Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

குயர் வெறுப்பும் குயர் சமூகத்தின் மீதான ஓரங்கட்டல்களும்

9 நிமிட வாசிப்பு

இந்த உலகில் பிறந்த அனைவரும் மனிதர்களாக மதிக்கப்படுவதற்கும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும் உரித்துடையவர்கள். ஆனாலும் குயர்மக்கள் அவ்வாறு வாழ்வதற்குப் பல போராட்டங்களைக் குயர் சமூகமும், செயற்பாட்டாளர்களும் முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இவர்கள் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவதூறுகளையும், துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. குயர் வெறுப்பு நேரடியாக மாத்திரமல்லாமல், ஊடகங்களின் வாயிலாகவும் வெறுப்புப் பேச்சாக வெளிப்படுத்தப்படுகின்றது. அண்மைக்காலங்களில் சமூக ஊடகங்களில் பாரியளவில் வெறுப்புப் பேச்சை அவதானிக்க முடிகிறது. வெகுசன […]

மேலும் பார்க்க

மீள் பார்வைக்கான சமூக சக்திகள்

18 நிமிட வாசிப்பு

ஈழத்தைச் சூழ்ந்த யுத்த மேகங்கள் இன்று காசாவில்; பல்லாயிரம் மனித உயிர்களைக் காவுகொள்ளும் மேலாதிக்க வெறியானது மேலும் வியாபிதமடைந்து அரபுலகனைத்தையும் அதனைக்கடந்த உலக யுத்தமாகவும் விரிவாக்கம் பெறலாம் என்ற ஆரூடங்கள் வெளிப்பட்ட வண்ணம். மேலைத்தேசங்கள் எனப்படும் ஏகாதிபத்தியத் திணையானது அவ்வாறு ஏற்படவுள்ள அந்தப் பெரும் யுத்தக்களரிக்குத் தயாராகும் முஸ்தீபுடன் இராணுவச் செலவுகளை அதிகரிப்பதான செய்திகள் வந்தபடி. இனிவரும் புதிய உலக ஒழுங்கில் பனிப்போர்கூட மூழ இடமின்றித் தேசங்கள் ஆக்கிரமிப்பு யுத்தங்களை […]

மேலும் பார்க்க

கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 3

25 நிமிட வாசிப்பு

காலப்பகுதி IV: வரலாற்றுக்காலம் 3: கி.மு.200-கி.பி.300.பௌத்த மதத்தின் வருகை கி.மு. 200 ஆம் ஆண்டுக்காலம் கந்தரோடையில் பௌத்தமதம் அறிமுகமான காலப்பகுதி எனக் கொள்ளலாம். கி.மு. 250 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு புத்தபகவான் சமாதியடைந்த அரசமரக் கிளையைக் கொண்டுவந்த சங்கமித்தையை வரவேற்க யம்புகோளத்துறைக்கு வருகைதந்த அநுராதபுர அரசன் தேவநம்பியதீசன் திரும்பிச் செல்லும்போது கட்டிய ‘பாஸீன விகாரை’ இருந்த இடம் கதிரமலையாகிய கந்தரோடை என இராசநாயகம் அடையாளம் காண்கிறார் (இராசநாயகம், செ. 1933: […]

மேலும் பார்க்க

1983 கறுப்பு யூலை பேரழிவின் பின்னரான மே தினம்: இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்கான தீர்வு யாது?

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க 1984 மே 1 ஆம் திகதிய ‘Lanka Guardian’ இதழில் நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘May Day after the July Holocaust’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். கறுப்பு யூலை 1983 இன் பின்னரான முதலாவது மே தினத்தின்போது தமது மனதில் தோன்றிய கருத்துகளை நியூட்டன் குணசிங்க அவர்கள் இக்கட்டுரையில் முன்வைத்தார். இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்கான தீர்வு யாது? என்பதை ஆராயும் […]

மேலும் பார்க்க

மாதா கோயில் அம்மன்

15 நிமிட வாசிப்பு

அறிமுகம் உலக அரங்கில் முதன்மை பெற்ற வழிபாடுகளில் ஒன்றாகப் பெண் தெய்வ வழிபாடு காணப்படுகின்றது. இயற்கை மீதான அச்சம், வியப்பு என்பவற்றின் வழிவந்த வழிபாடு, தெய்வம் எனும் கருத்துரு என்பவற்றின் வழியும் இனக்குழு, நிலம், கலை என்பவற்றின் வழியும் பல்தெய்வ வழிபாடுகள் உருவாக்கம் பெற்றன. அவற்றுள் பெண் தேவதையாக, அம்மனாக, கன்னியாக, குழந்தையாக எனப் பலவாறு வழிபடப்பட்டாள். உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்கள் பெண் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தன. தெய்வங்கள் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் கூட்டுறவுத்துறையின் பங்குபற்றல்

12 நிமிட வாசிப்பு

பொருளாதார அபிவிருத்தியில் பங்குகொள்ளும் ஒரு கொள்கைத்துறையாக கூட்டுறவு இயக்கம் இருந்து வருகிறது. இங்கிலாந்தின் ‘றொச்டேல்’ முன்னோடிகளினால் உலகத்துக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட கூட்டுறவு இயக்கமானது ஒருவர் பலருக்காகவும், பலர் ஒருவருக்காகவும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைந்து பணியாற்றும் ஓர் அமைப்பாகும். தன் விருப்பார்ந்த தடையற்ற உறுப்புரிமை, சனநாயக ஆளுகை, கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே ஒத்துழைப்பு, சமூக மேம்பாடு, உறுப்பினர்களின் பொருளாதாரப் பங்களிப்புக் கட்டுப்பாடின்றியும் தானாகவும் தொழிற்படல், கல்விப் பயிற்சி, தகவலளிப்பு ஆகிய ஏழு கூட்டுறவுக் கொள்கைகளை […]

மேலும் பார்க்க

சுன்னத்துக் கலியாணம்

13 நிமிட வாசிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே மிகுந்த மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட ஒரு வாழ்க்கை நிகழ்வாக சுன்னத்துக்கலியாணம் காணப்படுகிறது. இது வெறும் மருத்துவ நடைமுறையாகவோ சடங்காகவோ மட்டுமல்லாமல்; சமூக அடையாளம், தூய்மை மற்றும் ஆண்கள் பருவத்திற்கு நுழைவதற்கான ஏற்பாட்டு விழாவாகவும் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களிடையே இந்த விழா பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள், மரபுகள் மற்றும் சமூகப் பங்கேற்புகளோடு கொண்டாடப்படுகிறது. இக்கட்டுரை ஆரம்பகால […]

மேலும் பார்க்க

கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 2

18 நிமிட வாசிப்பு

காலப்பகுதி II : ஆரம்ப வரலாற்றுக் காலம் 1.நகரமயமாக்கம் கி.மு. 600-300. வரலாற்றுக்கால ஆரம்பம் என்பது ஒரு பிரதேசத்தில் பதிய வைத்திருக்கும் கல்வெட்டுகளிலோ அல்லது வேறு பொருட்களிலோ காணப்படும் வாசிக்கக்கூடிய ஒரு மொழியின் ஆரம்பகாலத்தைக் கொண்டு வரலாற்றாசியர்கள் கொடுக்கும் காலத்தைக் குறிப்பிடுகிறது. அந்தவகையில் கந்தரோடையில் இதுவரை கண்டெடுத்த பானை ஓடுகளில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பு, இயற்பியல் ஆகியவற்றைக் கொண்டு, அந்த எழுத்துகள் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாகத் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – தெல்லிப்பழை

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் மல்லாகம் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம்.  தெல்லிப்பழைக் கோவிற்பற்று, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை, வீமன்காமம், கட்டுவன் என ஐந்து துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோவிற்பற்றின் வடக்குக் கரையோரமாகக் மேற்கிலிருந்து கிழக்காகத் தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

உதவி : ஜீவராசா டிலக்ஷனா இக்காலகட்டம், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் இயக்கம் தொடங்கியதில் முடிவடைகின்றது. இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் இலங்கை என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இருந்து விலகி வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வலியுறுத்தி அதற்கு அதிகாரத்தைக் கோரும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் மூன்று மாற்றங்கள் இடம் பெற்றன. ஒன்று, ஒற்றை ஆட்சியில் சமவாய்ப்புக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்