கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 3 of 16
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

இலங்கையின் அரசமைப்பைத் திருத்துதல் அல்லது சீர்திருத்தம் செய்தல் என்னும் விடயம் ஆங்கிலத்தில் ‘State Reform’ என்ற தொடரால் குறிப்பிடப்படுகிறது. ‘ஸ்டேட் றிபோம்’ என்ற சொற்தொடர் அரசுக்கட்டமைப்பை மாற்றம் செய்தல், அரசமைப்பு ஒன்றின் அங்கங்களுக்கிடையிலான உறவுகளையும், அதிகாரப்பகுப்பையும், மறுகட்டமைப்புச் செய்தல் (Restructuring the State) என்ற விரிந்த பொருள் உடையதுமாகும். அரசமைப்புத் திருத்தம் என்ற தொடரை ‘Amendment to the Constitution’ என்ற குறுகிய பொருளில் இல்லாது அரசுக்கட்டமைப்பைத் திருத்தம் செய்தல் […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட லக்சிறி பெர்ணான்டோ பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களின் மாணவராக கனடாவின் நியு பிரண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பின்பட்டப் படிப்பை மேற்கொண்ட இன்னொருவர் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ (Laksiri Fernando) ஆவார். அவர் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியை ஆரம்பித்தார் (இப்பல்கலைக்கழகம் பின்னர் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது). லக்சிறி பெர்ணான்டோ […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற கல்வித்துறை 1921 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 80 ஆண்டுகளுக்கு மேலாக, பல்கலைக்கழக நிலையில் ஒரு கற்கைத் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் ‘இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞான கல்வியின் வரலாறு’ என்ற தலைப்பிலான கட்டுரை ‘எழுநா’ செப்டெம்பர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அக்கட்டுரை ஏ.எம். நவரட்ண பண்டார, […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் 1833 முதல் 1931 வரை – பகுதி – 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: லக்ஸ்மன் மாறசிங்க குறூ – மக்கலம் சீர்த்திருத்தம் 1911 ஆம் ஆண்டு குறூ – மக்கலம் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் யாப்பு கோல்புறூக் அரசியல் யாப்பின் பிரதான குறைகள் சிலவற்றைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வரையப்பட்ட யாப்பாகும். பிரித்தானிய அரசாங்கம் கோல்புறூக் யாப்பில் அடையாளம் கண்ட குறைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தங்களை நான்காக வகுத்துக் கூறலாம். 1. சட்டசபையில் உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினர்கள் (Official […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: லக்ஸ்மன் மாறசிங்க ‘The Evolution of Constitutional Government in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் அரசியல் யாப்பு ஆளுகையின் (Constitutional Governance) தோற்றமும் அதன் படிப்படியான வளர்ச்சியும் பற்றி வரலாற்று நோக்கில் ஆராயும் நூலாகும். இந்நூலை சட்ட அறிஞரும், பேராசிரியருமான காலம் சென்ற லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் எழுதி வெளியிட்டார். இந்த நூலின் முதலாவது அத்தியாயமான முன்னுரையில் அவர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1950களின் […]

மேலும் பார்க்க

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கம்: பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கம் முதல் 1920 வரையான வரலாறு

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பிரேமசிறி ஹெட்டியாராச்சி ஆய்வாளர் பிரேமசிறி ஹெட்டியாராச்சி அவர்கள் The Local Government in Sri Lanka: The Historical Background என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ‘Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions’ என்னும் நூலின் (2015) முதலாவது அத்தியாயமாக அமையும் (பக். 1-37) இக்கட்டுரை இலங்கையில் […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் வரலாறு

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரத்தின பண்டார, ஜயதேவ உயன்கொட முன்னுரை இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற பாடம் ஒரு கல்வித் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைப் பேராசிரியர் ஏ.எம். நவரத்தின பண்டாரவும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொடவும் இணைந்து எழுதியுள்ள ‘Political Science and Public Policy: Cultivating the Critical Spirit’ என்னும் தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரையில் விவரித்து எழுதியுள்ளனர். இக்கட்டுரை One Hundred Years of Humanities and […]

மேலும் பார்க்க

இந்தியச் சமஷ்டி முறை

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலக நாடுகளின் சமஷ்டி முறைகளில் இந்தியாவின் சமஷ்டி முறை தனித்துவம் மிக்கது. இந்தியாவின் சமஷ்டி முறை அரசியல் யாப்புகளை உருவாக்குதல் (Constitution Making) தொடர்பாகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான முன் உதாரணமாகத் திகழ்வது. சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண ‘Constitution Making in Multi – cultural Societies: Some International Experiences’ என்னும் கட்டுரையில் ‘Success in India’ என்னும் உப தலைப்பின் […]

மேலும் பார்க்க

இலங்கையின் சமய மறுமலர்ச்சி இயக்கமும் முதலாளித்துவமும்: அநகாரிக தர்மபாலவின் வகிபாகம்

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதிய ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் காலனிய காலத்து முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றியும், முதலாளித்துவ வகுப்பின் தோற்றத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் பற்றியும் ஆராயும் நூலாகும். இந்நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம்’ என்ற […]

மேலும் பார்க்க

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத்துறைகள் – பாகம் 2

28 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா ரால்ப் பீரிஸ் அவர்கள் தனக்குக் கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உபயோகித்து நாட்டின் தேவைகளுக்கேற்ற முறையில் சமூகவியல் பாடநெறி ஒன்றை வகுத்து, அதனைச் செயற்படுத்தினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கல்வியின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. ரால்ப் பீரிஸ் அவர்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் சேர்வதும் பின்னர் அடிக்கடி பதவி விலகுவதுமாக இருந்தார். இது சமூகவியல் கல்வித்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்