Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 8

11 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால நூலகங்கள் பற்றிய இக்கட்டுரைத் தொடரில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் வேளை ‘01.08.1934 முதல் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு சிறிய வாடகை வீட்டில் படிப்பகமும் நூலகமும் செயற்படத் தொடங்கின’ என்று அறிந்துகொண்டோம். ஆயின், இதுவே யாழ்ப்பாணத்தின் முதலாவது நூலகம் அல்லது முதலாவது பொதுசன நூலகம் என்ற பிம்பம் நீண்டகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளது. இது தவறானதாகும். யாழ்ப்பாணப் பொது நூலகம் வேரூன்றிய காலத்திலும் அதற்கு முன்னரும் […]

மேலும் பார்க்க

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன 1956 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றி பண்டாரநாயக்கவிற்கு நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பண்டாரநாயக்க செய்ய வேண்டிய சட்டப்படி நியாயமான (Legitimate) கடமைகள் பல இருந்தன. இவை அவசியமான கடமைகள் ஆகவும் இருந்தன. அவற்றைச் செய்யாமல் அப் பதவிக்குரிய பொறுப்புகளை அலட்சியமாகப் புறந்தள்ளும் அவரது நடத்தை மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின. நாம் இங்கு ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க வேண்டியதில்லை. […]

மேலும் பார்க்க

பசுமை என்ற எண்ணக்கரு: நல்லுணர்வா? கொடுங்கனவா?

10 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நாம் வாழும் சூழல் குறித்து நாம் கவனங்கொள்ள வைத்துள்ளது. நகரமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், தூய்மையான வாழிடம் குறித்து எல்லோரும் அக்கறை செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இப்பின்புலத்தில் பசுமை என்ற எண்ணக்கரு தவிர்க்கவியலாத ஒன்றாக முன்னிலையடைந்துள்ளது. பசுமைக்கு மாறுதல் (Going Green) என்பது இன்று அநேகமான அனைவரதும் தாரக மந்திரமாகவுள்ளது. வேலைத்தலங்களில், பாடசாலைகளில், […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 2

12 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் தொடர்பான அசமத்துவம், இந்திய சமஷ்டியின் நான்காவது அசமத்துவம் எனலாம் (உறுப்புரை 370, 371 A, 371 G). இவற்றுள் ஜம்மு காஷ்மீர் ஆகக்கூடிய அசமத்துவம் கொண்ட பகுதியாக இருந்து வந்துள்ளது (அண்மையில் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – மொ-ர்). இந்தியாவின் அரசியல் யாப்பின் உறுப்புரை 370 ‘தற்காலிக ஏற்பாடுகள்’ (Temporary Provisions) எனக் […]

மேலும் பார்க்க

செபீரோ (Xebiro): யாழ்ப்பாணத்தில் உருவாகும் ஐரோப்பியத் தொழில்நுட்பம்

13 நிமிட வாசிப்பு

ஆரோக்கியம், பொருளாதாரம் எனப் பலவழிகளாலும் உலகிற்கு மிக மோசமான பாதிப்புகளைத் தந்துகொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று, கற்றலிலும், பணிகளிலும்கூட பல புரட்சிகரமான மாற்றங்களைத் திணித்து வருகிறது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் நேரடிக் கல்வியிலிருந்து தொலைக் கல்வியைத் (distance learning) தரும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக வளாகங்களில் கவனமற்ற போதிப்பு, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் சோர்வுற்ற இளையோர் இப்போது தமது வீடுகளில் படுக்கையறைகளை வகுப்பறைகளாக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருக்கும் கிராமத்துப் பிள்ளைகளும் […]

மேலும் பார்க்க

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன ஜேம்ஸ் மனர் (James Manor) என்னும் பிரித்தானியரான அரசியல், வரலாற்று அறிஞர் ‘The Expedient utopian: Bandaranaike and Ceylon’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றை காலம் சென்ற அறிஞர் றெஜி சிறிவர்த்தன எழுதினார். அவரது கட்டுரை ‘Thatched Patio’ என்ற ஆங்கில சஞ்சிகையில் 1990 ஜனவரி-பெப்ரவரி இதழில் பிரசுரமானது. அக் கட்டுரையைத் தழுவிய மொழிபெயர்ப்பை இங்கே […]

மேலும் பார்க்க

கடும்புப் பால் என்னும் திரவ நிலைத் தங்கம்

12 நிமிட வாசிப்பு

அண்மையில் ஒரு பண்ணையாளர் தனது 2 மாத பசுக்கன்று சுவாசிக்க கஷ்டப்படுவதாகவும் மூச்செடுக்கும் போது மூக்கில் இருந்து கடும் சத்தத்துடன் மஞ்சள் நிறச் சளி போன்ற திரவம் வருவதாகவும் என்னிடம் வந்திருந்தார். அவரது கன்று செயற்கை சினைப்படுத்தல் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஜெசி இனத்தைச் சார்ந்தது. சில நிமிட விசாரணையின் பின் அவரது கன்றின் நிலையையும் அதற்குரிய காரணத்தையும் உணரமுடிந்தது. கன்று பிறந்ததும் தாயிலிருந்து சுரக்கும் கடும்புப் பால் எனப்படும் colostrum […]

மேலும் பார்க்க

தலைநிமிர்ந்த சமூகம்

6 நிமிட வாசிப்பு

மலையக தமிழ் மக்களின் இந்த வரலாற்றுத் தொடர் இந்த அத்தியாயத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. எனினும் அவர்களது வரலாறு அதன் பின்னரும் இந்த அத்தியாயத்திலிருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அது புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்ற கதையைப் போல ஒரு துன்பியல் வரலாறு. நான் இந்த வரலாற்று தொடரை எழுத முற்பட்டபோது இதற்கு என்ன தலைப்பை இடலாம் என்று பெரிதும் சிந்தித்தேன். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 74 […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன சமஷ்டி, பாராளுமன்ற முறை என்ற இரண்டும் இந்திய அரசியல் முறைமையின் அடிப்படையான கூறுகளாகும். ஒன்றுக்கொன்று முரண்பாடான இத் தத்துவங்களில் பாராளுமன்ற முறை (PARLIAMENTARISM ), பாராளுமன்றத்தின் அதியுயர் அதிகாரத்தை வலியுறுத்துவது. சமஷ்டி (FEDERALISM), அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முதன்மைப்படுத்துவது. இவ்வாறாக மத்தியப்படுத்திய பாராளுமன்ற அதிகாரமும் அதிகாரப் பரவலாக்கமும் என்ற இரண்டு கூறுகளும் ஒன்றிணைந்து இருத்தல் இந்தியாவிற்கு அவசியத் தேவையாக இருந்தது. இந்தியாவின் பிரமாண்டமான […]

மேலும் பார்க்க

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அன்னாசிப் பழம்

12 நிமிட வாசிப்பு

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது பயணத்தின் போது, 1493 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, தாம் புதிதாகக் கண்டறிந்த கரீபியன் தீவு ஒன்றுக்கு சாண்டா மரியா டி குவாடெலூப் என்று பெயரிட்டார். கப்பல்கள் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் படகுகளில் நன்னீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வருவதற்குப் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்