மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்

வி.எஸ். கோவிந்தசாமி: நாடற்றவர்களுக்காக ஒலித்த உரிமைக்குரல் 

22 நிமிட வாசிப்பு

தற்காலிக வதிவிட விசாவில் இலங்கை வந்த வி.எஸ். கோவிந்தசாமி தேவர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் கொழும்பு பணிமனையில் கடமையாற்றி, எழுபதுகளில் தாயகம் திரும்பியுள்ளார். ஐம்பதுகள் முதல் நாடு திரும்பும் வரை பல பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். ஏனையோரைப் போல் பிரஜாவுரிமை மறுப்பைப் பற்றிப் பாடியுள்ள இவர், தற்காலிக வதிவிட விசாவில் வந்த இந்தியத் தமிழர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளைப் பற்றியும் எழுதியுள்ளார். வதிவிட விசாவில் வந்தவர்களின் பிரச்சினை பற்றி இவர் […]

மேலும் பார்க்க

வீதிப்பாடகர் ஜபார் ஜில் சுல்தான்: பதுளை மண்ணிலிருந்து ஓங்கி ஒலித்த குரல்

19 நிமிட வாசிப்பு

மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் அமையப் பெற்ற பாடல்களைச் சிந்து என வரையறுப்பார்கள். முதலடியும் அடுத்த அடியும் சீரின் எண்ணிக்கையால் ஒத்து இருப்பின் அது சமநிலைச் சிந்து என அழைக்கப்படுகிறது. அடியும் சீரும் எண்ணிக்கையால் வேறுபட்டு இருப்பின் அதனை வியனிலைச் சிந்து என்கிறோம். சிந்து இலக்கியங்கள் காலங்களுக்கு ஏற்ப மாறுதல்களை கொண்டமைந்திருந்தன. பிற்காலத்தில் சிந்துப் பாடல்கள் கீர்த்தனைகளுக்குரிய அமைப்பையும் உள்வாங்கிக் கொண்டு மாற்றங்களோடு வெளிவந்தன. சிந்து இலக்கியம் 13 ஆம் […]

மேலும் பார்க்க

நாவலப்பிட்டியைச் சேர்ந்த எஸ்.எம். ராஜப்பா எனும் வீதிப்பாடலாசிரியர் 

29 நிமிட வாசிப்பு

மலையக வீதிப்பாடல் இலக்கியத்திற்கு நாவலப்பிட்டி மண்ணிலிருந்து பல ஆளுமைகள் வலிமை சேர்த்துள்ளனர். அவர்களில் எஸ்.எம். ராஜப்பாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். எஸ்.எம்.ஆர். எனவும் அறியப்பட்ட அவர், நாடகத் துறையில் ஆழ்ந்த ஆர்வத்துடன் செயற்பட்ட ஆளுமையாவார். அக்கால நாடகங்களில் ‘ராஜாபாட்’ என்ற பாத்திரம் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. இவர் அந்தப் பாத்திரத்தின் பெயரையே அடைமொழியாகக் கொண்டு அழைக்கப்பட்ட நாடகத்துறைச் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையகக் கலையுலகம் அவரை ‘ராஜாபாட் ராஜப்பா’ என்று அன்புடன் […]

மேலும் பார்க்க

பல்துறை ஆளுமையாக விளங்கிய கவிஞர் கா.சி. ரெங்கநாதன் எனும் வீதிப்பாடலாசிரியர்

37 நிமிட வாசிப்பு

மலையக வீதிப்பாடல்களைத் தந்த கலைஞர்கள் வரிசையில், கண்டி உக்குவளைத் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றிய காசி ரெங்கநாதன் அவர்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. இவர் பாடலாசிரியர், பாடகர், நாடக இயக்குநர், நாடக நடிகர் எனப் பல்துறை ஆளுமையுடன் கலைத்துறையில் முத்திரை பதித்துள்ளார். குறிப்பாக, நாடற்றவர்களாக்கப்பட்டமை தொடர்பில் உருக்கமான பல பாடல்களைத் தந்துள்ளார். மலையக வீதிப்பாடலாசிரியர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்தவராகவும் அறியப்படுகின்றார். அவற்றில் பெரும்பாலானவை இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற தகவலும் உள்ளது. […]

மேலும் பார்க்க

நாவலப்பிட்டி மண்ணில் உருவான ஆளுமை: எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை

20 நிமிட வாசிப்பு

அறுபதுகளுக்குப் பிந்தைய நாவலப்பிட்டி மண்ணில் உருவான கவிதைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளையின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட மலையக வீதிப்பாடல்களை ஆராயும் போது, பெரியாம்பிள்ளை என்ற பெயர் தவிர்க்க முடியாததாகின்றது. எனினும், அவரது எழுச்சிப் பாடல்களில் பல எங்களிடம் இல்லாத நிலை, அவரைப் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள முடியாமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. அவரை நேரடியாகக் கண்டவர்கள், அவரது உடலியங்குச் சிறப்புகளைப் பற்றி […]

மேலும் பார்க்க

‘மலையக வீதிப்பாடல்கள்’ எண்ணக்கரு விருத்திக்கு வலிமை சேர்த்த இரு பெண்மணிகள்

17 நிமிட வாசிப்பு

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.” என பாரதி தனது பாஞ்சாலி சபதம் நவீன காவிய முகவுரையில் குறிப்பிடுகிறார். அதனை வலியுறுத்திய வாய்மொழிப் பாடல்களைப் பாடும் புலவர்கள் காலத்துக்குக் காலம் இருந்து வந்துள்ளார்கள். “இவ் வாய்மொழிப் பாடல்களின் மரபைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தும் போதுதான் அவற்றின் சிறப்பு, […]

மேலும் பார்க்க

மலையக வீதிப்பாடல்களின் தோற்றத்திற்கு அடித்தளமிட்ட மீனாட்சியம்மாள்

17 நிமிட வாசிப்பு

‘மலையகம்’ என்ற எண்ணக்கரு உருவாக்கத்திற்கு வலிமை சேர்ப்பதாக வீதிப்பாடல்களின் வகிபங்கு முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்துப்பதிவை பெறாத நிலையில், வாய்மொழிப் பாடல்களும் ‘மலையகம்’ எனும் சமூக உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டவைகளாகத் திகழ்கின்றன. ஏனைய சமூகத்தினரின் நாட்டார் பாடல்களில் இருந்து மலையக நாட்டார் பாடல்கள் உணர்ச்சியிலும் கருத்து நிலையிலும் வேறுபட்டு நிற்கின்றமை கவனத்திற்குரியதாகும். அதன் தொடர்ச்சி நிலையிலேயே அவலங்களையும் பாதிப்பு நிலைகளையும் விடுதலை வேட்கையையும் உட்சுமந்ததாக மலையக வீதிப்பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. ஆரம்பக் காலத்தில், பாரதியின் […]

மேலும் பார்க்க

மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் – அறிமுகம்

14 நிமிட வாசிப்பு

புலப்பெயர்வும் மலையகம் எனும் சமூக உருவாக்கமும் பூர்வீகத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு சமூகம், தன்னை ‘மலையகச் சமூகம்’ என அடையாளப்படுத்துவதில் தொடர்ந்து முனைப்பைக்காட்டி வந்துள்ளது. இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்வை, ‘புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம்’ என்ற அடிப்படையில், ஆழமாக அணுக வேண்டிய தேவை நிலவுகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தினதும், சுதந்திர இலங்கையினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய பணிகளில் பல தியாகங்களைச் செய்த சமூகமாக மலையகம் விளங்குகிறது. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்