Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

குறைவிருத்தியின் அரசியல் பொருளாதாரம் – எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களின் நூல் பற்றிய அறிமுகம் 

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: சிறான் இலன்பெரும காலஞ் சென்ற அறிஞர் எஸ்.பி.டி.டி. சில்வா (1924-2018) ‘The Political Economy of Under Development’ என்ற பெயரில் அரியதொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலைப் பற்றிய விமர்சன அறிமுகம் ஒன்றை சிறான் இலன்பெரும (Shiran Illanperuma) அவர்கள் ‘Polity’ மே – யூன் 2025 இதழில் எழுதினார். ‘The Development of S.B.D. De Silva’s Political Economy’ என்ற தலைப்பில் அமைந்த […]

மேலும் பார்க்க

இலங்கையின் கூட்டுறவுத்துறையின் மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகள்

20 நிமிட வாசிப்பு

ஓர் அர்ப்பணிப்புள்ள கூட்டுறவுச் சங்கம், அதன் உறுப்பினர்களுக்கான சமூக நல்வாழ்வை முன்னுரிமைப்படுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சிக்கான தனித்துவமான வழியை வழங்கும். பல நாடுகளில், கூட்டுறவுகள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சக்திவாய்ந்த கருவியாக இயங்குகின்றன. இலங்கையில் போருக்குப் பிந்தைய மீட்புக் கட்டத்தில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், கூட்டுறவு அமைப்புகள் நம்பகமான மாற்று சமூக, பொருளாதாரக் கட்டமைப்பாகத் திகழலாம். எனினும், கூட்டுறவுகளுக்கான உள்ளார்ந்த ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்கும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் ஜனநாயகமும்: நேற்று, இன்று, நாளை

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) ‘Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions’ (இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் உள்ளூர் நிலை ஜனநாயகமும்: நிறுவன சமூக பரிமாணங்கள்’) என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலை 2015 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ஆவார். இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாயும், எல்லாமாக எட்டுக் […]

மேலும் பார்க்க

வெற்றியுனதே: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம் பகுதி – 2

11 நிமிட வாசிப்பு

ஒருவன் தனது நினைப்புக்களை மேம்படுத்தினால் மாத்திரமே உயர்வும் வெற்றியும் காரியசித்தியும் பெறுதல் கூடும். தனது நினைப்புக்களை மேம்படுத்தாது பின்னிட்டால் அவன் பலஹீனமும் கீழ்மையும் தரித்திரமும் உற்றேயிருப்பான்” – (ஜேம்ஸ் ஆலன்). இளைஞர்களிடத்தில் தோன்றும் மயக்கங்களைக் களைந்து, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழித்தடத்தை, ‘நீ மயங்குவதேன்’ என்ற நூலின் மூலம் செப்பனிட முனைந்த நடேசய்யர், அதன் தொடர்ச்சியாக ‘வெற்றியுனதே’ என்ற நூலை 1934 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். கொழும்பு தினத்தபால் பிரஸ், ஹட்டன் […]

மேலும் பார்க்க

ஆறுமுக நாவலரும் நன்னூல் பதிப்பு நெறிமுறையும்

16 நிமிட வாசிப்பு

ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் பதிப்பு நெறிமுறைகளை அவர்களின் பதிப்பு நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆராய்வதாக இத்தொடர் கட்டுரைகள் அமையவிருப்பதினை முன்னரே கூறியுள்ளோம். அவ்வகையில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் மிகவும் இன்றியமையாதவர் ஆறுமுக நாவலர் ஆவார். நாவலர் காலகட்ட சமுதாய நிலையினைக் குறித்தும் அவரது நன்னூல் பதிப்பு முறைகள் குறித்தும் காணலாம்.  ஆறுமுக நாவலர்  19 ஆம் நூற்றாண்டில் தமிழுக்குத்தொண்டு செய்த மிகப்பெரும் தமிழறிஞருள் தலையானவர் ஆறுமுக நாவலர். இலங்கையில், யாழ்ப்பாணம், நல்லூரில் வாழ்ந்த […]

மேலும் பார்க்க

மன்னன் நாகன் பற்றிக் கூறும் கள்ளஞ்சிய பாறைக் கல்வெட்டு 

7 நிமிட வாசிப்பு

மிகிந்தலை நகரில் இருந்து வடக்கு நோக்கி வவுனியாவுக்குச் செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் ரம்பேவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியின் கிழக்குப் பக்கத்தில் சுமார் 9 கி.மீ தூரத்தில் கள்ளஞ்சிய என்னுமிடம் காணப்படுகிறது. இங்கு உள்ள நீராவிய என்னுமிடத்தில் பண்டைய கால சுவடுகள் காணப்படுகின்றன.  இங்கு நீளமான, ஒடுங்கிய வடிவில் அமைந்துள்ள கள்ளஞ்சிய குளத்தின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாறைகளும், கற்குகைகளும் காணப்படுகின்றன. 1891 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆய்வுகளை […]

மேலும் பார்க்க

ஆனைக்கோட்டைத் தொல்லியலாய்வு 

17 நிமிட வாசிப்பு

 அறிமுகம் ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் தென்மேற்குப் பகுதியின் மேற்குப் பக்கத்தில், நவாலிக்குத் தெற்கே யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் AB 17 வீதிக்கருகே யாழ்ப்பாணக் கடலேரிக்குக் கிழக்காக அமைந்த பண்டைய கிராமம். முன்னொரு காலத்தில் வன்னியில் யானைகளைப் பிடித்து, ஆனையிறவு வழியாக யாழ்ப்பாணம் கொண்டுவந்து, அவற்றை இக்கிராமத்தில் உள்ள அடைப்பரண்களில் (Corral) அடைத்து வைத்துப் பின்னர் கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த காலப்பகுதியில் இக்கிராமத்திற்கு ‘ஆனைக்கோட்டை’ […]

மேலும் பார்க்க

பூசைக்கிழவி என்னும் தெய்வம்

15 நிமிட வாசிப்பு

அறிமுகம் மனித குல வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இயற்கை – இயற்கை வழிபாட்டின் வழி உருவான தெய்வங்களுள் பெண் தெய்வங்களுக்குத் தனியிடம் உண்டு. தமிழர் சமயவியலின் தொடக்கத்தில் கொற்றவை எனும் பாலை நிலத் தெய்வம் அடையாளப்படுத்தப்படுகின்றாள். தமிழர் வாழ்வியல் புலத்தில், ஏன் மனிதரின் வரலாற்றில், வேட்டையாடலுக்குத் தலைமை தாங்கி இனக்குழுவை வழிநடத்தியது தொடக்கம் நிலையான குடியிருப்பு, உற்பத்திச் செயற்பாடுகள் என்பவற்றில் பெண்ணின் பங்கு பிரதானமானது என்பதை அறிய முடிகிறது. அவளது பிள்ளைப்பேறு […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

அல்லைத்திட்டம் இத்திட்டமே திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது திட்டமிட்ட விவசாயக் குடியேற்றமாகும். இது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். மகாவலி ஆற்றை மறித்து வாய்க்கால் மூலம் திருப்பி அல்லைக் குளத்தை நிரப்பி அதனோடு சூழவுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் கூட இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 இல் வாய்க்கால் வெட்டப்பட்டு தாழ்நிலமாக இருந்த […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – மயிலிட்டி

9 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். (படம்-1) நிலப்படத்தில் உள்ளபடி மயிலிட்டிக் கோவிற்பற்று, ஏழு துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. இவை மயிலிட்டி, பலாலி, வயாவிளான், வறுத்தலைவிளான், தையிட்டி, வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை என்பன.  எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி மயிலிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்