Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்

24 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முற்பட்டகால யாழ்ப்பாண வரலாற்றிற்கான சரித்திரச் சான்றுகள் மிக அருகியே காணப்படுகின்றன. புராணக் கதைகள், ஐதீகங்கள், ஆதாரமற்ற பழங்கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’யின் ஆரம்பப் பகுதிகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பண்டையகால யாழ்ப்பாணம் தொடர்பான மிகவும் குறைவான செய்திகளையே தருகின்றன. வையா பாடல், கைலாய மாலை ஆகிய ஏடுகளும் யாழ்ப்பாணத்தின் தொடக்க காலத்தைப் பற்றிப் போதுமான […]

மேலும் பார்க்க

ரிதி விகாரை மலையில் நாக மகாராஜன் பற்றிய கல்வெட்டு 

9 நிமிட வாசிப்பு

குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்பொடகல என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் சுமார் 15 கி.மீ. தூரம் சென்றதும் காணப்படும் சிறிய வீதியினூடாக மேலும் 2 கி.மீ தூரம் பயணம் செய்தால் ரிதிகம என்னுமிடத்தை அடையலாம். இங்கு செல்வதற்கு இன்னுமோர் வழியும் உண்டு. குருநாகல் – கண்டி வீதியில் 19 கி.மீ தூரத்தில் உள்ள மாவத்தகம சந்தியின் வடக்கில் 14 கி.மீ தூரம் சென்றும் ரிதிகமவை அடையலாம். இங்குள்ள சிறிய மலைப்பாறையின் […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 2

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல 1978 ஆம் ஆண்டு யாப்பு இலங்கையில் பாதி – ஜனாதிபதிமுறையை ஏற்படுத்தியது. பாதி ஜனாதிபதி முறையென்பதை ஆங்கிலத்தில் ‘Semi – Presidential System’ என அழைப்பர். இப்பாதி ஜனாதிபதிமுறை இரு உப பிரிவுகளைக் கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவர். அவையாவன: முதலாவது உப வகையான ஜனாதிபதி – பாராளுமன்றமுறையில் பிரதமரும் மந்திரிசபையும் கூட்டாக ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூற […]

மேலும் பார்க்க

தமிழர்களும் தேசமும் : இந்திய – இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு – பகுதி 1

29 நிமிட வாசிப்பு

இந்த நூல் இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் பரிணாம வளர்ச்சியை பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் இறுதிப் பகுதியில் இருந்து சமகாலம் வரை விரிவாக ஒப்பிடுகிறது. தமிழ்த் தேசிய இனத்திற்கும் இலங்கை – இந்திய மைய அரசுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டுச் சூழலில் இரண்டு நாடுகளிலும் தமிழர்கள் தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்த வரலாறு உள்ளது. ஆனால், இந்தியா மற்றும் இலங்கையில் மேலாதிக்க அரசுகளின் தேசிய இனங்களுடனான உறவு சார்ந்து […]

மேலும் பார்க்க

இலங்கையின் கால்நடைப் பண்ணையாளர்கள் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளும் சாத்தியமான தீர்வுகளும்

12 நிமிட வாசிப்பு

கறவை மாடு வளர்ப்பு இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான கூறாகும். இந்தத்துறை நாட்டு மக்களின் ஊட்டச்சத்துத் தேவையின் கணிசமான பகுதியை பாலின் மூலம் நிறைவு செய்வதோடு, ஆயிரக்கணக்கான பாற்பசுப் பண்ணையாளர்களுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்குகிறது. இதனால் கணிசமான வருமானத்தை உருவாக்கும் துறையாக இது விளங்குகிறது. எனினும் அண்மைக்காலத்தில் கறவை மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் இலங்கையின் ஏனைய துறைகளைப் போல் கடுமையான நிதி சார்ந்த நெருக்கடிகளைச் சந்திப்பதை அவதானிக்க முடிகிறது. […]

மேலும் பார்க்க

‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ : ‘Tea Time With Terrorists’ நூலை முன்வைத்து

11 நிமிட வாசிப்பு
February 18, 2025 | இளங்கோ

‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான தலைப்புடன் இருந்த ஈழம் பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு அமெரிக்கருக்கு ‘தீவிரவாதிகள்’ பற்றி அறியும் ஆவல் வருகின்றது. தீவிரவாதிகளை நேரடியாக அறிவதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் தீவிரவாதத்தை அறியவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர் நினைக்கின்றார். இத்தனைக்கும் அவர் இயந்திரவியலில் பணியாற்றிவர். ஒருவகையில் இன்றைய AI (Artificial Intelligence) பற்றி 25 […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பண்பாடு பற்றிக் குறிப்பிடுகையில், “பண்பாடு என்பது உண்மையில் மானிடவியல், சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். அன்றாட வாழ்க்கை உறவுமுறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவுவகை, ஆடை – ஆபரணங்கள், வைபோகம், சடங்கு இவற்றினூடாகத் தோன்றுகின்ற ஒரு மனநிலை” என்பார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு அடிப்படைகளை இரண்டாகப் பகுக்கலாம். எடுத்துக்காட்டாக: உண்ணும்போது, நகம் வெட்டும்போது, உறங்கும்போது பின்பற்றும் நடைமுறைகள் போன்று அனைத்து வாழ்வியலம்சங்களுக்குமான […]

மேலும் பார்க்க

வன்னித்தம்பிரான் வழிபாடு

20 நிமிட வாசிப்பு

அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன […]

மேலும் பார்க்க

சிலப்பதிகாரமும் ஈழத்துக் கண்ணகி வழக்குரையும்

26 நிமிட வாசிப்பு

ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களால் போற்றப்பட்டு வழங்கும் கண்ணகி வழிபாட்டு மரபினை வலுப்படுத்தும் வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினைப் படைத்தார். சிலப்பதிகாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பானது அக்காலத்தில் வழக்கிலிருந்த ஆசீவக மெய்யியலை பெரிதும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. சிலப்பதிகார காலத்திற்குப்பின் தமிழ்ச் சமுதாயம் பல்வகைச் சமய நுழைவுகளுக்கும் இடங்கொடுக்க வேண்டியதாயிற்று; சிலப்பதிகாரக் கால மெய்யியல் மரபுகளின் வீழ்ச்சியினையும் கடக்க வேண்டியதாயிற்று. இவ்வாறான பல்வேறுபட்ட சூழலிலும் ஈழத்தில் கண்ணகி வழிபாடென்பது மரபறாத் தொடர்ச்சியினையுடையதாக இன்றளவும் நடைமுறையில் […]

மேலும் பார்க்க

இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் : தோட்டத் தொழிலாளர் விடுதலைக்கான வழிகாட்டி

13 நிமிட வாசிப்பு

தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்குப் பெருந்தோட்டக் கட்டமைப்பு, அரசியற்கொள்கை, தொழிலாளர் சட்ட ஏற்பாடுகள், ஊதியமுறை முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ள கோ. நடேசய்யர், அம்மேம்பாட்டுக்குத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும் சமூக சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துதலும் இன்றியமையாதன என்பதைத் தன் கள அனுபவங்களூடே கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதனொரு வெளிப்பாடாகவே ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற சிறுநூல் அமைந்துள்ளது. ‘தொழிலாளர்கட்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்