II பெருங்கற் புதையல் நிவேதனப் பொருட்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் காட்டும் மக்களின் வாழ்வியல் ஆதி-இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டின் அச்சாணிகளாக ஈமச் சின்னங்கள், குடியிருப்புகள், குளங்கள், வயல்கள் என நான்கு அம்சங்கள் விளங்கின. மக்கள் தமது வசிப்பிடங்களைச் சிறப்பாக அமைப்பதைக் காட்டிலும் ஈமச் சின்னங்களைச் சிறப்பாக அமைப்பதிலேயே அதிக கவனம் காட்டியதனால், இவர்கள் அமைத்த ஈமச் சின்னங்களில் இறந்தோருக்கு அளித்த பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெருங்கற் புதையல்களில் காணப்படும் நிவேதன, […]