கிருபாகரன் கவிதாஞ்சன், Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கிருபாகரன் கவிதாஞ்சன்

இலங்கையில் சிங்கள மக்களிடையே கண்ணகி வழிபாடு

8 நிமிட வாசிப்பு

ஈழத்தில் தமிழர் வாழும் இடங்களில் கண்ணகி வழிபாடு நிலைத்திருப்பது போல சிங்கள மக்கள் வாழும் இடங்களிலும் கண்ணகி வழிபாடு பத்தினி வழிபாடாக நிலைபெற்று வருகின்றது. கயபாகு மன்னன் அனுராதபுரியை தலைநகராகக் கொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சிசெய்த போது, கண்ணகியின் காற்சிலம்பை யானை மேல் வைத்து ஊர்வலமாகச் சென்று பெருவிழாக் கொண்டாடினான். இவ்விழாவிற் கலந்துகொண்ட சிங்களக் குறுநில மன்னர்களும் தங்களது பிரதேசங்களிலே இவ்வழிபாட்டை நிலைநிறுத்தினர் என்பது வரலாற்றுக் குறிப்பாகும். […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு

18 நிமிட வாசிப்பு

இலங்கையின் வடக்குப் பகுதியில் கண்ணகி வழிபாடு  கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த விழாவில் கலந்துகொண்ட இலங்கை வேந்தன் கயபாகு மீளும் போது ஜம்புகோளப்பட்டினம் என்ற சம்பில் துறையிலே வந்திறங்கினான் என்று கருதப்படுகின்றது. கயபாகு வேந்தன் கந்தரோடையிலுள்ள அங்கணாமக்கடவையில் பத்தினிக்குக் கோயில் அமைத்துத் தனது உருவச் சிலையையும் கோயில் முன்றலில் நிறுவியிருக்கலாம் என்பர்.1 அடையாளம் காணமுடியாத நிலையிலுள்ள அங்கணாமைக்கடவைக் கண்ணகி கோவில் கந்தரோடையிலுள்ள கதிரமலைக்கு அருகாமையில் இருந்ததாக இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.2 […]

மேலும் பார்க்க

இலங்கையில் கண்ணகி வழிபாடு புகுந்த முறை

12 நிமிட வாசிப்பு

சிலப்பதிகாரம் என்பது தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற ஓர் இலக்கியமாகும். சிலம்பில் கண்ணகி ஒரு வழிபாட்டுத் தெய்வமுமாகிய நிலையில் இலக்கிய வாழ்விற்கான தளமும் வாய்ப்பாகின்றது. தமிழ்ச் சூழலில் சிலப்பதிகாரம் என்ற சொல்லாடல் மூன்று நிலைகளில் நிலைபெற்று நிற்கின்றது. முதலாவது அதனுடைய காவியத்தன்மை, இரண்டாவது அதனுடைய பொதுமக்கள் மயப்பாடு, மூன்றாவது அது சடங்காசாரத்துடன் இணைந்த நிலை. இந்த மூன்று நிலைகளையும் தாண்டி இன்னொரு தளமும் அதற்குண்டு. அது தமிழர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் ஆகிய […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்