இலங்கைப் பெருந்தோட்டங்களில் தொடக்ககாலத்தில் குடியேறிய தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. காலனிய அறிக்கைகள், காலனிய அதிகாரிகளின் பதிவுகள் முதலானவற்றில் இடம்பெறுகின்ற தகவல்களையும் வாய்மொழி வழக்காறுகளில் ஆவணம் பெற்றுள்ள செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அக்கால வாழ்க்கை நிலைமையை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகவல்கள் விவரிக்கின்ற தோட்டத் தொழிலாளரின் வாழ்வு, மிகவும் துயர் நிறைந்ததாகும். “ ‘அருவருப்புத்தரும் அநீதி’, ‘கொடுமை’, ‘நீக்ரோ அடிமைகளைவிடக் கேவலம்’ ” (மேற்கோள்: குமாரி […]