Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பெண்களின் வன்முறைத் தேர்வும் அரசியல் வகிபாகமும்

13 நிமிட வாசிப்பு

நூல் அறிமுகம் பெண்களின் வன்முறைத் தெரிவு, அதற்கான அக-புற நிர்ப்பந்தங்கள், கள அனுபவங்கள், போருக்குப் பின் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சமூக நெருக்கடிகளை இந்நூல் அனுபவரீதியாகவும் உரையாடல்கள் கதையாடல்கள் வழியாகவும் முன்வைக்கின்றது. இதில் பேசப்படும் அனுபவங்களும் கதையாடல்களும் தகவல்களும் பெரும்பான்மையாக நிலவும் கட்டமைக்கப்பட்ட பார்வைகளைக் கட்டுடைக்கவும் புரிதலை வளர்த்துக்கொள்ளவும் உந்தக்கூடியது. உலகளாவிய பெண் போராளிகளின் அரசியல் வகிபாகத்தினை பெண்ணிய மற்றும் சமூக, பண்பாட்டு, அரசியல் நோக்கு நிலைகளில் விளங்கிக்கொள்ளவும் உதவக்கூடியது. […]

மேலும் பார்க்க

தொடர்ச்சியான மாற்றுப்பயிர்களின் தேடல்

19 நிமிட வாசிப்பு

1867 இல் பத்து ஏக்கரில் தொடங்கப்பட்ட தேயிலை உற்பத்தி 1887 ஆம் ஆண்டில் – இருபது வருடங்களுக்குள் – சுமார் 350,000 ஏக்கராக விரிவடைந்தது. இவ்வளவு விரைவாக தேயிலை வளர்ச்சியடைவதற்கு அழிந்த கோப்பிப் பெருந்தோட்டம்  உருவாக்கிவிட்டுச்சென்ற பெருந்தோட்ட நிலங்களையும் கட்டமைப்பையும் அது எளிதாக நிரப்பக்கூடியதாக இருந்தமை தான் காரணம். தேயிலை விளைந்த நிலப்பரப்பு கோப்பி பெருந்தோட்டங்கள் இருந்த நிலப்பரப்பை விடவும் விரிவடைந்து சென்றது. 1890 களில் பெரும்பாலான தேயிலைத்தோட்டங்கள் திம்புள்ள, டிக்கோயா, […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றொபேர்ட் எஸ் பேரின்பநாயகம் பெருநெறிக் கோயில்களின் ஆகமுறைப்படியான சடங்குகளும் விழாக்களும் ஆகம முறைப்படியான சடங்குகளும் விழாக்களும்  சிவன், விநாயகர், சுப்பிரமணியர், காளி முதலிய பெருநெறித் தெய்வங்களுக்கான கோயில்களிலேயே இடம்பெறும்.  இவ்வகைக் கோயில்கள் பொது உடைமையான கோயில்களாக இருப்பதில்லை. செல்வாக்குள்ள வேளாளக் குடும்பம் ஒன்றின் உடைமையாக இவ்வகைக்கோயில் ஒன்று இருக்கும். இக்குடும்பத்தின் மூதாதையர் ஒருவர் இக்கோயிலை கட்டியிருப்பார். பிற எல்லா உடைமைகளும் பரம்பரைவழி எப்படி உரிமை கொள்ளப்படுகின்றனவோ […]

மேலும் பார்க்க

முஸ்லிம் குடிகள்

10 நிமிட வாசிப்பு

இந்தக்கட்டுரை முஸ்லிம்களிடம் வழக்கிலுள்ள சில குடிகளின் ஆரம்ப வரலாற்றை நோக்குகின்றது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் குடிகளை நோக்கும் போது அவை ஒரே தடவையில் உருவாகியவையாக இராமல் காலத்திற்குக் காலம் புதிய குடிகள் தோற்றம் பெற்றே வந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதிவரை புதிய குடிகளின் தோற்றம் நிகழ்ந்தே வந்திருக்கின்றது. இக்கட்டுரை இரு ஊர்ப்பெயர் கொண்ட குடிகளையும் சம்பானோட்டி குடியைப்பற்றியும் விபரிக்கிறது. மாந்தறா குடி – மாந்திராவ குடி இந்தக்குடியினர் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, […]

மேலும் பார்க்க

தொழிலாளர் பலமும், பிரயோகிக்கத் தவறிய இலங்கை இந்திய காங்கிரஸும்

7 நிமிட வாசிப்பு

உலக வரலாற்றில் தொழிற்சங்க இயக்கத்தினால் சாதிக்கப்பட்ட சாதனைகள் விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு கணிசமானவைகளாக உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் மற்றும் மேலும் சில மேற்குலக நாடுகளிலும் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியும் வளர்ச்சியும்  பெருமளவில் உலகெங்கும் தொழிலாளர் படைகளைத் தோற்றுவித்தன. அதேபோல் மறுபுறத்தில் லாபம் என்ற ஒன்றை மட்டுமே மூல நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரங்கள் எழுச்சி பெற்றன. இவை […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு III

10 நிமிட வாசிப்பு

கல்மடுவிலுமிருக்கிறது இராசபக்கிச முதலியாருடைய மனுசர்கள் தான். அவர்கள் தானே மற்றும் வெளிகளெல்லாம் விரைத்துத் திண்டுகொண்டிருக்கிற நாளில் அப்படியே விரைத்துத் திண்டுகொண்டிருங்கோவென்று அவருடைய மனுசரை விட்டுப் போட்டு அவர் தளவில்லுக்குப் போய்க் குடியிருந்து கொண்டு அந்த வனம் ஏழுக்கும் முன்னீடு காபழு[1] அனுப்புகிறது வேடரிற் கரடியன் கம்மாஞ்சி[2]. அதன் பிறகு கந்தக் கம்மாஞ்சி – இவர்கள் முன்னீட்டுக் கம்மாஞ்சிமார், அதின்பிறகு கோவில்மேட்டுக்கு[3] அம்மாள் கொண்டு வந்தது ஆரென்றாற் சின்னத்தம்பிப்போடியென்கிறவன், மதுரைக்குப்போய் அங்கே […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பழப்பயிர் உற்பத்தியும் வாய்ப்புகளும்

14 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கின் விவசாயத்துறையில் மற்றொரு வாழ்வாதார வளமாக காணப்படும் பழப்பயிர்ச் செய்கையில் பல சாத்தியமான வளங்கள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையின் பழச்சந்தையில் கணிசமான ஒரு வீதத்தை  நிரம்பல் செய்யும் இவ்விருமாகாணங்களிலிருந்தும் வாழை, மா, பப்பாசி, தர்பூசணி, தேசி, தோடை, கொய்யா, மாதுளை ஆகிய பழப்பயிர்கள் முதன்மை பெறுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாண  வாழைச்செய்கை வாழைப்பழச்செய்கை பிரபல்யம் பெற்றுள்ள இலங்கையின் மாகாணங்களில் வடக்கும் கிழக்கும் பிரபல்யமானவை.  வடக்கு […]

மேலும் பார்க்க

தமிழரின் பெளத்தப் பள்ளி பற்றிக் கூறும் வெஸ்ஸகிரி கற்பலகைக் கல்வெட்டு

10 நிமிட வாசிப்பு

அநுராதபுரம் பண்டைய நகரில் அமைந்துள்ள வெஸ்ஸகிரிய பகுதியில் ஓடும் மல்வத்து ஓயா ஆற்றின் மேற்குக் கரையில் இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது பொ. ஆ. 946-954 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் உதயன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. மூன்று துண்டுகளாக உடைந்திருந்த கற்பலகை ஒன்றில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் கல்வெட்டின் இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. இவற்றில் பெரிய துண்டாகக் காணப்படுவது கல்வெட்டின் மேற்பகுதிக்குரிய துண்டாகும். இது 2 […]

மேலும் பார்க்க

கால்நடைகளைக் கொல்லும் சட்ட விரோத சிகிச்சையாளர்கள்

15 நிமிட வாசிப்பு

அண்மைக் காலமாக மனித மருத்துவம் சார்ந்த போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் தொடர்பாகக் கரிசனை வெளியிடப்படுகிறது. ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளை முன்னுரிமைப்படுத்துகின்றன. மனித மருத்துவத்தைப் போல விலங்கு மருத்துவத்தில் ஏராளமான போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் உள்ளமையும் அதனால் ஏற்படும் மனித மற்றும் விலங்குகளில் ஆரோக்கியத்தில் ஏற்படும் சவால்களையும் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை விலங்கு மருத்துவ விஞ்ஞானக் கற்கைநெறி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் […]

மேலும் பார்க்க

‘80/20′ கொள்கையும் வாணிபத்தில் அதன் பாவனைகளும் தாக்கங்களும்

6 நிமிட வாசிப்பு

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்” – திருக்குறள் (26) மு.வரததாசனார் விளக்கம் செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்குஅரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். இந்த உலகையே  மாற்றும் எண்ணங்களுடன் பலரும் வருவார்கள். அவர்களது  நோக்கம்  நன்றாக இருந்தாலும்கூட,  அவர்களது செயல்முறை மற்றும்  திட்டங்கள் என்பன அவ்வாறான காரியங்களை நிறைவேற்றத் தடையாக மாறிவிடுகின்றன.    இதுவரை  வெற்றியடைந்த ஆரம்ப நிறுவனங்கள் பலவற்றையும்  உருவாக்கியவர்களின் (கட்டுரையாளர் உட்பட) […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்