கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 4 of 16
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் வரலாறு

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரத்தின பண்டார, ஜயதேவ உயன்கொட முன்னுரை இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற பாடம் ஒரு கல்வித் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைப் பேராசிரியர் ஏ.எம். நவரத்தின பண்டாரவும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொடவும் இணைந்து எழுதியுள்ள ‘Political Science and Public Policy: Cultivating the Critical Spirit’ என்னும் தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரையில் விவரித்து எழுதியுள்ளனர். இக்கட்டுரை One Hundred Years of Humanities and […]

மேலும் பார்க்க

இந்தியச் சமஷ்டி முறை

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலக நாடுகளின் சமஷ்டி முறைகளில் இந்தியாவின் சமஷ்டி முறை தனித்துவம் மிக்கது. இந்தியாவின் சமஷ்டி முறை அரசியல் யாப்புகளை உருவாக்குதல் (Constitution Making) தொடர்பாகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான முன் உதாரணமாகத் திகழ்வது. சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண ‘Constitution Making in Multi – cultural Societies: Some International Experiences’ என்னும் கட்டுரையில் ‘Success in India’ என்னும் உப தலைப்பின் […]

மேலும் பார்க்க

இலங்கையின் சமய மறுமலர்ச்சி இயக்கமும் முதலாளித்துவமும்: அநகாரிக தர்மபாலவின் வகிபாகம்

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதிய ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் காலனிய காலத்து முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றியும், முதலாளித்துவ வகுப்பின் தோற்றத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் பற்றியும் ஆராயும் நூலாகும். இந்நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம்’ என்ற […]

மேலும் பார்க்க

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத்துறைகள் – பாகம் 2

28 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா ரால்ப் பீரிஸ் அவர்கள் தனக்குக் கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உபயோகித்து நாட்டின் தேவைகளுக்கேற்ற முறையில் சமூகவியல் பாடநெறி ஒன்றை வகுத்து, அதனைச் செயற்படுத்தினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கல்வியின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. ரால்ப் பீரிஸ் அவர்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் சேர்வதும் பின்னர் அடிக்கடி பதவி விலகுவதுமாக இருந்தார். இது சமூகவியல் கல்வித்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக […]

மேலும் பார்க்க

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத் துறைகள் – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக்கூறும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதியொன்றை வெளியிட்டது. இத்தொகுதியின் தலைப்பு ஆங்கிலத்தில் ‘Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Science in Sri Lankan Universities’ என்பதாகும். 1921 ஆம் […]

மேலும் பார்க்க

அநகாரிக தர்மபாலவின் பௌத்த சமயச் சீர்திருத்த இயக்கம்: தனிநபர் அடையாளமும், பண்பாட்டு நெருக்கடியும்

45 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கணநாத் ஒபயசேகர  1 தியோசொபிக்கல் சபை என்ற அமைப்பை 1875 ஆம் ஆண்டில் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், பிளவாட்ஸ்கி அம்மையார் என்ற இருவரும் அமெரிக்காவில் நிறுவினர். கிழக்குத் தேசங்களின் சமயங்களிலும் அவற்றின் ஆன்மிகச் சிந்தனையிலும் அக்கறை கொண்டவர்களான இவர்கள் 1878 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். இந்தியா வந்து சேர்ந்த இவ்விருவரும் சென்னையின் அடையாறு என்னும் இடத்தில் தலைமையகம் ஒன்றை அமைத்தனர். அநகாரிக தர்மபாலவின் வாழ்க்கையில் பெரும் […]

மேலும் பார்க்க

குறைவிருத்தியின் அரசியல் பொருளாதாரம் – எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களின் நூல் பற்றிய அறிமுகம் 

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: சிறான் இலன்பெரும காலஞ் சென்ற அறிஞர் எஸ்.பி.டி.டி. சில்வா (1924-2018) ‘The Political Economy of Under Development’ என்ற பெயரில் அரியதொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலைப் பற்றிய விமர்சன அறிமுகம் ஒன்றை சிறான் இலன்பெரும (Shiran Illanperuma) அவர்கள் ‘Polity’ மே – யூன் 2025 இதழில் எழுதினார். ‘The Development of S.B.D. De Silva’s Political Economy’ என்ற தலைப்பில் அமைந்த […]

மேலும் பார்க்க

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் ஜனநாயகமும்: நேற்று, இன்று, நாளை

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) ‘Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions’ (இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் உள்ளூர் நிலை ஜனநாயகமும்: நிறுவன சமூக பரிமாணங்கள்’) என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலை 2015 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ஆவார். இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாயும், எல்லாமாக எட்டுக் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் அரசுகள் தேசங்களாக (Nation) தம்மை மாற்றிக்கொள்ள முயல்கின்றன. அரசியல், பண்பாட்டு விருத்தி, நாட்டை புவியியல் ரீதியில் ஒன்றிணைத்தல், பொருளாதார விருத்தி, கல்வி விருத்தி என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்புதல் (Nation Building) என்ற தேவையை நோக்கியனவே. ஒரு தேசியக்கொடி, ஒரு தேசியகீதம், வரலாறு, பள்ளி மாணவர்களுக்கான தேசப்படப் புத்தகங்கள் என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிக்காகவே நடைபெறுகின்றன. இத்தாலியை ஒன்றிணைத்த பின்னர் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் ‘நான்காவது உலகம்’ (The Fourth world), அவ்வுலகிற்குள் சிறைப்பட்டிருக்கும் அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என்ற இரு கருத்தாக்கங்கள் உலகின் புவி அரசியலை (Geo – Politics) புரட்சிகரமான புதிய கோணத்தில் நோக்குவதற்கு உதவிய எண்ணக்கருக்களாகும். மிக்சிக்கன் பல்கலைக்கழகம் (1970-1977), பேர்க்லி பல்கலைக்கழகம் (1977-2009) ஆகிய இரு பல்கலைக்கழகங்களிலும் புவியியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் பெர்னாட் நைட்ஸ்மன் (1941-2000) நான்காவது […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்