ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார அரசியல் பேராசிரியர் நவரட்ண பண்டார 2014ஆம் ஆண்டில் The New Class in Sri Lanka (இலங்கையில் ஒரு புதிய வர்க்கம்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “அரசியல்வாதிகள் இன்று ஒரு புதிய வர்க்கமாக எழுச்சி பெற்றுள்ளார்கள். இந்தப் புதிய வர்க்கம் நான்கு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக பலமான ஒரு சமூக வர்க்கமாக உருவாக்கம் பெற்று இலங்கைச் […]
தமிழில்: த. சிவதாசன் எனது வீட்டிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கி நான் போகும்போதெல்லாம் அரசடி/ பலாலி வீதிகளின் சந்தியில் இருக்கும் SLITT வடக்குப் பல்கலைக்கழகத்தின் (SLIIT Northern Uni – NU) கட்டடத்தைக் கடந்து போவதுண்டு. சென்ற வருடம் (2023), இக்கட்டடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டதிலிருந்து, தூண்கள் நிறுவப்பட்டு, கண்ணாடி யன்னல்கள் பொருத்தப்படுவது என அதன் உருவாக்கத்தை மிகவும் ஆர்வமாக அவதானித்து வந்தவன். எதிர்காலக் கனவுகளைச் சுமந்துகொண்டு நம்பிக்கையோடு வந்து போகும் […]
அறிமுகம் இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தில், சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் மற்றும் கீழ்க்கட்டுமானம் பற்றிய சிறிய அறிமுகம் வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, கூத்தும் கூத்தின் கருத்தியலும், அவை நிலைத்திருப்பதற்கான காரணங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரை அவற்றை விவரமாக வழங்குகிறது. முதலில், இரண்டு விடயங்களைக் குறிப்பிடப்பட வேண்டும்: ஒன்று கருத்தியல், இன்னொன்று அக்கருத்தியலை உருவாக்கும் சமூக அமைப்பு. கருத்தியல் என்பது சிந்தனை—அகம் சார்ந்தது. சமூக அமைப்பு என்பது பௌதிகம்—புறம் சார்ந்தது. இந்தப் […]
நிலவியல் பண்டைய யாழ்ப்பாணம் நாகநாடு (மணிமேகலை), நாகதீவு (வல்லிபுரப் பொற்சாசனம்), நாகதீப (மகாவம்சம்), நாகதீபோய் (தொலமி) ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய யாழ்ப்பாணத்தில் நாகர்கள் வாழ்ந்தமையால் இப்பெயர்கள் யாவும் ‘நாக’ என ஆரம்பிக்கின்றன. அன்றைய நாகநாடு யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கு மேற்கேயுள்ள சிறுதீவுகள், வடக்கிலுள்ள இலங்கையின் தாய் நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆகிய நிலங்களைக் கொண்டிருந்தது. மகாவில்லாச்சியின் (மதவாச்சி) மேற்குக் கரையிலிருந்த அரிப்பிலிருந்து மகாவில்லாச்சியூடாக நாகபொக்கணைவரையும் ஒரு […]
16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளின்போது, ‘கிறிஸ்தவ இராச்சியங்களாகத்’ திகழ்ந்த ஐரோப்பாவிலே மதச் சீர்திருத்தத்துக்கான சக்திகளுக்கும் மதச் சீர்திருத்தத்திற்கு எதிரான சக்திகளுக்கும் இடையிலான உள்நாட்டுக் கலவரங்கள் நடைபெற்றன. அதனூடாகவே அங்கு தேசியவாதம் தலைதூக்கி தேசிய அரசுகள் உருவாகின. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மதத் திணிப்புக்கு எதிராக எழுந்த சுதேச மதங்களின் எழுச்சிகளின் ஊடாகவே காலனித்துவ தேசியவாதம் உருவாகியது. ஐரோப்பிய – மைய காலனித்துவக் கொள்கைகளும் ஆக்கிரமிப்புகளும் கிறிஸ்தவ மதத்தின் போர்வையிலே […]
பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட புதிய அரசாங்கம் இயங்கத் தொடங்கி நான்கு மாதங்கள் கடந்துள்ளன. இந்த இடைவெளியில், முந்தைய ‘புதிய அரசாங்கம்’ ஒவ்வொன்றினதும் அரங்கேற்றங்களின் பின்னரும், இன்றும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் கவனிப்புக்குரியன. இன்றைய கணிப்பில் அறுபது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் வலுவான நம்பிக்கையுடன் மேலும் விருத்தியை எதிர்பார்ப்பதாகவும் கருத்துரைத்துள்ளனர். பழையதன் மீது வெறுப்புற்று ஏற்படுத்தப்படும் புதிய அரசாங்கங்கள் மீது, இதே கால இடைவெளியில், முன்னர் இந்தளவிலான நம்பிக்கை […]
சென்ற கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவை சார்ந்த வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் சங்கானைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் காட்டும் தகவல்களை ஆராயலாம். சங்கானைக் கோவிற்பற்றில் சங்கானை, சுழிபுரம், தொல்புரம், மூளாய் ஆகிய நான்கு துணைப் பிரிவுகள் அடங்குகின்றன. நிலப்படம் இந்நான்கு பிரிவுகளையும் எல்லை குறித்துக் காட்டுகிறது (படம்-1). இக்கோவிற்பற்று, தற்காலத்தில் சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவின் […]
யாழ்ப்பாணத்துக்கும் மலாயா – சிங்கப்பூருக்கும் இடையில் வளர்ந்துவந்த நெருங்கிய தொடர்புகள் 1930களில் இடம்பெற்ற இரு பெரும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டன. ஒன்று, 1933 இல் தொடங்கிய பெருமந்தம் (Great Depression); மற்றது 1939இல் தொடங்கிய இரண்டாவது உலகப் போர். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தவரின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி, 1930களில் உச்சத்தை அடைந்தது. புலம்பெயர்வு தொடர்ந்து வளர முடியாத வகையில் பெருமந்தமும் உலகப் போரும் தடைபோட்டன. தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தவர் சிலர் ஆங்கிலேய நிர்வாகிகளால் […]
ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலகின் பெரும்பாலான நாடுகள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களாக (Multi-cultural Societies) விளங்குகின்றன. ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என அழைக்கக் கூடிய நாடுகள் உலகில் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களில் பெரும்பான்மையானவை ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என அரசியல் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுவர். ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களின் சிறுபான்மைத் தேசிய […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத்தொழிற்றுறையின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக அந்நியச் செலாவணி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழிற்றுறையாக ஆடைத்தொழிற்றுறை இருக்கின்றது. அதேவேளை கணிசமான இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கிய துறையாகவும் இது திகழ்கிறது. இத்துறையின் பொருளாதாரப் பரிமாணம் குறித்த அக்கறையும் கவனமும் மிகப் பெரியது. ஏற்றுமதிகள் குறைந்தாலோ, உற்பத்திகள் குறைந்தாலோ அக்கறை கொள்கிற அரசும், ஊடகங்களும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களின் நலன்கள் […]