யாழ்ப்பாணக் கோட்டைத் தொல்லியல் ஆய்வுகள் யாழ்ப்பாணக் கோட்டை மேலாய்வுகள் 2011-12 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அழிவடைந்த யாழ்ப்பாணக் கோட்டையை மீள்புனரமைப்புச் செய்துவரும் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 62 ஏக்கர் பரப்பில் அமைந்த கோட்டையின் பெரும்பகுதி தொல்லியல் மேலாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றுள் அழிவடைந்த கிறிஸ்தவத் தேவாலயம், இராணி மாளிகை, ஆயுதக் களஞ்சியங்கள், பீரங்கித் தளங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், காவல் மையங்கள் என்பன […]