
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு கடந்த புதன்கிழமை (29.07.2026) அன்று கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் ‘அரசியல் தீர்வு – எதிர்நோக்கும் சவால்கள்’ ‘கறுப்பு ஜூலை – கற்க மறந்த பாடங்கள்’ மற்றும் ‘செம்மணிப் புதைகுழிகள் – உயிர்த்தெழும் சாட்சியங்கள்’ என்ற தலைப்புக்களில் உரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக எழுநாவின் கலைவட்டத்தின் வெளியீடாகிய ‘வாசலிலே கிருஷாந்தி’ கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதைகள் ச. சனோஜி, கோ. கம்சாயினி, சு. சுருதிகா , ஜீ. ரஜீவன் ஆகியோரால் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து கறுப்பு ஜூலையில் பலியானவர்களினதும், செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களினதும் நினைவாக மெழுகுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பொதுமக்கள், அரசியலபிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
.
