Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

அல்லைத்திட்டம் இத்திட்டமே திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது திட்டமிட்ட விவசாயக் குடியேற்றமாகும். இது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். மகாவலி ஆற்றை மறித்து வாய்க்கால் மூலம் திருப்பி அல்லைக் குளத்தை நிரப்பி அதனோடு சூழவுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் கூட இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 இல் வாய்க்கால் வெட்டப்பட்டு தாழ்நிலமாக இருந்த […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – மயிலிட்டி

9 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். (படம்-1) நிலப்படத்தில் உள்ளபடி மயிலிட்டிக் கோவிற்பற்று, ஏழு துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. இவை மயிலிட்டி, பலாலி, வயாவிளான், வறுத்தலைவிளான், தையிட்டி, வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை என்பன.  எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி மயிலிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு […]

மேலும் பார்க்க

இளமையைத் தொலைக்கும் இளையோர்: இனிமையின் விலை

17 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் ‘இளையோர்’ என்ற கருத்து சமூக மற்றும் பண்பாட்டு ஆய்வில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலகம் மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வருவதால், இளையோர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மிகவும் சிக்கலானதாகி வருகின்றன. போரின் பின்னரான ஈழத்தமிழ்ச் சமூகத்தைப் புரிந்துகொள்வதாயின், இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் இயக்கவியலைப் புரிந்துகொள்வது முக்கியம். நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தை நடாத்திய ஒரு சமூகத்தின் மையமாக, இயங்கியலாக, ஆதாரசுருதியாக சில தசாப்தங்கள் இளையோர் […]

மேலும் பார்க்க

தேசியத் தரு தழைக்க உதவிய உரம்

12 நிமிட வாசிப்பு

ஆங்கிலக் கல்வியும் அறிஞர் ஆய்வுகளும் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம் தென் ஆசியாவின் எதிர்கால அரசியல் அமைப்புகளை உருவாக்க உழைத்த சக்திகள் எழுந்த காலம். இவற்றுள் எவை பெருவெற்றி பெற்று மேலோங்கும் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் நிர்ணயிக்கப்பட்டது. இப்படியான சக்திகளுள் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது இன – மத அடிப்படையிலான சக்தியாகும். இது ஒரு புறம் இனப்பற்றையும் மறுபுறம் இனவெறுப்பையும் எழுச்சிபெறச் செய்து, பிரித்தானியர் நாட்டைவிட்டுச் சென்றதும் […]

மேலும் பார்க்க

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 5

10 நிமிட வாசிப்பு

கிழக்கு மாகாணத்தின் மாகாண மட்டத்திலான நீர் வளங்கள்  1.2.2.1 மட்டக்களப்பு மாவட்டம்  மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பரந்த கடற்கரை எல்லை மற்றும் சிறப்பான நீரியல் அமைப்புகளைக் கொண்டது. இதன் பரப்பளவு 2,854 சதுர கிலோமீட்டராகும்; இது கடலோரச் சமவெளிகளாகவும் உள்நாட்டுப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுச் சராசரி மழைப்பொழிவு 1,250 –1,750 மி.மீ ஆகவும், வெப்பநிலை வீச்சு 25°C–32°C ஆகவும் உள்ளன. வடகிழக்கு பருவக்காற்றுக் (அக்டோபர்–ஜனவரி) […]

மேலும் பார்க்க

கூத்து இன்றுவரை கிராமங்களில் நிலைபெற்றிருப்பதற்கான காரணங்கள் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

கூத்தின் நிலைபேற்றுக்கான பிரதானமான காரணங்களைத் தந்து, அவற்றுள் ஐந்தினைச் சென்றமுறை விளக்கி இருந்தேன். இன்னும் சில காரணங்களும் உண்டு. அக்காரணங்களையும் இங்கு பார்ப்போம். மீதிக் காரணங்களை இந்த கட்டுரையில் பின்வருமாறு நோக்குவோம்: 6. திருமணத்திற்கு மாப்பிள்ளைகளை, பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்தல்  தமிழரிடையே மாப்பிள்ளை, பெண் தெரிவு பல வகைகளில் நடைபெறுவது மரபு. தமிழரின் திருமண முறைகள் பற்றி பலர் ஆராய்ந்து எழுதியும் உள்ளனர். இந்த மரபில் கூத்தரங்கின் பணியாது? கூத்தரங்கு […]

மேலும் பார்க்க

மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் – அறிமுகம்

14 நிமிட வாசிப்பு

புலப்பெயர்வும் மலையகம் எனும் சமூக உருவாக்கமும் பூர்வீகத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு சமூகம், தன்னை ‘மலையகச் சமூகம்’ என அடையாளப்படுத்துவதில் தொடர்ந்து முனைப்பைக்காட்டி வந்துள்ளது. இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்வை, ‘புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம்’ என்ற அடிப்படையில், ஆழமாக அணுக வேண்டிய தேவை நிலவுகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தினதும், சுதந்திர இலங்கையினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய பணிகளில் பல தியாகங்களைச் செய்த சமூகமாக மலையகம் விளங்குகிறது. […]

மேலும் பார்க்க

நீ மயங்குவதேன்: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம்

14 நிமிட வாசிப்பு

“எவன் குற்றமற்றவனாதற்குக் கற்கிறானோ எவன் தூய அகத்தினனாதற்கு முயல்கிறானோ எவன் சாந்தியும் ஞானமும் சான்றாக நோக்குந் தன்மையும் பொருந்திய மனதை அடைவதை இலக்ஷியமாகக் கொண்டிருக்கிறானோ அவன் மனிதர் செய்யக்கூடிய செயல்கள் எல்லாவற்றினும் மேலான செயலைச் செய்து கொண்டிருக்கிறான். அவனது அச்செயலின் பயன் ஒழுங்கும் இன்பமும் அழகும் வாய்ந்த ஒரு வாழ்க்கையாக அவன் பால் அமையும்.” (ஜேம்ஸ் ஆலன்) அகவிடுதலை இல்லாமல் புறவிடுதலை சாத்தியமில்லை. புறக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெறுதல், அடக்கப்பட்ட வாழ்விலிருந்து வெளியேறுதல், […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் அரசுகள் தேசங்களாக (Nation) தம்மை மாற்றிக்கொள்ள முயல்கின்றன. அரசியல், பண்பாட்டு விருத்தி, நாட்டை புவியியல் ரீதியில் ஒன்றிணைத்தல், பொருளாதார விருத்தி, கல்வி விருத்தி என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்புதல் (Nation Building) என்ற தேவையை நோக்கியனவே. ஒரு தேசியக்கொடி, ஒரு தேசியகீதம், வரலாறு, பள்ளி மாணவர்களுக்கான தேசப்படப் புத்தகங்கள் என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிக்காகவே நடைபெறுகின்றன. இத்தாலியை ஒன்றிணைத்த பின்னர் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் ‘நான்காவது உலகம்’ (The Fourth world), அவ்வுலகிற்குள் சிறைப்பட்டிருக்கும் அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என்ற இரு கருத்தாக்கங்கள் உலகின் புவி அரசியலை (Geo – Politics) புரட்சிகரமான புதிய கோணத்தில் நோக்குவதற்கு உதவிய எண்ணக்கருக்களாகும். மிக்சிக்கன் பல்கலைக்கழகம் (1970-1977), பேர்க்லி பல்கலைக்கழகம் (1977-2009) ஆகிய இரு பல்கலைக்கழகங்களிலும் புவியியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் பெர்னாட் நைட்ஸ்மன் (1941-2000) நான்காவது […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்