பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்
வட இலங்கைப் பெருநிலத்தில் ஆதிமனிதக் குடியேற்றங்கள்
33 நிமிட வாசிப்பு
ஹோமோ இரக்டஸ் எனப்படும் ஆதி மனிதன் (பச்சை) ஆபிரிக்காவிலிருந்து ஆசியா வரை பெயர்ந்ததையும், நியண்டதல் எனப்படும் ஆதி ஐரோப்பியரின் (மஞ்சள்) பரவலையும், ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதனின் (சிவப்பு) அகில உலக இடப்பெயர்வையும் காட்டும் படம். ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆதி மனித இனங்கள் வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் வன்னிப் பகுதி முக்கியமானதொரு இடமாகும். காலவரிசை (Chronology) (இ.மு – இற்றைக்கு முற்பட்ட ஆண்டுகள்) ஒரு குறிப்பு: […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிக்குடியேற்றங்கள்
25 நிமிட வாசிப்பு
இந்தத் தொடரில் ஆய்வு செய்யப்படும் யாழ்ப்பாணப் பகுதி தொல்லியல் மையங்கள்: 1. கந்தரோடை 2. ஆனைக்கோட்டை 3. யாழ்ப்பாணம் கோட்டை 4. வல்லிபுரம் 5. பூநகரி 6. காரைநகர் 7. வேலணை: அல்லைப்பிட்டி – சாட்டி 9. புங்குடுதீவு 10. நயினாதீவு 11. நெடுந்தீவு யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிகாலக் குடியிருப்புகள் அமைந்த நிலங்களை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: I. யாழ்ப்பாணத்திற்கு மேற்கே பாக்கு நீரிணையிலுள்ள சிறிய தீவுகள். II. […]
மேலும் பார்க்க
வல்லிபுரமும் நாகர்கோயிலும்
30 நிமிட வாசிப்பு
வல்லிபுரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் இன்று ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் குடியேற்றம் செறிந்த, பிரபலமான, ஓர் ஆரம்பகால கடற்கரை நகரமாக அது விளங்கியிருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? இன்று புன்னாலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வடக்குக் கடற்கரை வீதி வழியே சென்றால், வீதி முடிவிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் இக்கிராமம் இருக்கிறது. இப்போதைய வல்லிபுரம் கிராமம் கடற்கரையிலிருந்து […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 2
30 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணக் கோட்டைத் தொல்லியல் ஆய்வுகள் யாழ்ப்பாணக் கோட்டை மேலாய்வுகள் 2011-12 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அழிவடைந்த யாழ்ப்பாணக் கோட்டையை மீள்புனரமைப்புச் செய்துவரும் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 62 ஏக்கர் பரப்பில் அமைந்த கோட்டையின் பெரும்பகுதி தொல்லியல் மேலாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றுள் அழிவடைந்த கிறிஸ்தவத் தேவாலயம், இராணி மாளிகை, ஆயுதக் களஞ்சியங்கள், பீரங்கித் தளங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், காவல் மையங்கள் என்பன […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1
25 நிமிட வாசிப்பு
“யாபா படுனவில் அரச கட்டிடங்கள் பல நிரைகளாக அமைந்துள்ளன. இக் கட்டிடங்களில் பொன்னாலான கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. அத்துடன் இக் கட்டிடங்களில் விலை மதிப்பற்ற இரத்தினக் கற்கள் இழைத்துக் காணப்பட்டமையால் எங்கும் பிரகாசம் பொருந்தி விளங்குகின்றன. இவை தரும் ஒளி, இவற்றன் அழகு குபேரனுடைய அழகாபுரிக்கு இணையானது.” – Kōkila – Sandēsa, P.S. Perera ed. 1906. v. 243. “மேற்கு – கிழக்கு ஆசிய உலகங்களையும், கிழக்கு […]
மேலும் பார்க்க
ஆனைக்கோட்டைத் தொல்லியலாய்வு
17 நிமிட வாசிப்பு
அறிமுகம் ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் தென்மேற்குப் பகுதியின் மேற்குப் பக்கத்தில், நவாலிக்குத் தெற்கே யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் AB 17 வீதிக்கருகே யாழ்ப்பாணக் கடலேரிக்குக் கிழக்காக அமைந்த பண்டைய கிராமம். முன்னொரு காலத்தில் வன்னியில் யானைகளைப் பிடித்து, ஆனையிறவு வழியாக யாழ்ப்பாணம் கொண்டுவந்து, அவற்றை இக்கிராமத்தில் உள்ள அடைப்பரண்களில் (Corral) அடைத்து வைத்துப் பின்னர் கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த காலப்பகுதியில் இக்கிராமத்திற்கு ‘ஆனைக்கோட்டை’ […]
மேலும் பார்க்க
கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 3
25 நிமிட வாசிப்பு
காலப்பகுதி IV: வரலாற்றுக்காலம் 3: கி.மு.200-கி.பி.300.பௌத்த மதத்தின் வருகை கி.மு. 200 ஆம் ஆண்டுக்காலம் கந்தரோடையில் பௌத்தமதம் அறிமுகமான காலப்பகுதி எனக் கொள்ளலாம். கி.மு. 250 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு புத்தபகவான் சமாதியடைந்த அரசமரக் கிளையைக் கொண்டுவந்த சங்கமித்தையை வரவேற்க யம்புகோளத்துறைக்கு வருகைதந்த அநுராதபுர அரசன் தேவநம்பியதீசன் திரும்பிச் செல்லும்போது கட்டிய ‘பாஸீன விகாரை’ இருந்த இடம் கதிரமலையாகிய கந்தரோடை என இராசநாயகம் அடையாளம் காண்கிறார் (இராசநாயகம், செ. 1933: […]
மேலும் பார்க்க
கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 2
18 நிமிட வாசிப்பு
காலப்பகுதி II : ஆரம்ப வரலாற்றுக் காலம் 1.நகரமயமாக்கம் கி.மு. 600-300. வரலாற்றுக்கால ஆரம்பம் என்பது ஒரு பிரதேசத்தில் பதிய வைத்திருக்கும் கல்வெட்டுகளிலோ அல்லது வேறு பொருட்களிலோ காணப்படும் வாசிக்கக்கூடிய ஒரு மொழியின் ஆரம்பகாலத்தைக் கொண்டு வரலாற்றாசியர்கள் கொடுக்கும் காலத்தைக் குறிப்பிடுகிறது. அந்தவகையில் கந்தரோடையில் இதுவரை கண்டெடுத்த பானை ஓடுகளில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பு, இயற்பியல் ஆகியவற்றைக் கொண்டு, அந்த எழுத்துகள் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாகத் […]
மேலும் பார்க்க
கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 1
23 நிமிட வாசிப்பு
“அவர்களின் இந்த (யாழ்ப்பாண) மண்ணிற்கு உள்ளே, அவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத உள்ளத்தை உவகையாக்கும் மதிப்புமிக்க தொல்வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.” Paul E. PierisCeylon Daily News22-02-1919. “பண்டைய கிரேக்கர்களும், உரோமர்களும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த தொலமியால் கௌரூலா என்றும், பெரிப்பிளஸ்ஸின் ஆசிரியரால் கமாரா எனவும் குறிப்பிடப்படும் நகரம் கந்தரோடை என்பதில் எனக்கு எதுவிதமான ஐயப்பாடும் கிடையாது.” C. […]
மேலும் பார்க்க
தொல்பொருட்களின் தேதிக்கணிப்புகள் (The Dating of Archaeological Artefacts)
26 நிமிட வாசிப்பு
தொல்லியலாய்வின் முக்கியமானதொரு அம்சம் அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களின் வயதைக் கணிப்பிடுவதாகும். இக்காலத்தில் கதிரியக்கப் பரிசோதனைகளான கதிரியக்கக்கரிம வயதுக்கணிப்பு (Radiocarbon Dating), வெப்பேற்று கதிரொளிவீச்சு கணிப்பு (Thermo-Luminescence: TL), ஒளிக்கிளர்ச்சியூட்டிய கதிரொளிவீச்சு கணிப்பு (Optically Stimulated Luminescence: OSL) ஆகிய ஆய்வுகள்மூலம் இத்தொல்பொருட்களின் வயது கணிப்பிடப்படுகிறது. இப்பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்கள் இலங்கையில் இல்லை. இந்தியாவில் வெப்பேற்றக் கதிரொளி வீச்சு, ஒளியேற்றக் கதிரொளிவீச்சு ஆய்வுகூடங்கள் உள்ளன. கதிரியக்கக் கரிம வயதுக்கணிப்பு ஆய்வுகூடம் அங்கும் […]
மேலும் பார்க்க