வேறுபட்ட சூழலிலும் ஈழத்தில் கண்ணகி வழிபாடென்பது மரபறாத் தொடர்ச்சியினையுடையதாக இன்றளவும் நடைமுறையில் […]

ஆங்கில மூலம்: ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா  இலங்கையின் அரசியலில் சமயமும் வன்முறையும் (Religion, Politics and Violence in Sri Lanka) என்னும் பொருள் குறித்த சமூகவியல், வரலாற்று ஆய்வாக (Sociological and Historical Study) அமையும் ‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ (Buddhism Betrayed?) என்ற நூலை மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா அவர்கள் 1992 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். அந்நூலின் 2 ஆம், 3 ஆம் அத்தியாயங்களில் கூறப்பட்ட […]

தமிழில்: த. சிவதாசன் “நாங்கள் இன்னும் அதிகமாக ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டும்” – இச்சொல்லாடலை நாங்கள் பலதடவைகள் கேட்டுவிட்டோம். அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள், பல்தகமை கொண்ட பலவகையான கருத்தாளர்கள் எனப் பலரிடமிருந்தும் பல தடவைகள் இதைக் கேட்டுவிட்டோம். இது அந்தளவுக்கு அப்பட்டமானதோர் உண்மையாயிருக்க, அதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டும்? இது எங்களுக்கு எப்போதே தெரியும். அப்படியிருந்தும் இது குறித்து நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? ஏற்றுமதி வர்த்தகம் என்பது […]

“சமூகத்திடமிருந்து ஒருவர் பண்பாட்டைக் கற்கும் போது தன் சுய படைப்புத் திறன் மூலம் அறியாமல், கடந்த காலத்தின் மரபுத் தொடர்ச்சியாக, முறைசார் – முறைசாராக் கல்விகள் மூலமாகவே அறிகிறார்” என்று பண்பாட்டின் தொடர்ச்சி பற்றி ராபர்ட் ஹெலூவி கூறுகின்றார். ஒரு சமூகத்தின் அல்லது குழுமத்தின் தனித்துவத்தை அடையாளங்களினூடாக இனங்காண்பதிலும், அவற்றின் பாரம்பரியங்களை அறிந்து கொள்வதிலும் பண்பாட்டம்சங்கள் பெறுமானமுடையவையாகக் காணப்படுகின்றன. பண்பாட்டம்சங்கள் சமூகத்தின் ஒவ்வோர் துணுக்குகளிலும் அல்லது அதைவிட நுணுக்கமாக சமூகத்தின் […]

லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் முன்னைய சில கட்டுரைகளில் பார்த்தோம். இனி தென்மராட்சிப் பிரிவில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாக மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். இந்தக் கட்டுரை தென்மராட்சிப் பிரிவின் சாவகச்சேரிக் கோவிற்பற்றைப் பற்றி ஆராய்கிறது. சாவகச்சேரிக் கோவிற்பற்றில் சாவகச்சேரி, சரசாலை, மட்டுவில், மீசாலை, தனங்கிளப்பு ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது […]

தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புகள் எந்த வடிவங்களில் இருந்தாலும் அவை சமூகத்தில் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். பால், பால்நிலை அசமத்துவமானது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துகின்றது. பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான […]

பண்டுதொட்டு தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. இத்தொடர்புகளே தமிழகத்தில் இருந்து மக்கள் புலப்பெயர்ச்சி, அரசியல் படையெடுப்பு, வர்த்தகம், பண்பாடு என்பன இலங்கையில் ஏற்படக் காரணமாகியது. இதில், வட இலங்கையின் அமைவிடம் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைவிடத் தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால் தமிழகத்தின் செல்வாக்கை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் படிக்கல்லாக இது திகழ்ந்தது. இச்செல்வாக்கு சங்ககாலத்தில் மிகச்சிறப்பாக இருந்ததை கட்டுரை ஆசிரியர் பூநகரி வட்டாரத்தில் கண்டுபிடித்த முதுமக்கள் […]

இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. தமிழர்கள் மத்தியில் உருவாகி இருந்த மதமறுமலர்ச்சி இயக்கம், ஆறுமுக நாவலர் என்று அறியப்படும், கந்தப்பிள்ளை ஆறுமுகப்பிள்ளை என்ற ஆளுமைமிக்க, ஒருவரின் பெயரோடு பின்னிப்பிணைந்தது. அது ஒரு மக்கள் இயக்கமாக அன்றி, ஆறுமுக நாவலரினதும் அவரது சகாக்களினதும் செயற்பாடுகளின் தொகுப்பாகவே அமைந்தது. ஆனால் சைவ மதத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், தமிழுக்கும் வழங்கப்பட்டதால் மொழிசார்ந்த தேசியவாதம் இங்கு உருவானது. 1879 இல், […]

திரட்டுகள்

பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றிய மக்களின் கலைரசனைக்குரிய பொருளாக இருப்பது புத்தர் சிலைகளாகும். இவை பௌத்த மதத்தின் வழிபாட்டுப் பொருளாக மட்டுமன்றி, சிற்பக் கலையின் முக்கிய  கவின்கலைப் பொருளாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இச்சிலைகள் இருக்கும் நிலையிலும், நிற்கும் நிலையிலும், கிடக்கும் நிலையிலும் காணப்படுகின்றன. ஆந்திராவில் மகாயான பௌத்த மதம் அடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து கி.பி. 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் இச்சிற்பங்களை ஆக்கும் மரபு தோற்றம் பெற்றாலும் இலங்கையில் இதன் […]

ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன (சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை […]

பதிவுகள்

மலையகத்தின் கூத்துக் கலைகள் பொன்னர் – சங்கர்  மலையகத் தமிழர்களிடையே மட்டுமே நிகழ்த்தப்படும் ‘பொன்னர் – சங்கர்’ கூத்தின் மையக் கருவாக, குண்ணுடையான், தாமரை நாச்சி ஆகியோரின் மரணமும், அவரது குழந்தைகளான பொன்னர், சங்கர், தங்காள் ஆகியோரின் சோகமும் துயரமும் அமைந்துள்ளன. இக்கூத்து, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தோட்டங்களிலும், குறிப்பாக நோர்வூட், போற்றி, சீனக்கொல்லை, வீரட் தோட்டங்கள், மஸ்கெலிய, காட்மோர், அரசித் தோட்டம், புளூம்பில்ட், […]

அறிமுகம் இலங்கை மலையகத் தமிழர்கள் என்பவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், தென்னிந்தியக் கிராமங்களில் இருந்து பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் ஆறு முதல் எட்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாவர். 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் […]

உலகில் உள்ள ஜீவராசிகளின் உயிர்வாழ்வுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். உலகிலே மொத்தமாக 1400 மில்லியன் கனகிலோமீற்றர் நீர் உள்ளது. உலகச் சமநிலையில் இதன் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது (ஆனால் இதன் இருப்பின் விகிதத்தையே மாற்ற முடியும்). பூமியில் உள்ள மொத்த நீரில், 97.4% ஆனது உப்பு நீராகும். எஞ்சிய 2.6% மட்டுமே நன்னீர் ஆகும். இந்த 2.6% நன்னீரில், சுமார் 2% ஆனது பனிக்கட்டியாகத் துருவங்களிலும் […]

இலங்கையின் மலையகத் தமிழரின் வரலாறும் பண்பாடும் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை நாம் அறிவோம். பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியின் சாபக்கேடுகளில் ஒன்றாக நிகழ்ந்த மாபெரும் புலப்பெயர்வுகளில் மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் உள்ளடங்கியுள்ளது. அது மனிதகுல வரலாற்றில் ஒரு நெடும் பயணம் (Long Walk) என அவுஸ்திரேலிய நாட்டவரான வென்டன் ட்ரைசன் என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது தி லோங் வோக்’ (The Long Walk) என்ற […]

ஆவணப்படங்கள்

இந்தியா உட்பட பலநாடுகளில் தடைசெய்யப்பட்ட கடலட்டை வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியானது, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தமிழர் தேசத்தின் வடக்கு – கிழக்கு கடற்பரப்புக்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடம் இருந்த பொருண்மியத் (Economy) தேவைகளைக் குறிவைத்து இங்குள்ள கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்ற பின்புலத்தோடு கொண்டுவரப்பட்டதாகவே பல சமூக ஆர்வலர்கள் மற்றும் கடல்வள ஆராய்ச்சியாளர்களது கருத்தாக உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட […]

‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கிறது. அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும் கண்ணீரும் கோபமும் ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இது வலியுறுத்துகின்றது, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தை கேள்விக்குட்படுத்துகிறது. இந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் அமரர் அ. சேகுவேராவால் (இசைப்பிரியன்) அவர்களது மறைவால் காலதாமதமாக வெளிவந்தாலும் […]

வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், […]

காணொலிகள்

சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]

மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.

உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]

நூல்கள்

சஞ்சிகைகள்

குறுநூல்கள்

கருத்துரைகள்

‘உத்தியாக்கள்’ என்பது ‘முன்னோர்கள்’ எனப் பொருள்படும். அதாவது வேடர்கள் தமது முன்னோர்களை அவர்களது மொழியில் ‘உத்தியாக்கள்’ என அழைப்பது வழக்கம். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது அணிந்துரையில், திராவிட மொழியில் ‘உத்தி’ என்பது ‘மேலே’ என்பதைக் குறிக்கும் என்கிறார். அப்படியானால் மேலே சென்றவர்களை, அதாவது முன்னோர்களைக் குறிக்கும் என்கிறார். இந்நூலானது அணிந்துரை தொடக்கம் பதினொரு அத்தியாயங்களுடன் பின்னணைப்புகள் ஈறாக 176 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வேடர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் […]

பேத்தாளை பொது நூலகத்தில் இடம்பெற்ற ‘நிலா முற்றம்’ நிகழ்ச்சியில் கமலநாதன் பத்திநாதன் அவர்களுடைய ‘உத்தியாக்கள்’ நூல் மீதான என்னுடைய வாசிப்பு அனுபவ உரையினை உலக ஆதிவாசிகள் தினமான இன்று (2025.08.09) பகிர்ந்து கொள்கின்றேன். தான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி, அதுவும் காலந்தோறும் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தன் சமூகம் குறித்து, அவர்களது வாழ்வியல், பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்து முறைப்படுத்தி ஒரு நூலாக வெளியிட்டிருப்பது, அந்த சமூகத்திற்கு அவர் […]

நூல்: யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும் தொகுப்பும் தமிழாக்கமும் : கந்தையா சண்முகலிங்கம் பதிப்பகம்: எழுநா ஆண்டு: 2025 பக்கங்கள்: 268 விலை: 1, 500 இலங்கை ரூபா ஈழத் தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றின் ஊடாகக் கட்டமைந்த ஒன்று. இந்த வரலாறு என்றுமே உறைபனியல்ல. அது ஓடும் ஜீவநதி. அதனால்தான் இந்தியத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் ஈழச் சமூகம் மாறுபட்ட தொன்மை, தொடர்ச்சி, அசைவியக்கங்களைக் கொண்டுள்ளது. […]

தோழர் மீநிலங்கோ தெய்வேந்திரன் எழுதி, ‘எழுநா’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘பசுமை எனும் பேரபாயம்’ என்கிற நூல். இதன் விலை: 1400 இலங்கை ரூபாய். இலங்கைச் சூழலில் சூழலியம் சார்ந்து வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல் இது. உலகமயம் என்கிற மாயக்கரம் எல்லை தாண்டி மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களை, அபிவிருத்தித் திட்டங்கள் என்கிற பெயரில் கொள்ளையிடுகின்றன. மிதமிஞ்சிய வளச்சுரண்டல் எம் நாடுகளைப் பாலைவனமாக்கக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில் அபிவிருத்தித் […]

நிகழ்வுகள்

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி,…

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 25.02.2026 (புதன்கிழமை)…

மக்கள் கலை இலக்கியப் பேரவையின் 'நூறு மலர்கள் மலரட்டும்' புத்தக அரங்க விழாவில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் பசுமை எனும் பேரபாயம்…

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடாகிய, திரு. க. பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' நூலின்…

எழுநா பற்றி

எழுநா, ஈழமும் ஈழம் சார்ந்த ஆய்வும் இடைவெட்டும் பரப்பை 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்று வரையறுத்துக் கொண்டு, ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுகளை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற இலாப நோக்கற்ற அமைப்பாகும்.