என். கே. எஸ். திருச்செல்வம்
கிராம அதிகாரி நாகன் பற்றிக் குறிப்பிடும் குடும்பிகல மலைக் கல்வெட்டு
7 நிமிட வாசிப்பு
அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் பொத்துவில் நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கி.மீ தூரத்தில் பானமை என்னும் ஊர் காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாழும் கடைசி ஊர் எனும் பெருமை பெற்ற ஊர் பானமையாகும். வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவில் ஆரம்பமாகும் கிழக்குக் கரையோர கடற்பாதை கொக்கிளாய், புல்மோட்டை, திருகோணமலை, மூதூர், வாகரை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோயில், பொத்துவில் ஊடாக 380 கி.மீ தூரத்தில் உள்ள பானமையுடன் முடிவடைகிறது. […]
மேலும் பார்க்க
நாகர் பற்றிக் குறிப்பிடும் ரஜகல எனும் ராசமலைக் கல்வெட்டுகள்
10 நிமிட வாசிப்பு
அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை நகரில் இருந்து மகாஓயாவுக்குச் செல்லும் வீதியில் 26 கி.மீ தூரத்தில் பக்கியல்ல என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு பிரதான வீதியின் மேற்குப் பக்கத்தில் ரஜகல மலை அமைந்துள்ளது. மலையின் தெற்குப் பக்கத்தில் நவக்கிரி குளம் காணப்படுகிறது. இம்மலை ராஸ்ஸ ஹெல, ராஸ்ஸகல, ரஜகலதென்ன, ராசமலை ஆகிய பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1038 அடி உயரத்தில், அடர்ந்த காடுகளையும், மலைகளையும் கொண்ட இம்மலையில் 983 […]
மேலும் பார்க்க
நாகபர்வத மலை எனும் பம்பரகஸ்தலாவ மலையில் நாகர் பற்றிய கல்வெட்டுகள்
16 நிமிட வாசிப்பு
அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள உகந்தை மலையின் தென்மேற்கு பக்கத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் நாகபர்வத மலை அமைந்துள்ளது. இலங்கையில் இரண்டு பெரிய வன விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று தீவின் வடமேற்கில் உள்ள வில்பத்து எனும் வனமாகும். அடுத்தது தென்கிழக்கில் உள்ள யால எனும் வனமாகும். யால வனத்தின் கிழக்குப் பகுதி குமண என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் நாகபர்வத […]
மேலும் பார்க்க
மகா நாக மன்னன் பற்றிக் குறிப்பிடும் வேலோடும் மலை – நாகமலைக் கல்வெட்டு
8 நிமிட வாசிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் பல மலைத் தொடர்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல உயரமான மலைக் குன்றுகளும், தட்டையான மலைப் பாறைகளும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் தட்டையான மலைப் பாறைகளில் ஒன்று வேலோடும் மலை எனவும், அதன் அருகில் உள்ள மலை நாகமலை எனவும் அழைக்கப்படுகிறது. மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வந்தாறுமூலைக்கும், சித்தாண்டிக்கும் இடையில் மாவடிவேம்பு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி […]
மேலும் பார்க்க
யுவராஜன் நாகனின் கொள்ளுப் பேரன் இளவரசன் நாகன் பற்றிக் குறிப்பிடும் படர்கல் மலைக் கல்வெட்டு
14 நிமிட வாசிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மலைகள் நிறைந்த ஓர் இடம் காணப்படுகிறது. இது படர்கல் மலைப் பகுதி எனப் பெயர் பெற்றுள்ளது. செங்கலடியில் இருந்து மகா ஓயாவுக்குச் செல்லும் வீதியில் உள்ள மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கத்தில் 23 கி.மீ தூரத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் படர்கல் மலைப் பிரதேசம் அமைந்துள்ளது. மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாக படர்கல் மலையை நோக்கிச் செல்லும் பாதையில் […]
மேலும் பார்க்க
நாகசிவன், நாகவிய, நாகப்ப சவிய ஆகியவை பற்றிக் குறிப்பிடும் பண்டகிரிய கல்வெட்டு
13 நிமிட வாசிப்பு
அம்பாந்தோட்டை நகரிலிருந்து திஸமஹராமைக்கு செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பள்ளேமலல சந்தியிலிருந்து வட மேற்கு நோக்கிச் செல்லும் வீதியில் உள்ள யஹன்கல மலைப் பகுதியிலிருந்து வடக்குப் பக்கமாக மேலும் 5 கி.மீ தூரத்தில் உள்ள பண்டகிரிய குளத்தின் அருகில் பண்டகிரிய மலைப்பகுதி அமைந்துள்ளது. பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த காவந்தீசன் எனும் மன்னனால் பண்டகிரிய மலையில் பெளத்த ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் […]
மேலும் பார்க்க
சித்தர் மலைப்பகுதியில் நாக மகாராஜன் செய்த பணிகள் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
17 நிமிட வாசிப்பு
கதிர்காமத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ தூரத்தில், யால வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டின் தென்மேற்குப் பகுதியில் சித்துள்பவ்வ அமைந்துள்ளது. இங்கு கோரவக்கல, சித்துள் பவ்வ, தெகுந்தரவெவ எனும் மூன்று மலைப்பகுதிகள் காணப்படுகின்றன. இம் மூன்று இடங்களிலும் நூற்றுக்கணக்கான கற்குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பண்டைய காலம் முதல் கதிர்காமத்திற்கு தல யாத்திரை வந்த சித்தர்களும், முனிவர்களும் அதிகளவில் தங்கிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக இம்மலை சித்தர் மலை எனப் […]
மேலும் பார்க்க
தமிழ் மன்னன் திரிதரனின் மகன் மகாநாகன் பொறித்த கதிர்காமக் கல்வெட்டு
10 நிமிட வாசிப்பு | 12701 பார்வைகள்
கதிர்காமம் முருகன் கோயிலில் இருந்து கிரிவிகாரைக்குச் செல்லும் வீதியில் பாதையின் வலதுபக்கம் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகிறன. இவற்றில் ஒரு கல்வெட்டு தமிழ் மன்னன் சிறிதரனின் (திரிதரன்) மகன் மகாநாகனால் பொறிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்த மித்தசேனனைக் கொன்று அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்த தமிழ் மன்னர்கள் ஆறு பேர்களில் ஒருவனே திரிதரன் என்பவனாவான். இவர்கள் பொ.ஆ. 429 – 455 வரையான 25 வருடங்கள் இலங்கையை […]
மேலும் பார்க்க
பொற்கொல்லன் நாகன் பற்றிக் கூறும் அனுராதபுரம் – வெஸ்ஸகிரி கல்வெட்டுகள்
10 நிமிட வாசிப்பு
அனுராதபுரம் புனித நகரில் உள்ள இசுருமுனிய விகாரையின் தெற்குப் பக்கத்தில் சுமார் 600 மீற்றர் தூரத்தில் வெஸ்ஸகிரிய கற்குகைகள் மற்றும் கட்டிட இடிபாடுகளைக் கொண்ட வளாகம் அமைந்துள்ளது. சுமார் 500 மீற்றர் நீளம் கொண்ட இவ்வளாகத்தின் மத்தியில் உள்ள நீண்ட பாறைத் தொடரில் 10 இற்கும் மேற்பட்ட கற்குகைகளும், இங்கிருந்து சற்று தூரத்தில் இன்னும் சில கற்குகைகளும் உள்ளன. இங்கு மொத்தமாக 24 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றைத் […]
மேலும் பார்க்க