காரைநகர்ச் சைவமகாசபை நூல்நிலையம் காரைநகர்ச் சைவமகாசபை பொன்விழா மலர் 1967 இல் வெளிவந்தது. இம்மலராசிரியராக வைத்தீஸ்வரக் குருக்கள் சிறப்புறப் பணியாற்றி சைவமகாசபையின் வரலாற்றை முடிந்தவரை பதிவுசெய்ய முயன்றுள்ளார். அவரது குறிப்புகளின்படி காரைநகர்ச் சைவமகாசபை 1926 ஆம் ஆண்டிலேயே 347 தமிழ்ப் புத்தகங்களும் 279 ஆங்கிலப் புத்தகங்களும் கொண்டதொரு நூலகத்தை தன்னகத்தே கொண்டிருந்துள்ளதென்ற செய்தியை அறியமுடிகின்றது. அந்த ஆண்டில் மாத்திரம் 126 புதிய புத்தகங்கள் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனவென்ற செய்தியும் காணக்கிடைக்கின்றது. 13 […]
தமிழில் : த. சிவதாசன் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பம் செழித்தோங்குவதற்கு, Yarl IT Hub எனும் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் The Yarl Geek Challenge (YGC) எனப்படும் போட்டி நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகும். இந் நிகழ்வு இலங்கை முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நூற்றுக்கணக்கான அறிவுடையோரை உருவாக்கித் தந்ததுடன் இத் துறையில் பிரபலமான பல நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள விசேடம் என்னவென்றால் YGC தனியே தமது […]
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய முறையிலான மழை வீழ்ச்சி அவதானிப்பு முறைகள் வடக்கு மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக மழை வீழ்ச்சி அவதானிப்பிற்கு என்று பல்வேறு வகைப்பட்ட உத்திகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் பல்வேறு வகையிலான கருவிகளைப் பயன்படுத்தி அவதானிப்புகளை மேற்கொண்டு இருப்பதை அறிய முடிகின்றது. அவர்கள் பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தி மழை வீழ்ச்சி அவதானிப்புகளை மேற்கொண்டு உள்ளார்கள். மரக்கால் மரக்கால் என்பது மிக […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு (CRIMINAL JUSTICE COMMISSION – சுருக்க எழுத்து : CJC) முன்னிலையில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர். அவ்வாணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த ரோஹண விஜயவீர தமது கட்சி ஏன் புதிய இடதுசாரி இயக்கம் (NEW LEFT MOVEMENT) ஒன்றை ஆரம்பித்தது என்பதற்கான விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டார். “பழைய இடதுசாரி இயக்கம் சோஷலிசப் […]
இலங்கைத் தமிழருக்கும், அவர்களின் வழிபாட்டுப் பாரம்பரியத்திற்கும் குறைந்தது 2500 வருட கால வரலாறு உள்ளது. இலங்கையின் பூர்வீகக் குடிகளான நாகர் நாகத்தையும், வேடர் முருகனையும், தமிழர் சிவனையும் வழிபட்டனர். இவ்வழிபாடுகள் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கற்கால மையங்களில் கிடைக்கப்பற்ற நாக, லிங்க, வேல் சின்னங்கள் ஆகியவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் பண்டுகாபய மன்னன் காலத்தில் நாக, சிவ வழிபாடுகள் இருந்தமை பற்றிய விபரங்கள் பண்டைய பாளி நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வரலாற்றுக்கு […]
எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான பயணம்’ (A Passage North) நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்தத் தமிழ் […]
அநேக பெயர்களுள்அவனது பெயரை மறந்துவிடுவோம் என அஞ்சுகிறேன்அவனை மறக்க நான் அஞ்சுகிறேன்மாரி மழையிலும், புயலிலும்எம் இதயக் காயங்கள் ஆறக்கூடும்என நான் அஞ்சுகிறேன்… – மஹவுட் தர்வீஷ் (பலஸ்தீனம்) – “இனப்படுகொலை என்பது பாரிய எண்ணிக்கையிலான கொலைகளை மட்டும் குறிப்பதல்ல; திட்டமிடப்பட்ட வகையில் சுவடிக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் கல்லறைகள் உட்பட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படுகொலைதான்.” – சேராபிம் […]
தெற்காசிய மரபிற் தோன்றிய மெய்யியல் மரபுகளையும், பிறபகுதிகளிற் தோன்றி இந்தியத்துணைக் கண்டத்திற் பரவிய மெய்யியல் மரபுகளையும், தன்னகத்தே உருவான மெய்யியல் மரபுகளையும் ஆவணமாக்கி வைத்துள்ள ஒரே தெற்காசிய மொழி தமிழ் என்பதில் யாதொரு ஐயப்பாடும் எழுதலுக்கு வாய்ப்பில்லை. தமிழ்மொழி, நீண்ட வலாற்றுத் தொடர்பையும் சமயநிலைப் பயன்பாடு மற்றும் அறிவுப்புலத் தொடர்பையும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டே பெற்றுவந்துள்ளமையால் அதுவொரு மெய்யியல்தளமாக அமைந்துள்ளது எனலாம். அவ்வாறான மெய்யியற் கருத்துக்களின் தாக்கம் இன்றளவும் தமிழ் […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல இலவசக் கல்வித் திட்டமும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர்களும் இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தோன்றிய கிராமப்புறத்தின் படித்த இளைஞர்களே, மக்கள் விடுதலை முன்னணியினைத் தோற்றுவித்தவர்கள் என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தொடர்பைச் சுட்டிக் காட்டியவர்கள் கல்வித் துறையில் ஏற்பட்ட இம்மாற்றங்களின் முக்கியத்துவத்தை சமூக வரலாற்று நோக்கு முறையில் விளக்குவதற்குத் தவறியுள்ளனர். இலங்கையில் கல்வி பரவலாக விரிவாக்கம் பெற்றமை […]
வடக்குப் பிராந்தியத்தின் புவியியல் அமைவிடம் அதன் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றது. அந்த வகையில் பின்வரும் காரணிகள் வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றன. 1. தீபகற்ப தோற்றப்பாடு : வடக்குப் பகுதி மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் அரபிக் கடல் உள்ளது. வடக்கு எல்லை பாக்கு ஜலசந்தி, கிழக்கு எல்லை வங்காள விரிகுடாவாக உள்ளது. வடக்கு மாகாணத்தின் தீபகற்ப நிலவமைப்பு காரணமாக வடக்கு பிராந்தியத்தின் வளி வெப்பநிலை, கடல் நீரின் அருகாமையால் […]