Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

யாழ்ப்பாண மருத்துவ வரலாறு : 1864

7 நிமிட வாசிப்பு

மானிப்பாயிலிருந்து 1864 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி மருத்துவர் கிறீன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தமக்கு முதலாவது மகவு பிறந்த மகிழ்ச்சியான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். யூலியா என்ற தனது மூத்த சகோதரியின் பெயரையே அந்தப் பெண் குழந்தைக்கு கிறீன் சூட்டினார். பின்னாளில் யூலியா தான் பிறந்த யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து 1906 -1910 வரையான காலப்பகுதியில் அமெரிக்க இலங்கை மிஷனுக்காக 5 வருடகாலம் சேவையாற்றினார். கீழைத்தேசத்தில் இந்தியத் […]

மேலும் பார்க்க

பட்டினியாக நாங்களும் களவாடப்படும் எங்கள் நீலப் பிரபஞ்சமும்

9 நிமிட வாசிப்பு

பாரம்பரிய மீன்பிடித்தல் மற்றும் கடலுணவு விவசாயம் பூமியின் மேற்பரப்பின் பெரும்பகுதி கடலாகவுள்ளது. மனிதர்களாகிய நாம் எண்ணற்ற வழிகளில் கடலைச் சார்ந்திருக்கின்றோம். கடலில் இருந்து வரும் உணவானது, மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய இரண்டு தொழில்வகை மூலம் நமக்குக் கிடைக்கிறது. கடலுணவானது மலிவானதும், இலகுவாகவும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து ஆகும். அத்துடன், கடலுணவு உற்பத்தியானது, பல கோடி  பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதன் மூலம், பெரும் வாழ்வாதார அடிப்படையாகவும் உள்ளது. கடல் உணவுத் […]

மேலும் பார்க்க

பெருந்தோட்டமே இலங்கைப் பொருளாதாரத்தின் மையம்

9 நிமிட வாசிப்பு

மலையகத்தின் அடுத்த கட்டத்திற்கான உரிமைக்கோரிக்கை குரல்களை எழுப்பியவர்கள் இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரே. இவர்களது தூரத்துக் கனவு இலங்கையில் இருந்து வெள்ளையர்களை துரத்தியடித்த பின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஏற்படுத்தி சோசலிச அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்பதாக இருந்தபோதும் அவர்கள் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்துக்கு பின்னால் கணிசமான பங்களிப்பை செய்தனர். இலங்கையில் ஏற்பட்ட இருந்த சிறு முதலாளித்துவத்தின் வளர்ச்சி காரணமாக சிறு முதலாளித்துவ வர்க்கம் ஒன்று […]

மேலும் பார்க்க

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்

6 நிமிட வாசிப்பு

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு. வை. சத்தியமாறன் இணையத்தளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் […]

மேலும் பார்க்க

இலங்கை முஸ்லிம்களின் உப மரபினங்கள் : இலங்கை மலாயர்கள்

10 நிமிட வாசிப்பு

மலாயர்கள் (Malays) இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மலாயர்களாவர். இலங்கைச் சோனகரோடு மத அடிப்படையில் ஒரே சமூகமாக இணைந்து கொண்ட உப மரபினங்களில் மலாயர்களே ஏனைய உபமரபினங்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். இலங்கையில் கிட்டத்தட்ட மலாயர் சனத்தொகை அறுபதாயிரம். நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட இது 0.3 சதவீதமாகும். நாட்டின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட 4 சதவீதமாகும்.[i] இந்த எண்ணிக்கையை ஆசிஃப் ஹூஸெய்ன் 2011 இல் […]

மேலும் பார்க்க

பிரதேசம் சாராத மக்களுக்குரிய பொருளாதாரப் பரிமாணங்கள் : இலங்கைப் பெருந்தோட்டத் தமிழர்களின் விவகாரம்

26 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையில் பிரதேசம் சாராத சமூகங்களில் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தமான பொருளாதாரப் பரிமாணங்களை இந்தக் கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்தச் சமூகம் உற்பத்தி செய்யும் நிதி எவ்வளவு, அபிவிருத்தி நோக்கங்களுக்காக அது முதலீடுகளின் வடிவத்தில் அரசிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுக்கொள்கின்றது என்பதை இந்தக்கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்த அம்சங்களை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்தச் சமூகத்தின் மானுட, சமூக, அபிவிருத்தியை வரலாற்று […]

மேலும் பார்க்க

வடபுல சமூகமும் திருநர்களும்

7 நிமிட வாசிப்பு

வடபுல சமூகத்தளத்தில் தன்பாலீர்ப்பை விலக்கப்பட்ட(Taboo) ஒரு விடயமாகப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் திருநர்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருநர்களைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இருந்தாலும் கூட எவ்வாறு, தந்தையாதிக்கச் சமூகங்களில் பெண் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்கிறாளோ அதே போல் திருநங்கைகளும் திருநம்பிகளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவதாலேயே பெரும்பாலான திருநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. “அன்று என் தந்தை வார்த்தையாலும் பிரம்பாலும் என்னைத் […]

மேலும் பார்க்க

தமிழ் அதிகாரி மகாசாத்தான் பற்றி குறிப்பிடும் தாமரவெவ தூண் கல்வெட்டு

7 நிமிட வாசிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழர் பற்றிக் குறிப்பிடும் இன்னுமோர் கல்வெட்டு துடுவ துலான என்னுமிடத்தில் அமைந்துள்ள தாமரவெவ எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. தாமரவெவ கல்வெட்டும் இலங்கையை ஆட்சி செய்த 2ஆம் சேனன் காலத்தில் (பொ.ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்டுள்ளது. மன்னனின் (2ஆம் சேனன்) 31ஆவது ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.   35 ஆண்டுகள் இலங்கையின் மன்னனாக 2ஆம் சேனன் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கல்வெட்டு 7 […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம்: தாவரநெய்கள்

10 நிமிட வாசிப்பு

வேப்பெண்ணெய் வாதம்போம் பித்தமிகும் மாறாக்கிரந்திபோமோதுங்கரப்பன் சிரங்கோடிப்போம்-போதவேவேப்பெண்ணெய் கொண்டால் விசம்மீழும் சன்னிபோம்காப்புடைய கையாளே காண் இதன் பொருள்: காப்பு அணிந்த கைகளை உடையவளே காண்பாயாக. வேப்பெண்ணெயால் வாதம் போகும். பித்தம் கூடும். மாறாத கிரந்தி மாறும். கரப்பனும் சிரங்கும் மாறும். கடிவிஷம் இறங்கும். சன்னிநோய் குணமாகும். மேலதிக விபரம்: வேப்பிலைத்தூளை வேப்பெண்ணெயுடன் கலந்து பெறப்பட்ட தைலத்தை, வலிப்பு, சன்னி  என்பவற்றால் பாதிக்கப்பட்ட பாகங்களுக்குப் பூசிவர நிவாரணம் கிடைக்கும். வெற்றிலையில் வேப்பெண்ணெய் தடவி, […]

மேலும் பார்க்க

தமிழ் கட்சிகளும் சாதி அடையாளமும்

10 நிமிட வாசிப்பு

தமிழரசுக் கட்சியின் இந்த சமூக சமத்துவமின்மைக்குக் காரணம் அந்தக்கட்சி ஏற்கனவே குறிப்பிட்ட ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்துநிலையின் அரசியல் வடிவமாக இருந்ததோடு,  அந்தக் கருத்துநிலையைப் பேணிப்பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகவும் தொழிற்பட்டது. இந்த சாதி மேலாண்மை சிங்கள அரசின் தமிழ் இன, தமிழ் மொழி ஒடுக்குமுறை காரணமாக மூடிமறைக்கப்பட்டு தமிழ் இனம், தமிழ் மொழி எனும் அடையாளத்துக்குள் தமிழர்களை ஒன்று திரட்ட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த வாய்ப்பினை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்