Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தேசியத் தரு தழைக்க உதவிய உரம்

12 நிமிட வாசிப்பு

ஆங்கிலக் கல்வியும் அறிஞர் ஆய்வுகளும் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம் தென் ஆசியாவின் எதிர்கால அரசியல் அமைப்புகளை உருவாக்க உழைத்த சக்திகள் எழுந்த காலம். இவற்றுள் எவை பெருவெற்றி பெற்று மேலோங்கும் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் நிர்ணயிக்கப்பட்டது. இப்படியான சக்திகளுள் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது இன – மத அடிப்படையிலான சக்தியாகும். இது ஒரு புறம் இனப்பற்றையும் மறுபுறம் இனவெறுப்பையும் எழுச்சிபெறச் செய்து, பிரித்தானியர் நாட்டைவிட்டுச் சென்றதும் […]

மேலும் பார்க்க

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 5

10 நிமிட வாசிப்பு

கிழக்கு மாகாணத்தின் மாகாண மட்டத்திலான நீர் வளங்கள்  1.2.2.1 மட்டக்களப்பு மாவட்டம்  மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பரந்த கடற்கரை எல்லை மற்றும் சிறப்பான நீரியல் அமைப்புகளைக் கொண்டது. இதன் பரப்பளவு 2,854 சதுர கிலோமீட்டராகும்; இது கடலோரச் சமவெளிகளாகவும் உள்நாட்டுப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுச் சராசரி மழைப்பொழிவு 1,250 –1,750 மி.மீ ஆகவும், வெப்பநிலை வீச்சு 25°C–32°C ஆகவும் உள்ளன. வடகிழக்கு பருவக்காற்றுக் (அக்டோபர்–ஜனவரி) […]

மேலும் பார்க்க

கூத்து இன்றுவரை கிராமங்களில் நிலைபெற்றிருப்பதற்கான காரணங்கள் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

கூத்தின் நிலைபேற்றுக்கான பிரதானமான காரணங்களைத் தந்து, அவற்றுள் ஐந்தினைச் சென்றமுறை விளக்கி இருந்தேன். இன்னும் சில காரணங்களும் உண்டு. அக்காரணங்களையும் இங்கு பார்ப்போம். மீதிக் காரணங்களை இந்த கட்டுரையில் பின்வருமாறு நோக்குவோம்: 6. திருமணத்திற்கு மாப்பிள்ளைகளை, பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்தல்  தமிழரிடையே மாப்பிள்ளை, பெண் தெரிவு பல வகைகளில் நடைபெறுவது மரபு. தமிழரின் திருமண முறைகள் பற்றி பலர் ஆராய்ந்து எழுதியும் உள்ளனர். இந்த மரபில் கூத்தரங்கின் பணியாது? கூத்தரங்கு […]

மேலும் பார்க்க

மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் – அறிமுகம்

14 நிமிட வாசிப்பு

புலப்பெயர்வும் மலையகம் எனும் சமூக உருவாக்கமும் பூர்வீகத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு சமூகம், தன்னை ‘மலையகச் சமூகம்’ என அடையாளப்படுத்துவதில் தொடர்ந்து முனைப்பைக்காட்டி வந்துள்ளது. இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்வை, ‘புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம்’ என்ற அடிப்படையில், ஆழமாக அணுக வேண்டிய தேவை நிலவுகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தினதும், சுதந்திர இலங்கையினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய பணிகளில் பல தியாகங்களைச் செய்த சமூகமாக மலையகம் விளங்குகிறது. […]

மேலும் பார்க்க

நீ மயங்குவதேன்: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம்

14 நிமிட வாசிப்பு

“எவன் குற்றமற்றவனாதற்குக் கற்கிறானோ எவன் தூய அகத்தினனாதற்கு முயல்கிறானோ எவன் சாந்தியும் ஞானமும் சான்றாக நோக்குந் தன்மையும் பொருந்திய மனதை அடைவதை இலக்ஷியமாகக் கொண்டிருக்கிறானோ அவன் மனிதர் செய்யக்கூடிய செயல்கள் எல்லாவற்றினும் மேலான செயலைச் செய்து கொண்டிருக்கிறான். அவனது அச்செயலின் பயன் ஒழுங்கும் இன்பமும் அழகும் வாய்ந்த ஒரு வாழ்க்கையாக அவன் பால் அமையும்.” (ஜேம்ஸ் ஆலன்) அகவிடுதலை இல்லாமல் புறவிடுதலை சாத்தியமில்லை. புறக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெறுதல், அடக்கப்பட்ட வாழ்விலிருந்து வெளியேறுதல், […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் அரசுகள் தேசங்களாக (Nation) தம்மை மாற்றிக்கொள்ள முயல்கின்றன. அரசியல், பண்பாட்டு விருத்தி, நாட்டை புவியியல் ரீதியில் ஒன்றிணைத்தல், பொருளாதார விருத்தி, கல்வி விருத்தி என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்புதல் (Nation Building) என்ற தேவையை நோக்கியனவே. ஒரு தேசியக்கொடி, ஒரு தேசியகீதம், வரலாறு, பள்ளி மாணவர்களுக்கான தேசப்படப் புத்தகங்கள் என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிக்காகவே நடைபெறுகின்றன. இத்தாலியை ஒன்றிணைத்த பின்னர் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் ‘நான்காவது உலகம்’ (The Fourth world), அவ்வுலகிற்குள் சிறைப்பட்டிருக்கும் அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என்ற இரு கருத்தாக்கங்கள் உலகின் புவி அரசியலை (Geo – Politics) புரட்சிகரமான புதிய கோணத்தில் நோக்குவதற்கு உதவிய எண்ணக்கருக்களாகும். மிக்சிக்கன் பல்கலைக்கழகம் (1970-1977), பேர்க்லி பல்கலைக்கழகம் (1977-2009) ஆகிய இரு பல்கலைக்கழகங்களிலும் புவியியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் பெர்னாட் நைட்ஸ்மன் (1941-2000) நான்காவது […]

மேலும் பார்க்க

குயர் வெறுப்பும் குயர் சமூகத்தின் மீதான ஓரங்கட்டல்களும்

9 நிமிட வாசிப்பு

இந்த உலகில் பிறந்த அனைவரும் மனிதர்களாக மதிக்கப்படுவதற்கும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும் உரித்துடையவர்கள். ஆனாலும் குயர்மக்கள் அவ்வாறு வாழ்வதற்குப் பல போராட்டங்களைக் குயர் சமூகமும், செயற்பாட்டாளர்களும் முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இவர்கள் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவதூறுகளையும், துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. குயர் வெறுப்பு நேரடியாக மாத்திரமல்லாமல், ஊடகங்களின் வாயிலாகவும் வெறுப்புப் பேச்சாக வெளிப்படுத்தப்படுகின்றது. அண்மைக்காலங்களில் சமூக ஊடகங்களில் பாரியளவில் வெறுப்புப் பேச்சை அவதானிக்க முடிகிறது. வெகுசன […]

மேலும் பார்க்க

மீள் பார்வைக்கான சமூக சக்திகள்

18 நிமிட வாசிப்பு

ஈழத்தைச் சூழ்ந்த யுத்த மேகங்கள் இன்று காசாவில்; பல்லாயிரம் மனித உயிர்களைக் காவுகொள்ளும் மேலாதிக்க வெறியானது மேலும் வியாபிதமடைந்து அரபுலகனைத்தையும் அதனைக்கடந்த உலக யுத்தமாகவும் விரிவாக்கம் பெறலாம் என்ற ஆரூடங்கள் வெளிப்பட்ட வண்ணம். மேலைத்தேசங்கள் எனப்படும் ஏகாதிபத்தியத் திணையானது அவ்வாறு ஏற்படவுள்ள அந்தப் பெரும் யுத்தக்களரிக்குத் தயாராகும் முஸ்தீபுடன் இராணுவச் செலவுகளை அதிகரிப்பதான செய்திகள் வந்தபடி. இனிவரும் புதிய உலக ஒழுங்கில் பனிப்போர்கூட மூழ இடமின்றித் தேசங்கள் ஆக்கிரமிப்பு யுத்தங்களை […]

மேலும் பார்க்க

கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 3

25 நிமிட வாசிப்பு

காலப்பகுதி IV: வரலாற்றுக்காலம் 3: கி.மு.200-கி.பி.300.பௌத்த மதத்தின் வருகை கி.மு. 200 ஆம் ஆண்டுக்காலம் கந்தரோடையில் பௌத்தமதம் அறிமுகமான காலப்பகுதி எனக் கொள்ளலாம். கி.மு. 250 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு புத்தபகவான் சமாதியடைந்த அரசமரக் கிளையைக் கொண்டுவந்த சங்கமித்தையை வரவேற்க யம்புகோளத்துறைக்கு வருகைதந்த அநுராதபுர அரசன் தேவநம்பியதீசன் திரும்பிச் செல்லும்போது கட்டிய ‘பாஸீன விகாரை’ இருந்த இடம் கதிரமலையாகிய கந்தரோடை என இராசநாயகம் அடையாளம் காண்கிறார் (இராசநாயகம், செ. 1933: […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்