மீநிலங்கோ தெய்வேந்திரன், Author at Ezhuna | எழுநா - Page 2 of 4
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

மீநிலங்கோ தெய்வேந்திரன்

சடங்குகளின் அரசியல்: எதிர்காலத்தை இறந்தகாலத்தில் கட்டமைத்தல் – பகுதி 1

39 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் போருக்குப் பிந்தைய இலங்கையின் வடக்குக் கிழக்கில் சடங்குகளின் அரசியலை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறைக்குப் பிறகு, மதக் கோட்பாட்டை விட அன்றாட மற்றும் நினைவுச் சடங்குகள் சமூக வாழ்க்கையின் மறுகட்டமைப்பை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராய்கிறது. 2009 மற்றும் 2025க்கு இடையில் நடத்தப்பட்ட நீண்டகால இனவியல் களப்பணியை மையமாகக் கொண்டு சடங்குகள் அரசியல் வெளிப்பாடுகளாகவும், தற்காலிக செயல்களாகவும் எவ்வாறு செயற்படுகின்றன என்பதில் கவனம் குவிக்கிறது. இச்சடங்குகள் போராலும் இடப்பெயர்ச்சியாலும் […]

மேலும் பார்க்க

ஆன்மிகமும் குணப்படுத்தலும்: இயலாமையின் இருப்பியல் – பகுதி 2

45 நிமிட வாசிப்பு

புலம்பெயர்ந்தோர் ஆதரவு: அற்புதங்களின் அரசியல் பொருளாதாரம் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், புலம்பெயர்ந்த தமிழர்கள் பின்தங்கிய சமூகங்களுக்கு நன்மை பயக்கும் தார்மீகத் திசைகாட்டியாக உருவெடுத்தனர். டொராண்டோவிலிருந்து இலண்டன் வரை, சூரிச் முதல் ஒஸ்லோ வரை, குடும்பங்கள், பாடசாலைகளுக்கு மட்டுமல்ல, கோயில்களுக்கும் ஆன்மிக இயக்கங்களுக்கும் பணம் பாயத் தொடங்கியது. ஒரு காலத்தில் உள்ளூர், கிராம அடிப்படையிலான மதமாக இருந்தவை பல்கிப்பெருகி நாடு கடந்ததாக மாறின. இது புலம்பெயர்ந்த […]

மேலும் பார்க்க

ஆன்மிகமும் குணப்படுத்தலும்: இயலாமையின் இருப்பியல் பகுதி – 1

37 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் மே 2009 இல் முள்ளிவாய்க்காலில் இறுதிக் குண்டுகள் விழுந்தபோது, புகை காற்றோடு கலந்து வெளிக்கவில்லை, எஞ்சியதோ அவநம்பிக்கையின் மந்தமான மூடுபனி. “போர் முடிந்துவிட்டது” என்று மக்கள் கிசுகிசுத்தனர். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று யாராலும் சொல்ல முடியவில்லை. போரின் களங்களில் நீண்ட அமைதிக்குப் பிறகு கோயில்கள் மீண்டும் மணிகளை அடிக்கத் தொடங்கின. வடபுலத்தின் போர் தின்ற நிலங்களில் மீளக்குடியேறிய குடும்பங்கள் எஞ்சியிருந்த, உடைந்த/ எரிந்த செங்கற்களால் சிறிய […]

மேலும் பார்க்க

தற்கொலைகள்: சமூக அவலத்தின் கண்ணாடி

40 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2013 ஆம் ஆண்டு கள ஆய்வொன்றிற்காக முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தோம். குறித்த தினம் எமது கள ஆய்வை நிறைவுசெய்து, எமக்கு உதவிபுரிந்த நண்பர் ஒருவரின் வீட்டில் மாலை இளைப்பாறிக் கொண்டிருந்தோம். தீடிரென ஒருவர் ஓடி வந்தார். அவர்களது அயலவர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் அதற்கான போக்குவரத்து வசதி இருக்கவில்லை. ஏனெனில் நாம் தரித்து நின்ற […]

மேலும் பார்க்க

புலம்பெயர் புலம்பல்கள்: யதார்த்தத்திற்கு வெகுதொலைவில்

25 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் ஈழத்தமிழரின் புலப்பெயர்வுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அது வெறுமனே போருடனோ, அல்லது இலங்கையின் இன முரண்பாட்டுடனோ மட்டும் தொடர்புடையதல்ல. பிரித்தானியக் கொலனித்துவ காலத்திலேயே இந்தப் புலப்பெயர்வு தொடங்கியது. முதலில் பிரித்தானியக் கொலனிகளில் பிரித்தானியரின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக, ஆசிரியர்களாக, பொறியியலாளர்களாக, நிர்வாகிகளாக எனப் பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஈழத்தமிழர்கள் பிரித்தானியக் கொலனியெங்கும் புலம்பெயர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், பல நாடுகளில் பிரித்தானியக் கொலனியாதிக்கம் முடிவுக்கு  வரத்தொடங்கியது. […]

மேலும் பார்க்க

இளமையைத் தொலைக்கும் இளையோர்: இனிமையின் விலை

17 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் ‘இளையோர்’ என்ற கருத்து சமூக மற்றும் பண்பாட்டு ஆய்வில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலகம் மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வருவதால், இளையோர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மிகவும் சிக்கலானதாகி வருகின்றன. போரின் பின்னரான ஈழத்தமிழ்ச் சமூகத்தைப் புரிந்துகொள்வதாயின், இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் இயக்கவியலைப் புரிந்துகொள்வது முக்கியம். நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தை நடாத்திய ஒரு சமூகத்தின் மையமாக, இயங்கியலாக, ஆதாரசுருதியாக சில தசாப்தங்கள் இளையோர் […]

மேலும் பார்க்க

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

20 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய இக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கிய முக்கிய சவால் அறம் பற்றியது. அது அரசியலில், ஆக்க இலக்கியத்தில், பொருளாதாரத்தில், அன்றாட சமூக அசைவியக்கத்தில் என அனைத்திலும் தாக்கம் செலுத்திய ஒன்றாக – இன்னும் சரியாகச் சொல்வதாயின் விமர்சனத்திற்குரியதாக – இருந்து வந்திருக்கிறது. ஒருவருக்கு அறமாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அறமாகத் தெரிவதில்லை. ஒருவர் அறமற்றதாகக் கருதும் ஒரு செயலை […]

மேலும் பார்க்க

காலாவதியாகும் கல்வி : சாண் ஏறி முழஞ் சறுக்குதல்

28 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் சமகால இலங்கையின் கல்வியானது ஒரு நெருக்கடியான புள்ளியில் நிற்கிறது. பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையான எமது கல்வியும், கல்விமுறையும், அதுசார் நிறுவனங்களும் பொருத்தமானவையா, பயனுள்ளவையா, வினைத்திறனானவையா போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். குறிப்பாக, எமது பல்கலைக்கழகக் கல்வி மிகுந்த சவாலுக்குள்ளாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் கல்வித்துறையை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முழுமையாகக் கல்வி தடைப்பட்டுள்ளது. இது […]

மேலும் பார்க்க

கடலின் அக்கரை போனோரே: கேளாத குரல்களின் வலி

21 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 2024 டிசம்பரில் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது புதிய சாதனையாகும். இதற்கு முந்தைய பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமான தொகை 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஒரு மாதத்தில் இலங்கைக்கு தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட அதிகபட்ச பணமாகும். அதேபோல் கடந்தாண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இது 2023ஆம் ஆண்டை விட 11% […]

மேலும் பார்க்க

ஆடைகளை நனைக்கும் கண்ணீர்: ஆடைத்தொழிலாளரின் கதைகள்

24 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத்தொழிற்றுறையின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக அந்நியச் செலாவணி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழிற்றுறையாக ஆடைத்தொழிற்றுறை இருக்கின்றது. அதேவேளை கணிசமான இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கிய துறையாகவும் இது திகழ்கிறது. இத்துறையின் பொருளாதாரப் பரிமாணம் குறித்த அக்கறையும் கவனமும் மிகப் பெரியது. ஏற்றுமதிகள் குறைந்தாலோ, உற்பத்திகள் குறைந்தாலோ அக்கறை கொள்கிற அரசும், ஊடகங்களும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களின் நலன்கள் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்