Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

யாழ்ப்பாண பௌத்தம்: கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 1

34 நிமிட வாசிப்பு

கந்தரோடை ஸ்தூபிகள். Source: Sri Lanka Guardian. முன்னுரை பௌத்த மரபுக் கதைகளின்படி புத்த பிரான் தனது வாழ்நாட்களில் வருகை தந்த இடங்களில் நாகதீபமும் (நாகதீவு – நாகநாடு) ஒன்றாகக் கூறப்படுகிறது. புத்த பிரானின் காலத்தில் இலங்கையில் நாகர்கள் ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் நாகதீபமும், மேற்குக் கரையிலிருந்த கல்யாணியும் முக்கியமான இடங்கள் என இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நூலில் கூறப்படும் ஒரு […]

மேலும் பார்க்க

மார்க்சிய சமூகவியலாளர் கலாநிதி நியூட்டன் குணசிங்க: 1946 – 1988 

30 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட கலாநிதி நியூட்டன் குணசிங்க 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தார். அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை கம்பளை விக்கிரமபாகு மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று 1968ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர, லக்சிறி ஜயசூரிய ஆகியோர் பேராதனையில் இவரது […]

மேலும் பார்க்க

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 2

29 நிமிட வாசிப்பு

குமுதினிப் படகுப் படுகொலைகள் குமுதினிப் படகுப் படுகொலைகள், 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். […]

மேலும் பார்க்க

நவீன இலங்கை வரலாற்றின் போக்கினை நிர்ணயித்த 1920கள்

15 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி இலங்கைக்கு 1927 நவம்பர் 12 இல் வந்தார். மறுநாள், நவம்பர் 13 இல், லண்டனில் இருந்து டொனமூர் ஆணைக்குழுவினர் வந்திறங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கையின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வலுவைப் பெற்றிருந்தன. ஆனால், ஒன்று, குறுகிய கால விளைவுகளை மட்டும் ஒரு குறுகிய பிரதேசத்தில் உண்டுபண்ணி வலுவிழந்து மறக்கப்பட்டது. மற்றது, அரசியல் வரலாற்றின் போக்கினைத் திசை திருப்பியது. மறக்கப்பட்ட நிகழ்வு மகாத்மாவின் […]

மேலும் பார்க்க

நடேசய்யரின் ‘Under Planter Raj – The Standard Wage in Ceylon: தோட்டத் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கான அறிவுசார் தலையீடு

27 நிமிட வாசிப்பு

1 சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தோட்டத் தொழிலாளரின் ஊதியப் பிரச்சினை முதன்முதல் பரந்தளவிலான கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்காலத்தில்தான் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்; கருமுத்து தியாகராஜச் செட்டியார் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை விரிவான சான்றுகளுடன் விவரித்து, அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய தேவையை வலுவாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியில், இந்திய அரசு தோட்டத் தொழிலாளர் வாழ்வை மேம்படுத்தும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான சர்வதேச விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்

33 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: அருட்தந்தை நோயல் டயஸ் இலங்கையில், சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தனிநபருக்குரிய உரிமையைப் பாதுகாப்பதில் மிகவும் கடினமான பிரச்சினையாக இருப்பது, சர்வதேசரீதியான கடப்பாடுகளை அங்கு அமுல்படுத்துவதில் உள்ள சிக்கலாகும். இலங்கை முழுமையான இணக்கத்துடன் செய்துகொண்டுள்ள இரண்டு முக்கியமான ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தன. இதில் முதலாவது, ‘சித்திரவதைகள், பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது மோசமான தாக்குதல்கள் அல்லது தண்டனைகள்’ என்பவற்றுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டின் (இனி இது இக்கட்டுரையில் CAT […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 3

46 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தாராண்மை மறுப்பு அரசு இலங்கையில் பின்காலனித்துவ அரசு ஒன்று தாபிக்கப்பட்டு 64 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த அரசு பயணித்த பாதையினையும், அதன் பயணத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் திரும்பிப் பார்ப்பதற்கும், பரிசீலனை செய்வதற்கும் இந்த நீண்ட இடைவெளி எமக்குப் பயனுடையதாக உள்ளது. நாம் ஒரு காலப்பகுப்பு ஒன்றைச் செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் இப் பின்காலனித்துவ அரசை நிர்வகித்த அரசாங்கங்கள் எவை? அவற்றின் […]

மேலும் பார்க்க

வி.எஸ். கோவிந்தசாமி: நாடற்றவர்களுக்காக ஒலித்த உரிமைக்குரல் 

22 நிமிட வாசிப்பு

தற்காலிக வதிவிட விசாவில் இலங்கை வந்த வி.எஸ். கோவிந்தசாமி தேவர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் கொழும்பு பணிமனையில் கடமையாற்றி, எழுபதுகளில் தாயகம் திரும்பியுள்ளார். ஐம்பதுகள் முதல் நாடு திரும்பும் வரை பல பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். ஏனையோரைப் போல் பிரஜாவுரிமை மறுப்பைப் பற்றிப் பாடியுள்ள இவர், தற்காலிக வதிவிட விசாவில் வந்த இந்தியத் தமிழர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளைப் பற்றியும் எழுதியுள்ளார். வதிவிட விசாவில் வந்தவர்களின் பிரச்சினை பற்றி இவர் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 3

29 நிமிட வாசிப்பு

மரணச் சடங்குகள்  மரணச் சடங்குகள் என்பவை வெறும் உடல் சார்ந்த இறுதி நிகழ்வுகள் மட்டுமல்ல; அவை சமூகத்தின் ஆன்மிகம், தத்துவம், உறவுமுறை மற்றும் வாழ்வியல் விழுமியங்களின் ஆழமான வெளிப்பாடுகளாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் கடந்து வரும் பதினாறு நிலைகளில், இறுதிச் சடங்கு என்பது மிகவும் முக்கியமானது. மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் மாறுதல் அல்லது இடப்பெயர்வு […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 2

22 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட இலங்கை அரசைத் தாராண்மையற்றதாக மாற்றுதல் (De–liberalisation of Sri Lankan State) தலையிடாக் கொள்கையுடன் இணைந்த தாராண்மை வாதம் (Laissez–faire Liberalism) என்ற பண்பை இழந்து தலையிடும் அரசு (Interventionist State) என்ற இயல்புடையதாக இலங்கையின் அரசு 1956–1965 காலப்பகுதியில் உருமாற்றம் பெறலாயிற்று. இத்தலையிடும் அரசு, அரச முதலாளித்துவம் (State Capitalism), பாராளுமன்ற ஜனநாயகம் என்ற இரண்டினதும் சேர்க்கையாக அமைந்தது. மக்கள் ஐக்கிய […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்