இப்பகுதி ‘தமிழர்களும் தேசமும்’ எனும் மாதுரிகா இராசரத்தினம் அவர்களின் ஒப்பீட்டு ஆய்வுநூலின் நான்காவதும், ஐந்தாவதுமான அத்தியாயங்கள்மீது பார்வையைச் செலுத்துகின்றது. அவை முறையே ‘பின்-சுதந்திர இந்தியாவில் தேசத்திற்குள் தமிழர்கள்’, ‘தேசத்திற்கு அப்பால்: பின்-சுதந்திர இலங்கையில் சிங்களவரும் தமிழரும்’ எனும் தலைப்புகளைக் கொண்டுள்ளன. நான்காவது அத்தியாயம் பின்-கொலனித்துவ யுகத்தில் தமிழக அரசியல் இயக்கங்களின் பரிணாமங்களுக்கும், இந்தியத் தேசிய அடையாளத்திற்குமிடையிலான தொடர்பு குறித்துப் பேசுகிறது. முதலில், இந்திய அரசியலமைப்பில் உள்ளீடாகவுள்ள இந்தியத் தேசிய அடையாளம் […]
1.1. அறிமுகம் இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 65,526 சதுர கிலோமீட்டர்கள் (25,300 சதுர மைல்கள்). இது, அட்சரேகை 5° 55’ முதல் 9° 50’ வரையும், தீர்க்கரேகை 80° முதல் 82° வரையுமான இடத்தில் அமைந்துள்ளது. நிர்வாக நோக்கங்களுக்காக, நாடு ஒன்பது மாகாண சபைகள் மற்றும் 25 மாவட்ட நிர்வாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2005 இல் மக்கள்தொகை 19,544,988 ஆக இருந்தது (அடர்த்தி: […]
ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன சர்வசன வாக்குரிமையும் கராவ சாதியினரின் வீழ்ச்சியும் 1920களில் சட்டசபை உறுப்பினர்கள், இலங்கையின் அப்போதைய சனத்தொகையின் 4 வீதத்தினரான எண்ணிக்கையுடைய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களோடு நியமன உறுப்பினர்களும் சட்ட சபையில் அங்கம் வகித்தனர். 1920கள் உண்மையில் கராவ சாதியினரின் பொற்காலம் ஆகும். 1925 இல் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகமானதும், சட்டசபையில் அவர்களின் விகிதாசாரம் குறைந்தது. 1930களில் சர்வசன வாக்குரிமை அறிமுகமானதும் கராவ சாதியினரின் சட்டசபை […]
பீலிவளை புதல்வன் தொண்டைமான் இளந்திரையன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நாகநாட்டை ஆண்ட அரசர்கள் பௌத்தமதத்தைத் தழுவியிருந்தார்கள். இம்மன்னர்களின் மாண்புகளை மணிமேகலை எடுத்துரைக்கிறது. நாகநாட்டை ஆட்சிபுரியும் மன்னன் ‘வளைவாணன்’ (வளை எறிவதில் வல்லவன்) என்ற பெயரைக் கொண்டவன். அவனது மனைவியான அரசியின் பெயர், வாசமயிலை. அவர்களுக்குப் பிறந்த பெண், பீலிவளை. “நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாச மயிலை வயிற்றுட் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த […]
அறிமுகம் மனிதகுல வரலாற்றில் புதிய கற்காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு 9000 – 6000) விவசாய உற்பத்தி, ஆயர்வாழ்வு என்பன தோன்றிவிட்டன (Allchin, F.R. 1963, Neolithic Cattle Keepers of South India, Cambridge). தமிழ்ச்சமூகத்திலும் காடுசார் வாழ்வுடைய திணைக்குடிகளான முல்லைநில மக்கள், ஆரம்பத்தில் மேய்ச்சல் நிலத்துக்கான புலம்பெயர்வாளர்களாக இருந்தபோதிலும் நிலையான குடியிருப்புகள் உடையவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். தரிசாக இருந்த கொல்லை நிலத்தில் (அகம்:89:17) பயிரிடல் மேற்கொள்ளப்பட்டது. காடழித்துக் களனியாக்கப்பட்டது (அகம், […]
அறிமுகம் உலகம் எங்கணும் பரந்துவாழும் தமிழ்ச்சமூகத்தை, தமிழ்ச்சமூகமாக இணைக்கின்ற இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன: ஒன்று, அவர்கள் பேசும் தமிழ்மொழி; மற்றது, அவர்களால் கட்டமைக்கப்பட்ட தமிழ்ப்பண்பாடு. இந்த இரண்டிற்கும் ஒரு வரலாற்றுப்பின்னணியும், வளர்ச்சிப்பின்னணியும் உள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே வளர்ச்சிபெற்ற தமிழ்மொழி காலத்திற்கேற்ப மாறிவந்துள்ளது. அதுபோலவே, 3000 வருடங்களுக்கு முன்னரே உருவான தமிழ்ப்பண்பாடும் காலந்தோறும் மாறிவந்துள்ளது. இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டால்தான் தமிழ்ச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தையும் கருத்தியலையும் நம்மால் உணரமுடியும். தமிழ் இனத்தின் […]
இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. தமிழர்கள் மத்தியில் உருவாகி இருந்த மதமறுமலர்ச்சி இயக்கம், ஆறுமுக நாவலர் என்று அறியப்படும், கந்தப்பிள்ளை ஆறுமுகப்பிள்ளை என்ற ஆளுமைமிக்க, ஒருவரின் பெயரோடு பின்னிப்பிணைந்தது. அது ஒரு மக்கள் இயக்கமாக அன்றி, ஆறுமுக நாவலரினதும் அவரது சகாக்களினதும் செயற்பாடுகளின் தொகுப்பாகவே அமைந்தது. ஆனால் சைவ மதத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், தமிழுக்கும் வழங்கப்பட்டதால் மொழிசார்ந்த தேசியவாதம் இங்கு உருவானது. 1879 இல், […]
இலங்கையில் தமிழ்க்குயர் சமூகத்தினர் பல்வேறுபட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இப்பிரச்சினைகளுக்கு அடிப்படையாகச் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுக் காரணிகள் முக்கிய பங்குகளை வகிக்கின்றன. குயர்மக்கள் மருத்துவமனைகளை நாடும்போது பாலின அடையாளத்தைக் கேட்கும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அவர்களை மரியாதையின்றி அணுகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. “குயர் மக்கள் வைத்தியசாலைகளை நாடும்போது வெளிநோயாளர் பிரிவில் இருந்து பல்வேறு தரப்பினராலும் பாரபட்சங்களை எதிர்கொள்கிறார்கள்” எனச் செயற்பாட்டாளரான வரதாஸ் […]
இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். இலங்கையின் பௌத்தத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான வரலாறு உள்ளது. இக்காரணங்களினால் இலங்கையின் பௌத்தம் தனக்கேயுரிய சிறப்பியல்புகளை உடையதாய் இருக்கிறது. இச்சிறப்பியல்புகளை ‘தத்துவமும் நடைமுறையும்’ என்னும் தலைப்பில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கடவுள் மறுப்புக் கொள்கை பௌத்தம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டது. […]
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடுபோகம், நீள்புகழ் மன்னும் புகார்நகர்!” -சிலப்பதிகாரம் I:21-22. நாகநாடு வரலாற்றுப் பதிவுகளில் நாகநாடு அன்றைய உலகின் செல்வச்செழிப்பும் சிறந்த வாழ்வும்கொண்ட ஒரு நாடாகக் கூறப்படுகிறது. அதனால்தான் சிலப்பதிகாரக் காவியத்தில் பூம்புகார் நகரின் பெருமையை விளக்கவந்த இளங்கோ அடிகள் “நாகர்களின் நெடிய நகரோடு விளங்கும் நாகநாட்டினோடு ஒப்பாக, போக வாழ்வு பரவிக் கிடக்கும் நீண்ட புகழ் நிறைந்த புகார்” எனக் கூறிச்சென்றிருக்கிறார். பண்டைய நாட்களில் இலங்கையின் வடபகுதி, […]