Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்  : லக்ஸ்மன் மாறசிங்க (Lakshman Marasinghe) பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க ‘A Survey of Structures for Power Devolution’ என்னும் தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ‘Institute for Constitutional Studies’ என்னும் ஆய்வு நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘Power Sharing : The International Experience’ என்னும் நூலின் இரண்டாவது அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வதேச அனுபவங்கள் குறித்த பல […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – மானிப்பாய்

10 நிமிட வாசிப்பு

சென்ற கட்டுரையில் உடுவில் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் விடயங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி மானிப்பாய்க் கோவிற்பற்றுத் தொடர்பான தகவல்களை ஆராயலாம். இக்கோவிற்பற்றில் மானிப்பாய், சுதுமலை, ஆனைக்கோட்டை, நவாலி, சண்டிலிப்பாய் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1). ஒல்லாந்தர்கால மானிப்பாய்க் கோவிற்பற்று முழுவதும் இன்றைய வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் பகுதியாக அமைந்துள்ளது. எல்லைகள் மானிப்பாய்க் கோவிற்பற்றின் தெற்கெல்லையில் கடலேரியும்; கிழக்கு எல்லையில் வண்ணார்பண்ணை, நல்லூர், உடுவில் […]

மேலும் பார்க்க

இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110. இனம்சார் மதவாதப் பெருமெடுப்பும் இன முரண்பாடும் தலையெடுக்கும் நாட்களில் மக்களாட்சி அடிவாங்குகிறது. இலங்கையில் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையினரால் முறையாகக் கையாளப்படாத நிலையில், 26 ஆண்டுகள், குருதி வழிந்த […]

மேலும் பார்க்க

இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் சங்ககால வேள்

16 நிமிட வாசிப்பு

இலங்கையின் பண்பாட்டு வரலாற்றைத் தென்னிந்தியாவின் தென்பகுதியுடன் குறிப்பாகத் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி ஆராயும் போக்கு அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதற்குத் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பண்பாட்டலைகள் சமகாலத்தில் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியதே காரணமாகும். இதை இலங்கையின் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது. இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால எழுத்து, மொழி, […]

மேலும் பார்க்க

இலங்கையில் நூலகவியற் கல்வி – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் பங்கு 1970 ஆம் ஆண்டின் மார்ச் 24 ஆம் திகதி உருவாக்கப்பட்ட 17 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டப்படி 1970 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உருவாக்கப்பட்ட ‘இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின்’ முக்கிய குறிக்கோளும் பொறுப்பும் இலங்கையில் தேசிய நூலகமொன்றை உருவாக்குவதும் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதுமாகும். மேலும் அதன் மற்றொரு முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது, இலங்கையின் நூலகசேவையை நவீனமயப்படுத்தும் வகையில் […]

மேலும் பார்க்க

வரலாறும் கருத்தியல் நிலவரமும்

10 நிமிட வாசிப்பு

விக்டர் டி மங்க் (Victor de Munck) மற்றும் கிறிஸ்தோபர் மனோகரன் (Christopher Manoharan) ஆகிய ஆய்வாளர்கள் குடாலிக் கிராமத்தில் மேற்கொண்ட தங்களது களப்பணி மூலமான ஆய்வான “Accessing the Interiority of Others: Sufism in Sri Lanka“ இல், மேலும் பல விடயங்களை இலங்கையில் சூஃபித்துவம் சார்ந்து பகிர்ந்துகொள்கின்றனர். குடாலியில் உள்ள வயது வந்த ஆண்களில் கிட்டதட்ட முந்நூறு பேர் காதரி வரிசையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். […]

மேலும் பார்க்க

மகாவம்சத்தின் மறுகண்டுபிடிப்பும் அதன் புனைவுகளின் தாக்கமும்

15 நிமிட வாசிப்பு
December 30, 2024 | பி. ஏ. காதர்

இலங்கையில் மாத்திரமல்லாது காலனித்துவ நாடுகள் பலவற்றிலும் அரும்புநிலை தேசியஎழுச்சி மதங்களின் மீளாக்க எழுச்சியுடன் இணைந்ததாகவே காணப்பட்டது. இவற்றிடையே பொதுவான சில இலட்சியங்கள் இருந்தன. மன்னர் ஆட்சி நிலவிய நிலவுடமைக் காலகட்டத்தில் மன்னர்களும் அரசுப் பிரதானிகளும் தளபதிகளும் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் மதபோதகர்கள் இருந்தனர். தொழிற்சங்கமோ அரசியல் கட்சிகளோ அத்தகைய வேறு நிறுவன அமைப்புகளோ இல்லாத அன்றைய சமுதாய அமைப்பில் நாடுபூராகவும் பரந்து கிடந்த ஒரே நிறுவனமாக […]

மேலும் பார்க்க

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கூட்டுறவு வங்கிகளின் தேவையும் 

16 நிமிட வாசிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் உடனடி விளைவாக வறுமை அதிகரித்து வருகின்றது. தற்போதைய கணக்கீட்டின்படி, 70 இலட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளனர். அதிகரித்த குழந்தை வறுமை ஒரு பெரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினையாக மாறி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் அரசின் பங்கு முக்கியமானதே; ஆனால் சமூக அமைப்புகளின் பங்கு அதனையும்விட முக்கியமானது. பல தசாப்தகால ஆயுத மோதலின் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மாறாத விளைவுகளை உண்டாகியுள்ளது. நிலைமை […]

மேலும் பார்க்க

நாகர் பற்றிக் குறிப்பிடும் ஹந்தகல பிராமிக் கல்வெட்டுகள் 

10 நிமிட வாசிப்பு

அனுராதபுரம் மாவட்டத்தில் ஹந்தகல மலைக் குகைகள் அமைந்துள்ளன. மதவாச்சியில் இருந்து ஹொரவப்பொத்தானைக்குச் செல்லும் வீதியில் 16 கி.மீ தூரத்தில் பிஹிம்பியாகொல்ல நீர்த்தாங்கி கோபுரம் அமைந்துள்ளது. இதை அடுத்து காணப்படும் சந்தியில் இருந்து வட கிழக்குப் பக்கமாக செல்லும் கிறவல் பாதையில் சிறிது தூரத்தில் காணப்படும் உரபிணுவெவ சந்தியைக் கடந்து 4 கி.மீ தூரத்தில் ஒரு முச்சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வலது பக்கமாகச் செல்லும் வீதியில் சுமார் 400 மீட்டர் […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் : ஒரு சுருக்கமான அரசியல் வரலாறு

25 நிமிட வாசிப்பு

ஆங்கிலம்  : ஜயதேவ உயன்கொட இலங்கையில் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் பாராளுமன்றம் பற்றிய அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இலங்கையின் பாராளுமன்றத்தின் கதை நவீன ஜனநாயகம் பற்றிய பல கதைகளுடன் பிணைப்புடையதாகும். இக்கதைகளினூடே இலங்கையின் அரசியல் யாப்புக் கட்டமைப்பை மாற்றும் முயற்சிகளும் வெவ்வேறு உயர் குழுக்களின் அதிகாரப் போட்டியும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் பற்றிய கதைகளும் எமக்குத் தெரிய வருகின்றன. குறிப்பாக அரசு அதிகாரத்தை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்