காலப்பகுதி IV: வரலாற்றுக்காலம் 3: கி.மு.200-கி.பி.300.பௌத்த மதத்தின் வருகை கி.மு. 200 ஆம் ஆண்டுக்காலம் கந்தரோடையில் பௌத்தமதம் அறிமுகமான காலப்பகுதி எனக் கொள்ளலாம். கி.மு. 250 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு புத்தபகவான் சமாதியடைந்த அரசமரக் கிளையைக் கொண்டுவந்த சங்கமித்தையை வரவேற்க யம்புகோளத்துறைக்கு வருகைதந்த அநுராதபுர அரசன் தேவநம்பியதீசன் திரும்பிச் செல்லும்போது கட்டிய ‘பாஸீன விகாரை’ இருந்த இடம் கதிரமலையாகிய கந்தரோடை என இராசநாயகம் அடையாளம் காண்கிறார் (இராசநாயகம், செ. 1933: […]
காலப்பகுதி II : ஆரம்ப வரலாற்றுக் காலம் 1.நகரமயமாக்கம் கி.மு. 600-300. வரலாற்றுக்கால ஆரம்பம் என்பது ஒரு பிரதேசத்தில் பதிய வைத்திருக்கும் கல்வெட்டுகளிலோ அல்லது வேறு பொருட்களிலோ காணப்படும் வாசிக்கக்கூடிய ஒரு மொழியின் ஆரம்பகாலத்தைக் கொண்டு வரலாற்றாசியர்கள் கொடுக்கும் காலத்தைக் குறிப்பிடுகிறது. அந்தவகையில் கந்தரோடையில் இதுவரை கண்டெடுத்த பானை ஓடுகளில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பு, இயற்பியல் ஆகியவற்றைக் கொண்டு, அந்த எழுத்துகள் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாகத் […]
“அவர்களின் இந்த (யாழ்ப்பாண) மண்ணிற்கு உள்ளே, அவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத உள்ளத்தை உவகையாக்கும் மதிப்புமிக்க தொல்வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.” Paul E. PierisCeylon Daily News22-02-1919. “பண்டைய கிரேக்கர்களும், உரோமர்களும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த தொலமியால் கௌரூலா என்றும், பெரிப்பிளஸ்ஸின் ஆசிரியரால் கமாரா எனவும் குறிப்பிடப்படும் நகரம் கந்தரோடை என்பதில் எனக்கு எதுவிதமான ஐயப்பாடும் கிடையாது.” C. […]
தொல்லியலாய்வின் முக்கியமானதொரு அம்சம் அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களின் வயதைக் கணிப்பிடுவதாகும். இக்காலத்தில் கதிரியக்கப் பரிசோதனைகளான கதிரியக்கக்கரிம வயதுக்கணிப்பு (Radiocarbon Dating), வெப்பேற்று கதிரொளிவீச்சு கணிப்பு (Thermo-Luminescence: TL), ஒளிக்கிளர்ச்சியூட்டிய கதிரொளிவீச்சு கணிப்பு (Optically Stimulated Luminescence: OSL) ஆகிய ஆய்வுகள்மூலம் இத்தொல்பொருட்களின் வயது கணிப்பிடப்படுகிறது. இப்பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்கள் இலங்கையில் இல்லை. இந்தியாவில் வெப்பேற்றக் கதிரொளி வீச்சு, ஒளியேற்றக் கதிரொளிவீச்சு ஆய்வுகூடங்கள் உள்ளன. கதிரியக்கக் கரிம வயதுக்கணிப்பு ஆய்வுகூடம் அங்கும் […]
பீலிவளை புதல்வன் தொண்டைமான் இளந்திரையன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நாகநாட்டை ஆண்ட அரசர்கள் பௌத்தமதத்தைத் தழுவியிருந்தார்கள். இம்மன்னர்களின் மாண்புகளை மணிமேகலை எடுத்துரைக்கிறது. நாகநாட்டை ஆட்சிபுரியும் மன்னன் ‘வளைவாணன்’ (வளை எறிவதில் வல்லவன்) என்ற பெயரைக் கொண்டவன். அவனது மனைவியான அரசியின் பெயர், வாசமயிலை. அவர்களுக்குப் பிறந்த பெண், பீலிவளை. “நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாச மயிலை வயிற்றுட் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த […]
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடுபோகம், நீள்புகழ் மன்னும் புகார்நகர்!” -சிலப்பதிகாரம் I:21-22. நாகநாடு வரலாற்றுப் பதிவுகளில் நாகநாடு அன்றைய உலகின் செல்வச்செழிப்பும் சிறந்த வாழ்வும்கொண்ட ஒரு நாடாகக் கூறப்படுகிறது. அதனால்தான் சிலப்பதிகாரக் காவியத்தில் பூம்புகார் நகரின் பெருமையை விளக்கவந்த இளங்கோ அடிகள் “நாகர்களின் நெடிய நகரோடு விளங்கும் நாகநாட்டினோடு ஒப்பாக, போக வாழ்வு பரவிக் கிடக்கும் நீண்ட புகழ் நிறைந்த புகார்” எனக் கூறிச்சென்றிருக்கிறார். பண்டைய நாட்களில் இலங்கையின் வடபகுதி, […]
நிலவியல் பண்டைய யாழ்ப்பாணம் நாகநாடு (மணிமேகலை), நாகதீவு (வல்லிபுரப் பொற்சாசனம்), நாகதீப (மகாவம்சம்), நாகதீபோய் (தொலமி) ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய யாழ்ப்பாணத்தில் நாகர்கள் வாழ்ந்தமையால் இப்பெயர்கள் யாவும் ‘நாக’ என ஆரம்பிக்கின்றன. அன்றைய நாகநாடு யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கு மேற்கேயுள்ள சிறுதீவுகள், வடக்கிலுள்ள இலங்கையின் தாய் நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆகிய நிலங்களைக் கொண்டிருந்தது. மகாவில்லாச்சியின் (மதவாச்சி) மேற்குக் கரையிலிருந்த அரிப்பிலிருந்து மகாவில்லாச்சியூடாக நாகபொக்கணைவரையும் ஒரு […]
அறிமுகம் இலங்கையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முற்பட்டகால யாழ்ப்பாண வரலாற்றிற்கான சரித்திரச் சான்றுகள் மிக அருகியே காணப்படுகின்றன. புராணக் கதைகள், ஐதீகங்கள், ஆதாரமற்ற பழங்கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’யின் ஆரம்பப் பகுதிகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பண்டையகால யாழ்ப்பாணம் தொடர்பான மிகவும் குறைவான செய்திகளையே தருகின்றன. வையா பாடல், கைலாய மாலை ஆகிய ஏடுகளும் யாழ்ப்பாணத்தின் தொடக்க காலத்தைப் பற்றிப் போதுமான […]