Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

ஈழத்துத் தமிழ்க் கூத்துகளின் பிரதேசத் தன்மை: ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

25 நிமிட வாசிப்பு

அறிமுகம் கூத்திலே அதன் பிரதேசத் தன்மைகள் முக்கியமானவை. இவை அதிகம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை, ஆனால் முக்கியமானவை. கூத்தின் பிரதேசத் தன்மைகளை அறிய முன்னர் பிரதேசங்களின் தன்மைகளை முதலில் அறிந்துகொள்வோம்.  பொதுவாக இந்திய நாட்டில் தமிழர் கூத்துகளை அவதானிப்போர், ஆராய்வோர், அக்கூத்துகள் தமிழ் நாட்டின் வடபகுதிகளிலும் மேற்குப் பகுதிகளிலுமே நிலவுவதை இனங்கண்டு கொள்வர். தமிழ் நாட்டின் தென்பகுதிகளில், முக்கியமாக மதுரைப் பகுதிகளில் இவை இல்லை. அங்கு வேறு ஆற்றுகை வடிவங்கள் உள்ளன. […]

மேலும் பார்க்க

ஆன்மிகமும் குணப்படுத்தலும்: இயலாமையின் இருப்பியல் பகுதி – 1

37 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் மே 2009 இல் முள்ளிவாய்க்காலில் இறுதிக் குண்டுகள் விழுந்தபோது, புகை காற்றோடு கலந்து வெளிக்கவில்லை, எஞ்சியதோ அவநம்பிக்கையின் மந்தமான மூடுபனி. “போர் முடிந்துவிட்டது” என்று மக்கள் கிசுகிசுத்தனர். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று யாராலும் சொல்ல முடியவில்லை. போரின் களங்களில் நீண்ட அமைதிக்குப் பிறகு கோயில்கள் மீண்டும் மணிகளை அடிக்கத் தொடங்கின. வடபுலத்தின் போர் தின்ற நிலங்களில் மீளக்குடியேறிய குடும்பங்கள் எஞ்சியிருந்த, உடைந்த/ எரிந்த செங்கற்களால் சிறிய […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – பருத்தித்துறை

14 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். அத்துடன், வலிகாமத்திலுள்ள 14 கோவிற்பற்றுகளைப் பற்றிய விவரங்களும் சென்ற கட்டுரையுடன் நிறைவடைந்தன. இந்தக் கட்டுரையில், வடமராட்சிப் பிரிவிலுள்ள கோவிற்பற்றுகளைப் பற்றிய விவரங்கள் தொடங்குகின்றன. வடமராட்சிப் பிரிவில் பருத்தித்துறை, கட்டுவேலி (கட்டைவேலி), உடுப்பிட்டி ஆகிய மூன்று கோவிற்பற்றுகள் உள்ளன. முதலில் பருத்தித்துறைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை […]

மேலும் பார்க்க

மாலதி எழுதிய ‘எனது தேசத்தில் கடந்துபோன ஒரு தருணம்’ – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இறுதி ஆண்டுகள் – பகுதி 2

23 நிமிட வாசிப்பு

இந்நூலின் முதல் எட்டு அத்தியாயங்களையும் திக்குகள் எட்டு தொடரின் கடந்த பாகத்திற் பார்த்திருந்தோம். இப்பாகம் அந்நூலின் மீதமுள்ள அத்தியாயங்கள் மீது கவனம் செலுத்துகின்றது. புலிகளின் நிழல் அரசின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் நிலவிய சமூக, அரசியல், வாழ்வியல் மற்றும் வரலாற்றுச் சூழல்களையும் போரின் விளைவாக அங்கு ஏற்பட்ட மாற்றங்களையும் இந்த அத்தியாயங்கள் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் விவரிக்கின்றன. போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் போருக்கு இட்டுச்சென்ற காரணிகள் முதல் முள்ளிவாய்க்கால் […]

மேலும் பார்க்க

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முன்னோடிகள்

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: சூரியா விக்ரமசிங்க இந்தக் கட்டுரை, ஏற்கனவே உள்ள சட்டங்களில் காணப்படும் விதிகளைப் போலவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலும் (PTA)1 உள்ளடக்கப்பட்டுள்ள, சில ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டதாக அமைகிறது. பலரும் நினைப்பது போல, இந்த ஒற்றுமைகள், வெறுமனே அவசரகாலச் சட்டங்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில் அவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களிலும் கூடக் காணக்கூடியதாக இருக்கின்றன. இந்தக் கட்டுரையின் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கும் சட்டவிதிகள், (அவ்வப்போது கொண்டுவரப்பட்ட) […]

மேலும் பார்க்க

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

இக்கட்டத்தில் தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டம் இலங்கை என்ற மட்டத்தில் நின்றது. பிராந்திய மட்டத்திற்குச் செல்லவில்லை. இதனால் இலங்கை அரசு மட்டுமே எதிரியாக இருந்தது. ஆயுதச் செயற்பாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. தமிழரசுக்கட்சியின் போராட்ட அலை வீழ்ச்சியடைதல் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு சக்திகள் தொழிற்பட்ட போதும் தமிழரசுக்கட்சி மட்டுமே ஒரு போராட்ட சக்தியாக தமிழ்த்தேசிய அரசியலை வீரியத்துடன் […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் 1833 முதல் 1931 வரை – பகுதி – 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: லக்ஸ்மன் மாறசிங்க குறூ – மக்கலம் சீர்த்திருத்தம் 1911 ஆம் ஆண்டு குறூ – மக்கலம் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் யாப்பு கோல்புறூக் அரசியல் யாப்பின் பிரதான குறைகள் சிலவற்றைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வரையப்பட்ட யாப்பாகும். பிரித்தானிய அரசாங்கம் கோல்புறூக் யாப்பில் அடையாளம் கண்ட குறைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தங்களை நான்காக வகுத்துக் கூறலாம். 1. சட்டசபையில் உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினர்கள் (Official […]

மேலும் பார்க்க

ஈழத்துத் தமிழ்க் கூத்துகளின் வடிவங்களும் அவற்றின் உருவாக்கங்களும்

25 நிமிட வாசிப்பு

முன்னுரை ஈழத்துத் தமிழ்க் கூத்து என்று கூறியதும், ஈழத்தை அல்லது இலங்கையை அறியாத தமிழ்நாட்டுத் தமிழர் அல்லது பிற நாட்டவர் அதனை ஒரு கூத்து வகை எனவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நான் எனது அனுபவம் மூலம் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு ஈழத்திலே ஒரு கூத்து அல்ல, பல கூத்துகள் உள்ளன என்பதை விளக்கியும் இருக்கிறேன். இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது, அத்தகையோரோடு உரையாடிய […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: லக்ஸ்மன் மாறசிங்க ‘The Evolution of Constitutional Government in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் அரசியல் யாப்பு ஆளுகையின் (Constitutional Governance) தோற்றமும் அதன் படிப்படியான வளர்ச்சியும் பற்றி வரலாற்று நோக்கில் ஆராயும் நூலாகும். இந்நூலை சட்ட அறிஞரும், பேராசிரியருமான காலம் சென்ற லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் எழுதி வெளியிட்டார். இந்த நூலின் முதலாவது அத்தியாயமான முன்னுரையில் அவர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1950களின் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிக்குடியேற்றங்கள்

25 நிமிட வாசிப்பு

இந்தத் தொடரில் ஆய்வு செய்யப்படும் யாழ்ப்பாணப் பகுதி தொல்லியல் மையங்கள்:    1. கந்தரோடை 2. ஆனைக்கோட்டை 3. யாழ்ப்பாணம் கோட்டை 4. வல்லிபுரம் 5. பூநகரி 6. காரைநகர் 7. வேலணை: அல்லைப்பிட்டி – சாட்டி 9. புங்குடுதீவு 10. நயினாதீவு 11. நெடுந்தீவு யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிகாலக் குடியிருப்புகள் அமைந்த நிலங்களை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: I. யாழ்ப்பாணத்திற்கு மேற்கே பாக்கு நீரிணையிலுள்ள சிறிய தீவுகள். II. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்