Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இழந்த ஹெளமொழியும் இல்லாத இசைக்கலையும்

18 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நவீன இலங்கையின் வரலாற்றை நிர்ணயிக்கும் நிகழ்வுகள் பல இடம்பெற்ற காலம். இவை, அடுத்து வந்த இரண்டாம் காலில், அரசியலைப் பொறுத்து இலங்கையர் இன அடிப்படையில் பிளவுபட்டுப் பிரிந்து செல்ல வழிவகுத்தன. அரசியல் புலத்தில் மட்டுமல்லாது, பண்பாட்டுப் புலத்திலும் முக்கிய அபிவிருத்திகள் ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்பாடு, மொழி, மதம் ஆகியவை சங்கமித்துச் சிங்கள சமூகத்தில் ஒரு புரட்சியை உண்டுபண்ணின. பண்பாட்டு அடையாளத்தைத் […]

மேலும் பார்க்க

இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 1

45 நிமிட வாசிப்பு

வட இலங்கையின் சில பெருங்கற் பண்பாட்டு மையங்கள். Image Source: Dr S. Seneviratne, 1984. 1. காரைநகர் 2. ஆனைக்கோட்டை 3. கந்தரோடை. 4. மாந்தை, 5. தெக்கம் 6. பொம்பரிப்பு 7. மாமடுவ 8. அலுத்பொம்புவ 9. கரம்பன்குளம் 10. தெமன்ன-கொடல்ல 11. குருகல்ஹின்ன 12. வடிகவேவா 13. கோக்கபே 14. திவுல்வேவா 15. ரொபீவா 16. மச்சகம 17. அநுராதபுர கெடிகே 18. கதிரவெளி 19. […]

மேலும் பார்க்க

சடங்குகளின் அரசியல்: எதிர்காலத்தை இறந்தகாலத்தில் கட்டமைத்தல் – பகுதி 2

40 நிமிட வாசிப்பு

பகிரப்பட்ட வடிவங்கள்: தார்மீக உட்கட்டமைப்பாகச் சடங்கு முதல் வெளிச்சத்தில், குளம் அமைதியாக இருக்கிறது. பனைமரத் தண்டுகளில் மூடுபனி ஒட்டிக்கொண்டிருக்கிறது, காற்றில் புகை மற்றும் உப்பு வாசனை இலேசாக வீசுகிறது. பனியால் நனைந்த புடவைகளுடன் ஒரு சிறிய பெண்கள் குழு அமைதியாக நிற்கின்றது. அவர்கள் பூமாலைகளையும் ஒரு களிமண் விளக்கையும் ஏந்திச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவர் தனது மூச்சின் கீழ் முணுமுணுக்கிறார் – பாதி பாடல், பாதி புலம்பல். மற்றவர்கள் மெதுவாக […]

மேலும் பார்க்க

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 3

21 நிமிட வாசிப்பு

1977 பொதுத் தேர்தல் (1977 யூலை 22) 1977 பொதுத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாகப் பிரகடனப்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் ஈழ தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு, தமிழ் ஈழத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது. மனிதன் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரு பிரிவினர் தேர்தலை ஆதரிக்கவில்லை. முழுத் தமிழ்ச் சமூகமும் தேர்தல் வெற்றிக்காக உழைத்தது. ஐக்கிய தேசியக் கட்சி […]

மேலும் பார்க்க

பிரித்தானிய இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம் மற்றும் சமஷ்டி சிந்தனை

24 நிமிட வாசிப்பு

செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும், டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்கச் […]

மேலும் பார்க்க

சடங்குகளின் அரசியல்: எதிர்காலத்தை இறந்தகாலத்தில் கட்டமைத்தல் – பகுதி 1

39 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் போருக்குப் பிந்தைய இலங்கையின் வடக்குக் கிழக்கில் சடங்குகளின் அரசியலை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறைக்குப் பிறகு, மதக் கோட்பாட்டை விட அன்றாட மற்றும் நினைவுச் சடங்குகள் சமூக வாழ்க்கையின் மறுகட்டமைப்பை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராய்கிறது. 2009 மற்றும் 2025க்கு இடையில் நடத்தப்பட்ட நீண்டகால இனவியல் களப்பணியை மையமாகக் கொண்டு சடங்குகள் அரசியல் வெளிப்பாடுகளாகவும், தற்காலிக செயல்களாகவும் எவ்வாறு செயற்படுகின்றன என்பதில் கவனம் குவிக்கிறது. இச்சடங்குகள் போராலும் இடப்பெயர்ச்சியாலும் […]

மேலும் பார்க்க

அரசியலமைப்புவாதமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும், நிறைவேற்று அதிகாரத்துக்கான வாய்ப்பும்

8 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புக் குறித்த பெரும்பாலான விமர்சனங்கள், இந்தச் சட்டத்தின்  உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுடனான அதன் முரண்பாடுகள், அதன் செயற்படுத்தலில் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் என்பவை தொடர்பாக  நியாயமான முறையில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், இதுபோன்ற ஒரு கடுமையான சட்டம் நாட்டின் சட்டப் புத்தகங்களில் எவ்வாறு நுழைந்தது என்பதை ஆராய்வதும்கூட ஒரு முக்கியமான விடயம்தான். பெரும்பாலான ஜனநாயக அரசியலமைப்பு நாடுகளின் சட்டங்களில், நிர்வாகம் […]

மேலும் பார்க்க

மலையக நாட்டார் இலக்கியம் வெளிப்படுத்தும் தொழிற்களமும் விடுதலை உணர்வும்

8 நிமிட வாசிப்பு

மலையக மக்களின் வாழ்வியல் ஏனைய இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். தென்னிந்தியாவில் இருந்து காலனித்துவ ஆட்சியாளர்களால் அழைத்துவரப்பட்ட இம்மக்கள் முழுமையாக தமிழர்களாகவே இருந்தார்கள். இலங்கையில் பூர்விகமாக வாழும் தமிழர்களின் வாழ்வியல் முறையிலிருந்து இவர்கள் வேறுபட்டாலும், கலாசார ரீதியாகவும், மொழி ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒருமைப்பாடு உடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும், இவர்களின் வாழ்வியல், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு என்பன இவர்களை இலங்கைவாழ் மக்களிடமிருந்து தனித்துவமாக்கியது. இவர்களின் வருகையானது பட்டுக் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – கட்டைவேலி

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் பருத்தித்துறைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது. கட்டைவேலிக் கோவிற்பற்றில் கரவெட்டி, அல்வாய், துன்னாலை, வல்லிபுரம் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1). பருத்தித்துறையைப் போலவே இக்கோவிற்பற்றுக்குப் பெயர் கொடுத்த கட்டைவேலிக் கிராமத்தின் […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட லக்சிறி பெர்ணான்டோ பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களின் மாணவராக கனடாவின் நியு பிரண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பின்பட்டப் படிப்பை மேற்கொண்ட இன்னொருவர் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ (Laksiri Fernando) ஆவார். அவர் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியை ஆரம்பித்தார் (இப்பல்கலைக்கழகம் பின்னர் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது). லக்சிறி பெர்ணான்டோ […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்