தூய இலட்சியங்களினாலும், தர்ம போதனைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும். ஆனாலும் கூட, யானையைக் கூறுபோட்டுச் சிங்கங்கள் உண்ணத் தவறுவதில்லை. “எதனையும் அரசியலாகப் பார்க்க வேண்டும்;அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே” அரசியல் என்பது நலன்களைக் கையாள்வது பற்றிய இயங்கியல் ஆகும். உறவுகள் நலன்களால் ஆனவை. நலன்கள் கொடுக்கல், வாங்கல் அல்லது ஆக்கிரமிப்பாலானவை. தாய்க்கும் – பிள்ளைக்கும், காதலனுக்கும் […]