ஆங்கில மூலம்: வி.எஸ். கணேசலிங்கம் சித்திரவதைகளிலிருந்தான விடுதலை, சட்டத்தின் சமமான பாதுகாப்பு, தன்னிச்சையான கைதும் சட்டவிரோத தடுப்புக்காவலும் ஆகியவற்றிலிருந்து விடுதலை, நியாயமான விசாரணைக்கான உரிமை, குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்று கருதப்படுவதன் அவசியம், பேச்சுரிமை, ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான மக்களுக்கிருக்கும் உரிமை என்பவை, நமது 1978 அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட (மக்களது) அடிப்படை உரிமைகளில் அடங்குகின்றன. சட்டப் பிரிவு 13 (1) ஆனது, சட்டத்தால் […]