ஆங்கில மூலம்: கேட் குரோனின் – ஃபர்மான் கூட்டணியைத் தடுக்கும் ஓர் உத்தி மனித உரிமைகள் கவுன்சிலில் எந்த அரசிற்கும் வீட்டோ அதிகாரம் இல்லை. அதன் நாற்பத்தேழு உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச்சபையால் மூன்று ஆண்டுகாலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற குழுக்கள் ஏழு இடங்களை மட்டுமே கொண்டுள்ளன. இதன்பொருள், எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், அரசுகளின் கூட்டடான ஆதரவைப் பெற்றேயாக வேண்டும் என்பதாகும். இந்த இயக்கவியலைப் பயன்படுத்திக்கொண்டு, ராஜபக்சே […]
அறிமுகம் இயற்கையின் மீதான ஆர்வம், அதிசயம், அச்சம் போன்றனவே அதனை வழிபடத் தூண்டின; இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்கள்மீது மனிதரைக் கவனம் செலுத்தச் செய்தன. சடத்துவமான இயற்கை தானாகவே இயல்பிறந்த ஆற்றல்களை நிகழ்த்த முடியாது. இப்பிரமாண்டமான இயற்கையை இயக்க அதனிலும் ஆற்றல்வாய்ந்த சக்தி அல்லது சக்திகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட வலுப்பட இறைவன் பற்றிய பிரக்ஞை வலுப்பட்டது. இயற்கை வழிபாடு தெய்வ வழிபாடாயிற்று. இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களிலும் இறைவனது […]
முன்னுரை முந்திய கட்டுரையிலே கூத்திலே காணப்பட்ட பாதகமான அம்சங்கள் கூறப்பட்டன. அதன் பாதகமான அம்சங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்வோம்: இன்னும் பல உள்ளதாயினும், பிரதானமானவை இவைகளே. இத்தனை பாதகங்கள் இருந்தும், இன்றும் இவை மக்களால் வரவேற்கப்படுகின்றன; ஊரிலே ஆடப்படுகின்றன. சிலநேரங்களில் போட்டிபோட்டுக் கொண்டு கிராமங்களில் கூத்துகள் நடக்கின்றன. இதற்கான காரணங்கள் யாவை? இந்த ஆய்வு எம்மை சமூக உளவியல் ஆய்வில் கொண்டுவந்து நிறுத்தும். இங்கே நான் பதினொன்று உபகாரணங்களை முன்வைக்கிறேன். […]
ஆங்கில மூலம்: கேட் குரோனின் – ஃபர்மான் இலங்கையிலிருந்து கிடைத்த சான்றுகள் இலங்கையின் பாதுகாப்புப் படைகள் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் பாரிய அளவில் செய்துள்ளன என்பதற்கான சான்றுகள் 1983 – 2009 உள்நாட்டுப் போருக்குப் பின்னர் வெளிவந்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகும் ஏறக்குறைய 150,000 பேர் இன்னும் கணக்கில்வராமல் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் நம்புகிறார்கள். உயிர் பிழைத்தவர்களிடமிருந்தும் சர்வதேச சமூக உறுப்பினர்களிடமிருந்தும் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையிலும் […]
தமிழில்: த. சிவதாசன் டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரசசேவைகள் ஏற்கனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (Bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில், இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? சமீபத்தில், குடிமக்கள் […]
தொல்லியலாய்வின் முக்கியமானதொரு அம்சம் அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களின் வயதைக் கணிப்பிடுவதாகும். இக்காலத்தில் கதிரியக்கப் பரிசோதனைகளான கதிரியக்கக்கரிம வயதுக்கணிப்பு (Radiocarbon Dating), வெப்பேற்று கதிரொளிவீச்சு கணிப்பு (Thermo-Luminescence: TL), ஒளிக்கிளர்ச்சியூட்டிய கதிரொளிவீச்சு கணிப்பு (Optically Stimulated Luminescence: OSL) ஆகிய ஆய்வுகள்மூலம் இத்தொல்பொருட்களின் வயது கணிப்பிடப்படுகிறது. இப்பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்கள் இலங்கையில் இல்லை. இந்தியாவில் வெப்பேற்றக் கதிரொளி வீச்சு, ஒளியேற்றக் கதிரொளிவீச்சு ஆய்வுகூடங்கள் உள்ளன. கதிரியக்கக் கரிம வயதுக்கணிப்பு ஆய்வுகூடம் அங்கும் […]
உதவி : ஜீவராசா டிலக்ஷனா 1921 ஆம் ஆண்டு ஆரம்பித்த இக்காலகட்டம் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெறும்வரை நடைமுறையில் இருந்தது எனக் கூறலாம். இக்காலகட்டத்துடன் தமிழின அரசியல் என்பது ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் இக்காலகட்டத்து தமிழர் அரசியல் என்பது இலங்கை என்கின்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குள் சமவாய்ப்பைக் கோரும் அரசியலாகவே இருந்தது. இதை ஆரம்பித்து வைத்தவர் […]
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், மல்லாகம் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். மல்லாகம் கோவிற்பற்று, அதன் நீளப்பாட்டு அச்சு மேற்கு – கிழக்காக இருக்கும்படி வலிகாமப் பிரிவின் நடுப்பகுதியை அண்டி அமைந்துள்ளது. இதற்குள் மல்லாகம், அளவெட்டி, ஏழாலை – ஈவினை, புன்னாலைக்கட்டுவன், சூராவத்தை ஆகிய ஐந்து துணைப்பிரிவுகள் […]
நவீன உலகை அண்மித்தல் இருபதாம் நூற்றாண்டின் உதயத்தை உலக வரலாற்றில் ஒரு புது யுகம் தொடங்குவதைக் குறிக்கும் நிகழ்வாகக் கொள்ளலாம். மேற்குலகிலும் பிற இடங்களிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி எவ்வளவுதான் மாற்றங்களைக் கொண்டுவந்தபோதிலும் அந்த நூற்றாண்டு 1900 இல் முடிவடைந்தபோது, இன்று நாம் நவீன வாழ்வின் அத்தியாவசியப் பொருட்களாகக் கருதும் பல முன்னேற்றமான உபகரணங்கள் புழக்கத்தில் இருக்கவில்லை. இவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து துரிதமாகப் பெருந்தொகையான […]
தொடக்கக் குறிப்புகள் சமகால இலங்கையின் கல்வியானது ஒரு நெருக்கடியான புள்ளியில் நிற்கிறது. பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையான எமது கல்வியும், கல்விமுறையும், அதுசார் நிறுவனங்களும் பொருத்தமானவையா, பயனுள்ளவையா, வினைத்திறனானவையா போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். குறிப்பாக, எமது பல்கலைக்கழகக் கல்வி மிகுந்த சவாலுக்குள்ளாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் கல்வித்துறையை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முழுமையாகக் கல்வி தடைப்பட்டுள்ளது. இது […]