மகாத்மா காந்தி 1920 இல் இந்தியத் தேசிய இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரானார். அனைவரையும் கவரும் ஆளுமையும், இறுக்கமான ஒழுக்கநெறியும், முழுமூச்சாக முன்னின்று இயக்கத்தை நடத்திச்செல்லும் ஆற்றலும் இந்தியாவில் மட்டுமல்ல வெளியேயும் அவருக்குப் பெருமதிப்பைக் கொடுத்தன. அயலில், ஆங்கிலேயர் ஆட்சியைத் தொல்லைகள் இல்லாது அனுபவித்துக்கொண்டிருந்த இலங்கையர் மீதும் அவருடைய எழுச்சியின் தாக்கம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குள், 1927 இல், யாழ்ப்பாண இளைஞர் அழைப்பை ஏற்று, மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வந்து […]