Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 1

13 நிமிட வாசிப்பு

18 வீதமான தமிழர்களுடன் ஒப்பிடும் போது, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட 8 வீதமானவர்கள் முஸ்லிம்கள். ஆனால் இந்த எளிய சிறுபான்மை அடையாளங்கள் தீவின் இனச் சிக்கலை வெளிப்படுத்துவதை விடவும் உண்மையில் மறைக்கவே செய்கின்றன. கடந்த 100 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகத்தின் நகர்ப்புற தலைவர்களும் அரசியல் பேச்சாளர்களும், முஸ்லிம்கள் வீட்டில் தமிழ் பேசினாலும் பல தமிழ் உறவுகளையும் உள்நாட்டு நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டாலும், அவர்களை தமிழ் முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் தமிழர்கள் […]

மேலும் பார்க்க

பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும்

15 நிமிட வாசிப்பு

அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்கும்கனலனலே வென்பசியைக் காட்டும்-புனலாகுமிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதும்சர்க்கரைப் பறங்கிக்காய் தான்– பதார்த்தகுண சிந்தாமணி- பொருள் : சர்க்கரைப் பறங்கிக்காய் எனப்படும் பூசணிக்காய் உடல் சூட்டைக் குறைக்கும். கூடிய பித்தத்தைப் போக்கும். பசியைக் கூட்டும். பெருமளவில் நீரைக் கொண்டிருக்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ‘பறங்கிப்பூசணி’ என்னும் பெயரைக் கேட்டதுமே இந்தப்பூசணி பறங்கியர் என அழைக்கப்பட்ட போர்த்துக்கேயர் அல்லது ஒல்லாந்தரால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காய்கறியாக இருத்தல் வேண்டும் என்பதை […]

மேலும் பார்க்க

சிங்கள அரசின் காணிக் கொள்கை

8 நிமிட வாசிப்பு

1974 களை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தலைமையாகக் கொண்ட கூட்டு அரசாங்கம் கடைப்பிடித்த காணிக் கொள்கை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகள் எங்கிலும் சிங்களப் பேரினவாதம் மூர்க்கமாக தலைவிரித்தாடத் தொடங்கியது. மலையக பெருந்தோட்டங்களில் இருந்து தமிழ் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு அந்த தோட்டக் காணிகளை சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் கைங்கரியம் ஆரம்பமானது. இதன் பொருட்டு 1975 ஆம் ஆண்டு சட்ட விதிமுறைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்ட […]

மேலும் பார்க்க

என்ன செய்ய வேண்டும்?

15 நிமிட வாசிப்பு

வடமாகாண கடற்பிரதேசம் வடமேற்கு மாகாண கடல் எல்லையிலிருந்து கிழக்கு மாகாண எல்லை வரை பரந்துள்ளது. இலங்கையின் எந்த மாகாணத்துக்கும் இல்லாத வகையில் பலதரப்பட்ட  தொழில்களைச் செய்வதற்கான வளங்களை கொண்டது வடமாகாணத்தின் கடற்பிரதேசம். பின்வருவன இன்றுள்ள வடமாகாணக் கடலில் வருவாய் தரக்கூடிய தொழிலாக இருப்பவை: ஆழ்கடல் மீன்பிடி  கரையோர மீன்பிடி  ஆழ்கடல் மீன்பிடி  போர் முடிவுற்ற காலத்தின் பின்பு ஆழ்கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய அரசினால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தனியார்களின் மூலதனத்தை பயன்படுத்தி செய்யப்பட்டது வெறும் திருத்தல் வேலைகள் மட்டுமே. நவீன […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 6

28 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகாமையாளர் சபையில் எழுது வினைஞராயிருந்த வே. இளையதம்பி அவர்களின் மகன் வே.இ. பாக்கியநாதன் இளைஞராயிருந்த போதே இந்துக் கல்லூரியில் சிலமாதங்கள் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் தனது மேற்படிப்புக்காக கல்கத்தா சென்று பொருளியல், வர்த்தகம் முதலிய பாடங்கள் படித்துப் பட்டம் பெற்று மீண்டதும் கொழும்பில் வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். வெஸ்லி கல்லூரியிருந்த காலத்தில் புல்பிறைற் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குச் சென்று அங்கே அற்லான்ரா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் (M.Sc. […]

மேலும் பார்க்க

சிவபூமி அருங்காட்சியகம் : ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய முகவரி

10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படும் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத் தமிழர் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறப்போகும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன். இவ் அருங்காட்சியகத்தின் மூலம் எம் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு எம்மோடு வாழ்ந்துவரும் பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களைச் சிறிதும் பிசகாமல் அடுத்து வரும் சந்ததியினருக்கு கையளிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது. மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட இவ் அரும்பொருள் காட்சியகத்தில் வடஇலங்கை மக்களின் பூர்வீக வரலாற்று அடையாளங்கள், […]

மேலும் பார்க்க

‘லயன்’ விடுதியிலிருந்து வீதிக்கு

9 நிமிட வாசிப்பு

பஞ்சம் தலைவிரித்தாடிய போது அதற்கான காரணத்தை அறிந்து, தீர்த்து வைக்க முயற்சிக்காமல் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர்களாக வீதிகளில் அலைந்த மக்களை, நகர வீதிகளை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கூறி, லொரிகளில் ஏற்றிச்சென்று கிழக்குப் பிரதேசத்தின் காட்டுப்பகுதிகளில் நிராதரவாக விட்டு வந்த கொடூரமான வரலாறு கூட மலையக மக்களின் வரலாற்று ஏடுகளில் உண்டு. இத்தகைய வரலாற்றைக் கிளறும்போது அது உண்டாக்கும் வேதனையை இதனைப் படிப்பவரும் உணரலாம்.  1974 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய […]

மேலும் பார்க்க

கோழி வளர்ப்புத் தொழிற்துறை : வளங்களும் வாய்ப்புக்களும்

14 நிமிட வாசிப்பு

வாழ்வாதாரத் தொழில் முயற்சித் துறைகளில் உயிரின வளர்ப்புத் துறையானது முக்கியத்துவம் வாய்ந்தது. இவ் வளர்ப்புத் துறை விலங்குகளையும் பறவைகளையும் உள்ளடக்குகின்றது. பறவை வளர்ப்பில் முதன்மையாக அமைந்திருப்பது கோழி வளர்ப்பாகும். இவை இறைச்சி, முட்டை ஆகிய இரு பெரும் நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. சமூகத்தில் பலரும் இந்த வாழ்வாதார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த முதலீட்டுடன் இத்தொழிலை ஆரம்பிக்க முடிவதுடன் இயலுமையின் விருத்திக்கேற்ப படிப்படியாக அதிகரித்துச் செல்லவும் முடியும் என்பது பலரும் இத்தொழிலில் இணைவதற்கு […]

மேலும் பார்க்க

சுத்தமான பாலுற்பத்தி

19 நிமிட வாசிப்பு

இந்தக் கட்டுரை சுத்தமான பாலுற்பத்திச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்கிறது. பால் அதிகளவான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உயிர்த் திரவமாகும். கறந்த பால் மிக விரைவாக பழுதடையக் கூடியது. பல நுண்ணங்கிகளின் செயற்பாட்டுக்கு மிகச் சிறந்த ஊடகமாக தொழிற்படக் கூடியது. இந்த நுண்ணங்கிகள் பல்கிப் பெருகி பாலின் கட்டமைப்பை பாதிக்க, பால் அதன் உறுதித் தன்மையில் இருந்து சிதையத் தொடங்குகிறது. இதன் காரணமாக பாலை சாதாரண சூழ்நிலையில் அறை வெப்பநிலையில் […]

மேலும் பார்க்க

சமூக மாற்றக் கருவியாக பக்திப் பேரியக்கம்

30 நிமிட வாசிப்பு

“சனாதன ஒழிப்பு” விவகாரம் ஆப்பிழுத்து மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்ட பின்னரும் விடாத தூவானமாக சனாதனக் கோட்பாட்டு அடிப்படைகளைத் தாக்கும் வீரப் பிரதாபங்கள் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டவாறுள்ளன. இவ்வகை விட்டுக்கொடுக்காத வீரதீர முழக்கங்களை எழுப்புகிறவர்களாக மார்க்சியம் பேசுகிற சில பேர் இருப்பது காலதேச நிலவரங்களை விடவும் தமது ‘புரட்சி வேடம்’ கலையக் கூடாது என்ற அவர்களுக்கான அக்கறையையே வெளிப்படுத்துகிறது. முன்னத்தி ஏராக ‘சனாதன ஒழிப்பு’ விவகாரத்தைத் தொடக்கி வைத்திருந்த […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்