அநகாரிக தர்மபால பௌத்த மக்களைத் தட்டி எழுப்பி, முன் நோக்கி வழிநடத்திச் செல்ல, பிற பண்பாட்டுப் புலங்களிலும் காலனியாட்சிக்குப் பணிந்து நடந்த சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்கு வேறு தலைவர்கள் செயற்பட்டனர். மொழியின் புது வகிபாகம் அந்நியர் ஆட்சிக்குள் அகப்பட்டிருந்த ஆசியச் சமூகங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தத்தம் பண்பாட்டு அடையாளத்தை (Cultural Identity) பேணுவதற்குச் செயற்பட்டபோது, அந்த அடையாளத்தின் ஒரு முக்கிய சின்னமாக (Marker) தம் மொழியைக் கருதினர். […]