Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – உடுப்பிட்டி

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை உடுப்பிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது. உடுப்பிட்டிக் கோவிற்பற்றில் உடுப்பிட்டி, கரணவாய் ஆகிய இரண்டு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1). எல்லைகள் உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணையும்; கிழக்கில் கட்டைவேலிக் […]

மேலும் பார்க்க

‘போருக்குப் பின்னரான’ இலங்கை: ஆய்வுச் சவாலும் தத்துவார்த்தச் சிக்கல்களும் – பகுதி 1

31 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் மே 2009 இல், இலங்கை அரசு கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால ஆயுத மோதலின் முடிவை அறிவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி அமைதி, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மீட்டெடுப்பதாகக் கருதப்பட்டது. கிட்டத்தட்ட உடனடியாக, போரின் மொழி அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் தேசிய புதுப்பித்தல் ஆகியவற்றின் மொழியால் மாற்றப்பட்டது. சாலைகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டன, சுற்றுலாப் பயணிகள் அழைக்கப்பட்டனர், தேர்தல்கள் நடத்தப்பட்டன, சர்வதேச நன்கொடையாளர்கள் மறுகட்டமைப்பில் பங்கேற்க […]

மேலும் பார்க்க

வடக்கின் ஏற்றுமதியாளர் சம்மேளனம் (CNE): பொருளாதார உச்சத்தை மீட்டெடுக்கும் பயணத்தில்

10 நிமிட வாசிப்பு

தமிழில்: த. சிவதாசன் “நாங்கள் இன்னும் அதிகமாக ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டும்” – இச்சொல்லாடலை நாங்கள் பலதடவைகள் கேட்டுவிட்டோம். அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள், பல்தகமை கொண்ட பலவகையான கருத்தாளர்கள் எனப் பலரிடமிருந்தும் பல தடவைகள் இதைக் கேட்டுவிட்டோம். இது அந்தளவுக்கு அப்பட்டமானதோர் உண்மையாயிருக்க, அதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டும்? இது எங்களுக்கு எப்போதே தெரியும். அப்படியிருந்தும் இது குறித்து நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? ஏற்றுமதி வர்த்தகம் என்பது […]

மேலும் பார்க்க

பிரதேசக் கூத்து வகைகளின் தனித்துவங்களும் அவற்றினிடையே காணப்பட்ட ஊடாட்டங்களும்

14 நிமிட வாசிப்பு

அறிமுகம் பிரதேசக் கூத்து மரபை நாம் வடபிரதேசக் கூத்து மரபு, வன்னிக் கூத்து மரபு, கிழக்குப் பிரதேசக் கூத்து மரபு, வடமேற்குப் பிரதேசக் கூத்து மரபு (மன்னார், சிலாபம்), மத்திய பிரதேசக் கூத்து மரபு என ஐந்து பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். இது புரிந்து கொள்வதற்கான ஒரு பிரிப்பே தவிர வேறொன்றுமில்லை. சிலர் இதனை வேறு விதமாகவும் பிரிப்பர். முதலில் பிரதேசக் கூத்து மரபின் சில தனித்துவங்களைச் சுருக்கமாக அறிந்து […]

மேலும் பார்க்க

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கலன சேனரத்தின ஐரோப்பாவின் 35 நாடுகள் ஒன்று கூடி 1975 ஆம் ஆண்டில் ஹெல்சிங்கி நகரில் ‘Helsinki Final Act’ எனப்படும் ஆவணத்தை இயற்றின. ஐரோப்பாவின் பாதுகாப்பும் கூட்டுறவும் பற்றிய (Conference on Security and Cooperation in Europe) அம்மாநாடு ‘CSCE’ என்ற சுருக்க எழுத்தால் அழைக்கப்படும். ‘CSCE’ இயற்றிய மேற்படி ஆவணம் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனத்தில் கூறப்பட்ட ‘Peoples’ என்ற சொல்லை உபயோகித்ததோடு, […]

மேலும் பார்க்க

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 4

25 நிமிட வாசிப்பு

குட்டிமணி, தங்கத்துரை கைது – 1981.04.05 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேசத்தில் உள்ள மணல்காடு என்னும் இடத்தில் இலங்கை கடற்படையின் சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் குட்டிமணி அவர்கள் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து சிறைச்சாலையிலும், தலைமறைவிலுமாகத் தனது வாழ்க்கையை மேற்கொண்டவர். தங்கத்துரை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராவார். இவர் தொண்டமானாறைச் சேர்ந்தவர். 1983 […]

மேலும் பார்க்க

மாந்தை: பண்டைய இலங்கையின் நெடுங்கடல் வர்த்தகத் துறைநகர்

49 நிமிட வாசிப்பு

மாந்தைத் துறைமுக நகரத்தைச் சுற்றிவர உள்ள இரட்டை மதில் சுவரைக் காட்டும் வான்வெளிப் படம். அடியில் வலது பக்கத்தில் பாலாவி ஏரி காணப்படுகிறது. Image Source: 1980 Aerial Photograph. மாந்தை (மாதோட்டம்) இலங்கையிலுள்ள துறைமுக நகரங்களில் மிகப் பழைமையான துறைமுக நகரங்களில் ஒன்று மாந்தை. இலங்கையில் இது ‘மாந்தைத்துறை’ என நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இது மாந்தை, மாதோட்டம், பெருந்துறை ஆகிய பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. சங்ககால […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

சமூகவியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகளில் சடங்குகள் என்பவை வெறும் கலாசார நிகழ்வுகள் மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், அதிகாரப் படிநிலைகள் மற்றும் உறவுமுறை அமைப்புகளைக் கட்டமைக்கும் வலுவான கருவிகளாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் உயிரியல் மாற்றங்களைச் சமூக அந்தஸ்து மாற்றங்களாக மாற்றியமைக்கும் பூப்புச் சடங்கும், இரு வேறு சமூகக் குழுக்களை இணைக்கும் ஒருமைப்பாட்டு நிகழ்வாக அமையும் திருமணச் சடங்கும் மானிடவியல் ஆய்வாளர்களுக்கு […]

மேலும் பார்க்க

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளில் வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் பங்களிப்பும் நீர்வளம், விவசாயம், கொள்கை, மேலாண்மை மற்றும் வளர்ச்சித் தந்திரங்களும் – பகுதி 1 

29 நிமிட வாசிப்பு

5.1 இலங்கைப் பொருளாதார வளர்ச்சி, மற்றும் பிராந்திய ‘GDP’ பங்களிப்பு இலங்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மொத்த உற்பத்தி (GDP) நிலை 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்தப் பொருளாதாரம் LKR 29.89 டிரில்லியன் (அமெரிக்கா $99 பில்லியன்) என மதிப்பிடப்பட்டது. அதே நேரத்தில், GDP வளர்ச்சி 5% வரை உயர்ந்தது, இது கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட […]

மேலும் பார்க்க

மலையக மக்களின் வாழ்வியலும் தாலாட்டுப் பாடல்களும்

13 நிமிட வாசிப்பு

நவீன சமூகங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. ஒரு பொதுவான பண்பாட்டுக் கட்டமைப்பிற்குள் வாழும் பல்வேறு குழுக்கள், அப்பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் அப்படியே ஏற்பதில்லை. மாறாக, தங்களின் தேவைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்பச் சில பிரத்தியேகப் பண்புகளை வளர்த்தெடுத்துக் கொள்கின்றனர். இத்தகைய உருவாக்கமே, ஒரு பெரிய சமூகத்திற்குள் அக்குழுவைத் தனித்துவமான அடையாளத்துடன் வேறுபடுத்திக் காட்டுகிறது. இது மானிடவியல் ரீதியாகச் சமூகப் பரிணாமத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும்.  இத்தகைய பண்பாட்டுத்தளத்தில் உருவாகிய மலையகச் சமூகம், தென்னிந்தியாவிலிருந்து […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்