கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 4 of 16
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத் துறைகள் – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக்கூறும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதியொன்றை வெளியிட்டது. இத்தொகுதியின் தலைப்பு ஆங்கிலத்தில் ‘Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Science in Sri Lankan Universities’ என்பதாகும். 1921 ஆம் […]

மேலும் பார்க்க

அநகாரிக தர்மபாலவின் பௌத்த சமயச் சீர்திருத்த இயக்கம்: தனிநபர் அடையாளமும், பண்பாட்டு நெருக்கடியும்

45 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கணநாத் ஒபயசேகர  1 தியோசொபிக்கல் சபை என்ற அமைப்பை 1875 ஆம் ஆண்டில் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், பிளவாட்ஸ்கி அம்மையார் என்ற இருவரும் அமெரிக்காவில் நிறுவினர். கிழக்குத் தேசங்களின் சமயங்களிலும் அவற்றின் ஆன்மிகச் சிந்தனையிலும் அக்கறை கொண்டவர்களான இவர்கள் 1878 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். இந்தியா வந்து சேர்ந்த இவ்விருவரும் சென்னையின் அடையாறு என்னும் இடத்தில் தலைமையகம் ஒன்றை அமைத்தனர். அநகாரிக தர்மபாலவின் வாழ்க்கையில் பெரும் […]

மேலும் பார்க்க

குறைவிருத்தியின் அரசியல் பொருளாதாரம் – எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களின் நூல் பற்றிய அறிமுகம் 

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: சிறான் இலன்பெரும காலஞ் சென்ற அறிஞர் எஸ்.பி.டி.டி. சில்வா (1924-2018) ‘The Political Economy of Under Development’ என்ற பெயரில் அரியதொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலைப் பற்றிய விமர்சன அறிமுகம் ஒன்றை சிறான் இலன்பெரும (Shiran Illanperuma) அவர்கள் ‘Polity’ மே – யூன் 2025 இதழில் எழுதினார். ‘The Development of S.B.D. De Silva’s Political Economy’ என்ற தலைப்பில் அமைந்த […]

மேலும் பார்க்க

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் ஜனநாயகமும்: நேற்று, இன்று, நாளை

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) ‘Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions’ (இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் உள்ளூர் நிலை ஜனநாயகமும்: நிறுவன சமூக பரிமாணங்கள்’) என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலை 2015 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ஆவார். இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாயும், எல்லாமாக எட்டுக் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் அரசுகள் தேசங்களாக (Nation) தம்மை மாற்றிக்கொள்ள முயல்கின்றன. அரசியல், பண்பாட்டு விருத்தி, நாட்டை புவியியல் ரீதியில் ஒன்றிணைத்தல், பொருளாதார விருத்தி, கல்வி விருத்தி என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்புதல் (Nation Building) என்ற தேவையை நோக்கியனவே. ஒரு தேசியக்கொடி, ஒரு தேசியகீதம், வரலாறு, பள்ளி மாணவர்களுக்கான தேசப்படப் புத்தகங்கள் என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிக்காகவே நடைபெறுகின்றன. இத்தாலியை ஒன்றிணைத்த பின்னர் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் ‘நான்காவது உலகம்’ (The Fourth world), அவ்வுலகிற்குள் சிறைப்பட்டிருக்கும் அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என்ற இரு கருத்தாக்கங்கள் உலகின் புவி அரசியலை (Geo – Politics) புரட்சிகரமான புதிய கோணத்தில் நோக்குவதற்கு உதவிய எண்ணக்கருக்களாகும். மிக்சிக்கன் பல்கலைக்கழகம் (1970-1977), பேர்க்லி பல்கலைக்கழகம் (1977-2009) ஆகிய இரு பல்கலைக்கழகங்களிலும் புவியியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் பெர்னாட் நைட்ஸ்மன் (1941-2000) நான்காவது […]

மேலும் பார்க்க

1983 கறுப்பு யூலை பேரழிவின் பின்னரான மே தினம்: இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்கான தீர்வு யாது?

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க 1984 மே 1 ஆம் திகதிய ‘Lanka Guardian’ இதழில் நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘May Day after the July Holocaust’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். கறுப்பு யூலை 1983 இன் பின்னரான முதலாவது மே தினத்தின்போது தமது மனதில் தோன்றிய கருத்துகளை நியூட்டன் குணசிங்க அவர்கள் இக்கட்டுரையில் முன்வைத்தார். இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்கான தீர்வு யாது? என்பதை ஆராயும் […]

மேலும் பார்க்க

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன 1895 முதல் 1910 வரை தொடர்ந்த அரசியல் மோதல்கள் பழமைவாதிகளுக்கும், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கவும், எழுச்சிபெறும் புதிய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை முன்வைத்து வாதம் செய்வதற்கும் ஆற்றல் உடையவர்களான ஆளுமைமிக்க புதிய தலைவர்கள் பலர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றினர். இவர்களில் பெரும்பான்மையினர் உயர்தொழில்களில் சிறப்பெய்தியவர்கள்; சாராயக்குத்தகை முதலாளிகளதும், பெருந்தோட்டங்களினதும், காரீயச் சுரங்கங்களினது முதலாளிகளதும் புத்திரர்களாகவும், மருமக்களாகவும் விளங்கினர். சிலர் […]

மேலும் பார்க்க

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன காலனித்துவ அரசியலில் வர்க்கமும் சாதியும் (Class and Caste in National Politics) என்னும் தலைப்பில் அமையும் இக்கட்டுரை ‘Nobodies to Somebodies: The Rise of Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 18 ஆவது அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பாகும். 1833 முதல் 1948 வரையான காலத்தில் இலங்கையின் தேசிய அரசியலில் வர்க்கம், சாதி என்பனவற்றின் வகிபாகம் பற்றி ஆராயும் இக்கட்டுரையை […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்கு முந்திய அரை நூற்றாண்டு வரலாற்றில் (1900-1948) இலங்கையின் சட்டசபைகளில் அரசியல் பிரதிநிதித்துவம் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன சர்வசன வாக்குரிமையும் கராவ சாதியினரின் வீழ்ச்சியும் 1920களில் சட்டசபை உறுப்பினர்கள், இலங்கையின் அப்போதைய சனத்தொகையின் 4 வீதத்தினரான எண்ணிக்கையுடைய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களோடு நியமன உறுப்பினர்களும் சட்ட சபையில் அங்கம் வகித்தனர். 1920கள் உண்மையில் கராவ சாதியினரின் பொற்காலம் ஆகும். 1925 இல் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகமானதும், சட்டசபையில் அவர்களின் விகிதாசாரம் குறைந்தது. 1930களில் சர்வசன வாக்குரிமை அறிமுகமானதும் கராவ சாதியினரின் சட்டசபை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்